Roman script
Singers : T.M. Soundararajan and P. Susheela Music by : M.S. Viswanathan Female Part Malarndhu malaraadha Paadhi malar polae Valarum vizhi vannamae Female Part Vandhu vidindhum Vidiyaatha kaalai pozhuthaaga Vilaindha kalai annamae Female Part Nadhiyil vilaiyaadi Kodiyil thalai seevi Nadantha ilam thendralae Female Part Valar podhigai Malai thondri madurai Nagar kandu pozhindha Thamizh mandramae Male Part Malarndhu malaraadha Paadhi malar polae Valarum vizhi vannamae Male Part Vandhu vidindhum Vidiyaatha kaalai pozhuthaaga Vilaindha kalai annamae Male Part Nadhiyil vilaiyaadi Kodiyil thalai seevi Nadantha ilam thendralae Male Part Valar podhigai Malai thondri madurai Nagar kandu pozhindha Thamizh mandramae Male Part Yaanai padai kondu Senai pala vendru Aala pirandhaayada Puvi aala pirandhaayada Male Part Athai magalai manamkondu Ilamai vazhi kandu Vaazha pirandhaayada Vaazha pirandhaayada Male Part
{ Athai magalai manamkondu
Ilamai vazhi kandu } (2)
Vaazha pirandhaayada
Female Part
Thanga kadiyaaram
Vaira maniyaaram
Thandhu manam pesuvaar
Porul thandhu
Manam pesuvaar
Female Part
Maman thangai magalaana
Mangai unakaaga
{ Ulagai vilai pesuvaar } (2)
Female Part
{ Maman thangai magalaana
Mangai unakaaga } (2)
Ulagai vilai pesuvaar
Male Part
Nadhiyil vilaiyaadi
Kodiyil thalai seevi
Nadantha ilam thendralae
Male Part
Valar podhigai
Malai thondri madurai
Nagar kandu pozhindha
Thamizh mandramae
Female Part
Siragil enai moodi
Arumai magal polae
Valartha kadhai sollava
Female Part
Kanavil ninaiyaatha
Kaalam idai vandhu
{ Piritha kadhai sollava } (2)
Male Part
Kannil mani polae
Maniyin nizhal polae
Kalandhu pirandhomada
Male Part
Indha mannum kadal vaanum
Maraindhu mudinthaalum
Maraka mudiyaathada
Uravai pirika mudiyaathada
Female Part
Anbae aariraaraaro
Aariraaraaro aariraaraariro
{ Anbae aariraaraariro } (2)தமிழ்
பாடகி : பி. சுஷீலா
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
பெண் : மலர்ந்து
மலராத பாதி மலர்
போல வளரும் விழி
வண்ணமே
பெண் : வந்து விடிந்தும்
விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே
பெண் : நதியில் விளையாடி
கொடியில் தலை சீவி நடந்த
இளம் தென்றலே
பெண் : வளர் பொதிகை
மலை தோன்றி மதுரை
நகர் கண்டு பொலிந்த
தமிழ் மன்றமே
ஆண் : மலர்ந்து
மலராத பாதி மலர்
போல வளரும் விழி
வண்ணமே
ஆண் : வந்து விடிந்தும்
விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே
ஆண் : நதியில் விளையாடி
கொடியில் தலை சீவி நடந்த
இளம் தென்றலே
ஆண் : வளர் பொதிகை
மலை தோன்றி மதுரை
நகர் கண்டு பொலிந்த
தமிழ் மன்றமே
ஆண் : யானை படை
கொண்டு சேனை பல
வென்று ஆளப் பிறந்தாயடா
புவி ஆளப் பிறந்தாயடா
ஆண் : அத்தை மகளை
மணம் கொண்டு இளமை
வழி கண்டு வாழப் பிறந்தாயடா
வாழப் பிறந்தாயடா
ஆண் : { அத்தை மகளை
மணம் கொண்டு இளமை
வழி கண்டு } (2)
வாழப் பிறந்தாயடா
பெண் : தங்கக் கடியாரம்
வைர மணியாரம் தந்து
மணம் பேசுவார் பொருள்
தந்து மணம் பேசுவார்
பெண் : மாமன் தங்கை
மகளான மங்கை உனக்காக
{ உலகை விலை பேசுவார் } (2)
பெண் : { மாமன் தங்கை
மகளான மங்கை உனக்காக } (2)
உலகை விலை பேசுவார்
ஆண் : நதியில் விளையாடி
கொடியில் தலை சீவி நடந்த
இளம் தென்றலே
ஆண் : வளர் பொதிகை
மலை தோன்றி மதுரை
நகர் கண்டு பொலிந்த
தமிழ் மன்றமே
பெண் : சிறகில் எனை
மூடி அருமை மகள்
போல வளர்த்த கதை
சொல்லவா
பெண் : கனவில் நினையாத
காலம் இடை வந்து
{ பிரித்த கதை சொல்லவா } (2)
ஆண் : கண்ணில் மணி
போல மணியின் நிழல்
போல கலந்து பிறந்தோமடா
ஆண் : இந்த மண்ணும்
கடல் வானும் மறைந்து
முடிந்தாலும் மறக்க
முடியாதடா உறவை
பிரிக்க முடியாதடா
பெண் : அன்பே ஆரிராராரோ
ஆரிராராரோ ஆரிராராரிரோ
அன்பே ஆரிராராரிரோ
அன்பே ஆரிராராரிரோSong information
Singers: T.M. Soundararajan and P. Susheela
Music by: M.S. Viswanathan
Release information: From Pasamalar (1961) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T.M. Soundararajan and P. Susheela
- Film / album: Pasamalar
- Composer: M.S. Viswanathan