Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Kungumathai azhikkavaa Koondhal vazham kalaikkavaa Manjalaiyum izhakkavaa Mangala naan kazhattravaa Female Part Kungumathai azhikkavaa Koondhal vazham kalaikkavaa Manjalaiyum izhakkavaa Mangala naan kazhattravaa Kungumathai azhikkavaa Female Part Naalum kazhindhadhendraar Nadantha kadhai mudithathendraar Naalum kazhindhadhendraar Nadantha kadhai mudithathendraar Vaazha veitha aiyaa neer Maraindhu vitteer engindraar Vaazha veitha aiyaa neer Maraindhu vitteer engindraar Edhai enni kungumam veippen Naan enna solli poovai mudippen Female Part Kungumathai azhikkavaa Koondhal vazham kalaikkavaa Manjalaiyum izhakkavaa Mangala naan kazhattravaa Kungumathai azhikkavaa Female Part Petravarai naan izhandhu Paedhalithu nirrkayilae Petravarai naan izhandhu Paedhalithu nirrkayilae Uttravarum ooraarum Udhavaadha sagunamendraar Uttravarum ooraarum Udhavaadha sagunamendraar Paavam endru mana muditheerae Naan paavam endru mana muditheerae Andha paavathinaal maraindhu vitteeroo Hooo hoooo ooo Female Part Kungumathai azhikkavaa Female Part Naanarindhu seidhathillai Naan purintha kuttramillai Naanarindhu seidhathillai Naan purintha kuttramillai Penn pirandha velaiyilae Pirandhu vantha paavamendraar Penn pirandha velaiyilae Pirandhu vantha paavamendraar Padaithavanin kuttramallava Idhu padaithavanin kuttramallava Andha paavi seidha paavam allavaa Aaa…aaa…aaa…. Female Part Kungumathai azhikkavaa Koondhal vazham kalaikkavaa Manjalaiyum izhakkavaa Mangala naan kazhattravaa Kungumathai azhikkavaa
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : குங்குமத்தை அழிக்கவா கூந்தல் வளம் கலைக்கவா மஞ்சளையும் இழக்கவா மங்கல நாண் கழற்றவா பெண் : குங்குமத்தை அழிக்கவா கூந்தல் வளம் கலைக்கவா மஞ்சளையும் இழக்கவா மங்கல நாண் கழற்றவா குங்குமத்தை அழிக்கவா பெண் : நாளும் கழிந்ததென்றார் நடந்த கதை முடிந்ததென்றார் நாளும் கழிந்ததென்றார் நடந்த கதை முடிந்ததென்றார் வாழ வைத்த ஐயா நீர் மறைந்து விட்டீர் என்கின்றார் வாழ வைத்த ஐயா நீர் மறைந்து விட்டீர் என்கின்றார் எதை எண்ணி குங்குமம் வைப்பேன் நான் என்ன சொல்லிப் பூ முடிப்பேன் பெண் : குங்குமத்தை அழிக்கவா கூந்தல் வளம் கலைக்கவா மஞ்சளையும் இழக்கவா மங்கல நாண் கழற்றவா குங்குமத்தை அழிக்கவா பெண் : பெற்றவரை நானிழந்து பேதலித்து நிற்கையிலே பெற்றவரை நானிழந்து பேதலித்து நிற்கையிலே உற்றவரும் ஊராரும் உதவாத சகுனமென்றார் உற்றவரும் ஊராரும் உதவாத சகுனமென்றார் நான் பாவமென்று மணமுடித்தீரோ அந்தப் பாவத்தினால் மறைந்து விட்டீரோ ஹோ ஹோ ஓ பெண் : குங்குமத்தை அழிக்கவா பெண் : நானறிந்து செய்ததில்லை நான் புரிந்த குற்றமில்லை நானறிந்து செய்ததில்லை நான் புரிந்த குற்றமில்லை பெண் பிறந்த வேளையிலே பிறந்து வந்த பாவமென்றால் பெண் பிறந்த வேளையிலே பிறந்து வந்த பாவமென்றால் இது படைத்தவனின் குற்றமல்லவா அந்தப் பாவி செய்த பாவமல்லவா ஆஆ......ஆஅ......ஆஅ..... பெண் : குங்குமத்தை அழிக்கவா கூந்தல் வளம் கலைக்கவா மஞ்சளையும் இழக்கவா மங்கல நாண் கழற்றவா குங்குமத்தை அழிக்கவா
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Panithirai (1961) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Panithirai
- Composer: K. V. Mahadevan