Roman script

Singer : T. M. Soundararajan

Music by : K. V. Mahadevan

Male Part

Thirumaal perumaikku nigaraedhu…

Thirumaal perumaikku nigaraedhu

Undhan thiruvadi nizhalukku inaiyaedhu

Perumaanae undhan thirunaamam

Pathu peyargalil vilangum avathaaram

Male Part

Thirumaal perumaikku nigaraedhu…

Male Part

Kadal naduvae veezhndha sadhur vaedham

Thannai kaappadharkkae konda avathaaram

Macha avathaaram

Male Part

Asurargal kodumaikku mudivaagum

Engal achudhanae undhan avathaaram

Koorma avathaaram

Male Part

Boomiyai kaathida oru kaalam

Nee punaidhadhu mattroru avathaaram

Varaaga avathaaram

Male Part

Naaraayanaa ennum thiru naamam

Nilai naattida innum oru avathaaram

Narasimma avathaaram

Male Part

Maavali siram thannil kaal vaithu

Indha mannum vinnum alandha avathaaram

Vaamana avathaaram

Male Part

Thaai thandhai sollae uyar vaedham

Endru saattriyadhum oru avathaaram

Parasuraamar avathaaram

Male Part

Oruvanukku ulagil oru thaaram

Enum uyarvinai kaattiya avathaaram

Raama avathaaram

Male Part

Ragu kulam kondadhu oru raaman

Pinbu yedhu kulam kandadhu pala raaman

Balaraaman

Male Part

Arasu murai vazhi neri kaakka

Nee adainthathu innoru avathaaram

Kannan avathaaram

Male Part

Vidhi nadandhadhena madhi mudindhadhena

Vinaiyin payanae uruvaaga

Nilai marandhavarum neri izhandhavarum

Unarum vannam thelivaaga

Innal ozhithu puvi kaakka

Nee edukka vendum oru avathaaram

Kalki avathaaram

Male Part

Thirumaal perumaikku nigaraedhu

Undhan thiruvadi nizhalukku inaiyaedhu

Thirumaal perumaikku nigaraedhu

Nigaraedhu… nigaraedhu…

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : திருமால் பெருமைக்கு நிகரேது.....

திருமால் பெருமைக்கு நிகரேது.....

உந்தன் திருவடி நிழலுக்கு இணையேது

பெருமானே உந்தன் திருநாமம்

பத்து பெயர்களில் விளங்கும் அவதாரம்

ஆண் : திருமால் பெருமைக்கு நிகரேது.....

ஆண் : கடல் நடுவே வீழ்ந்த சதுர்வேதம்

தன்னைக் காப்பதற்கே கொண்ட அவதாரம்

மச்ச அவதாரம்

ஆண் : அசுரர்கள் கொடுமைக்கு முடிவாகும்

எங்கள் அச்சுதனே உந்தன் அவதாரம்

கூர்ம அவதாரம்

ஆண் : பூமியைக் காத்திட ஒரு காலம்

நீ புனைந்தது மற்றொரு அவதாரம்

வராக அவதாரம்

ஆண் : நாராயணா என்னும் திருநாமம்

நிலை நாட்டிட இன்னும் ஒரு அவதாரம்

நரசிம்ம அவதாரம்

ஆண் : மாவலிச் சிரம் தன்னில் கால் வைத்து

இந்த மண்ணும் விண்ணும் அளந்த அவதாரம்

வாமன அவதாரம்

ஆண் : தாய் தந்தை சொல்லே உயர் வேதம்

என்று சாற்றியதும் ஒரு அவதாரம்

பரசுராம அவதாரம்

ஆண் : ஒருவனுக்கு உலகில் ஒரு தாரம்

எனும் உயர்வினைக் காட்டிய அவதாரம்

ராம அவதாரம்

ஆண் : ரகு குலம் கொண்டது ஒரு ராமன்

பின்பு யது குலம் கண்டது பலராமன்

பலராமன்

ஆண் : அரசு முறை வழிநெறி காக்க

நீ அடைந்தது இன்னொரு அவதாரம்

கண்ணன் அவதாரம்

ஆண் : விதி நடந்ததென மதி முடிந்ததென

வினையின் பயனே உருவாக

நிலை மறந்தவரும் நெறி இழந்தவரும்

உணரும் வண்ணம் தெளிவாக

இன்னல் ஒழித்து புவி காக்க

நீ எடுக்க வேண்டும் ஒரு அவதாரம்

கல்கி அவதாரம்

ஆண் : திருமால் பெருமைக்கு நிகரேது.....

உந்தன் திருவடி நிழலுக்கு இணையேது

திருமால் பெருமைக்கு நிகரேது.....

நிகரேது.....நிகரேது.....

Song information

Singer: T. M. Soundararajan

Music by: K. V. Mahadevan

Release information: From Thirumal Perumai (1968) · Lyricist: Kannadasan

Explore this song