Roman script

Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female Part

Nil angae…..

Nil angae nil angae nil angae

Enna un idhayam enna un thiyaagam

Engae selgindraai

Enna un idhayam enna un thiyaagam

Engae selgindraai

Female Part

Ini aval ullam thudittidum velai

Ingae nirkkindraai…aa…aaa…aaa…aaiii…

Engae selgindraai

Female Part

Karunaiyudan thaali

Kazhuthai thazhuvi nirkkum

Kaigalil pon valaigal

Kaarigaiyai thazhuvum

Aadai aval azhagai

Anbodu thazhuvi nirkkum

Aadai aval azhagai

Anbodu thazhuvi nirkkum

Arivirundhum unnidathil

Andha karunai siridhum illai

Engae selgindraai

Female Part

Unbadharkku thandhaalum

Udai uduthi vittaalum

Alli koduthaalum

Archanaigal seidhaalum

Athanaikkum melae

Pathinikku thaevai ondru

Athanaikkum melae

Pathinikku thaevai ondru

Ariyaaiyo… ariyaaiyo padithirundhu

Ariyum ullam unakkillaiyo

Engae selgindraai

Female Part

Allum pagalum

Arugae thunaiyirundhu

Sollaal udalaal uyiraal suvai koduthu

Sellum varaiyilum serndhirukkum

Perumaiyai thaan

Thiyaagam enbaar thiyaagam enbaar

Maalai mattum sootti vittaal

Thiyaagiyaaga mudiyumaa

Engae selgindraai

Female Part

Enna un idhayam enna un thiyaagam

Engae selgindraai

Female Part

Kannizhandha mangaikku

Kanneer perukkeduthaal…

Kana pozhudhil un thiyaagam

Karugi vidum maravaadhae…

Moodi kidakkindra mana kadhavai

Thirandhu vidu…

Thirandhu kidakkindra

Kadhavugalai moodi vidu…

Female Part

Manam kulira paadi vidu

Mangaikku vaazhvu kodu

Manidha vadivilae

Dheivamaai maari vidu…

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : நில் அங்கே.......

நில் அங்கே நில் அங்கே நில் அங்கே

என்ன உன் இதயம் என்ன உன் தியாகம்

எங்கே செல்கின்றாய்

என்ன உன் இதயம் என்ன உன் தியாகம்

எங்கே செல்கின்றாய்

பெண் : இனி அவள் உள்ளம் துடித்திடும் வேளை

எங்கே நிற்கின்றாய்.....ஆஆ...ஆஅ...ஆஅ.....அஆய்

எங்கே செல்கின்றாய்

பெண் : கருணையுடன் தாலி

கழுத்தை தழுவி நிற்கும்

கைகளில் பொன் வளைகள்

காரிகையைத் தழுவும்

ஆடை அவள் அழகை

அன்போடு தழுவி நிற்கும்

அறிவிருந்தும் உன்னிடத்தில்

அந்தக் கருணை சிறிதும் இல்லை

எங்கே செல்கின்றாய்

பெண் : உண்பதற்கு தந்தாலும்

உடை உடுத்தி விட்டாலும்

அள்ளிக் கொடுத்தாலும்

அர்ச்சனைகள் செய்தாலும்

அத்தனைக்கும் மேலே

பத்தினிக்குத் தேவையொன்று

அறியாயோ......அறியாயோ படித்திருந்தும்

அறியும் உள்ளம் உனக்கில்லையோ

எங்கே செல்கின்றாய்

பெண் : அல்லும் பகலும்

அருகே துணையிருந்து

சொல்லால் உடலால் உயிரால்

சுவை கொடுத்து

செல்லும் வரையிலும் சேர்ந்திருக்கும்

பெருமையைத்தான்

தியாகம் என்பார்

மாலை மட்டும் சூட்டிவிட்டால்

தியாகியாக முடியுமா

எங்கே செல்கின்றாய்

பெண் : என்ன உன் இதயம் என்ன உன் தியாகம்

எங்கே செல்கின்றாய்

பெண் : கண்ணிழந்த மங்கைக்குக்

கண்ணீர் பெருக்கெடுத்தால்.....

கணப் பொழுதில் உன் தியாகம்

கருகி விடும் மறவாதே.....

மூடிக் கிடக்கின்ற மனக் கதவைத்

திறந்து விடு....

திறந்து கிடக்கின்ற

கதவுகளை மூடி விடு....

பெண் : மனங்குளிரப் பாடி விடு

மங்கைக்கு வாழ்வு கொடு

மனித வடிவினிலே

தெய்வமாய் மாறி விடு......

Song information

Singer: P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Kumudham (1961) · Lyricist: Kannadasan

Explore this song