Roman script

Singer : Vijay Jesudas

Music by : Iniyavan

Lyrics by : Vairamuthu

Male Part

Jenmam niraindhadhu sendravar vaazhga

Sindhai kalangida vandhavar vaazhga

Neeril midhandhidum kangalum kaaiga

Nimmadhi nimmadhi ivvidam soozhga

Male Part

Jananamum boomiyil pudhiyadhu illai

Maranathai pol oru pazhaiaydhum illai

Irandumillaavidil iyarkaiyum illai

Iyarkaiyin aanaithaaan gyaanathin ellai

Male Part

Paasam ulaviya kangalum engae?

Paainth thulaviya kaigalum engae?

Dhesam alaviya kaalgalum engae?

Thee undathendrathu saambalum ingae

Male Part

Kannil therindhadhu kaatrudan poga

Mannil pirandhadhu mannudal serga

Elumbhu sahdai konda uruvangal poga

Echangalaal andha innuyir vaazhga

Male Part

Pirappu illamalae naal ondru illai

Irappu illaamalum naalondru illai

Nesathinaal varum ninaivugal thollai

Marathiyai pol oru maamarundhillai

Male Part

Kadal thodum aarugal kalanguvathillai

Tharai thodum thaaraigal azhuvadhum illai

Nadhi mazhai pondrathae vidhiyendru kandum

Madhi konda maanudar mayanguvadhenna

Male Part

Maranathinaal sila kobangal theerum

Maranathinaal sila saabangal theerum

Vaedham sollaadhadhai maranangal koorum

Vidhai ondru veezhndhida chedivandhu serum

Male Part

Boomikku naan yaathirai vandhom

Yaathirai keetroli munn nithirai kondom

Nithirai povadhu niyadhi endraalum

Yaathirai enbadhu thodarkadhaiyaagum

Male Part

Thendralin poongaram thendidum podhum

Sooriya keetroli thondridum podhum

Mazhalaiyin thaen mozhi seviyurum podhum

Maandavar emmudan vaazhndhida koodum

Male Part

Maandavar swaasangal kaatrudan serga

Thooyavar kannoli sooriyin serga

Boothangal aindhilum pon udal serga

Ponavar punniyam emmudan serga

Ponavar punniyam emmudan serga

தமிழ்

பாடகர் : விஜய் யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : இனியவன்

பாடல் ஆசிரியர் : வைரமுத்து

ஆண் : ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க

சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க

நீரில் மிதந்திடும் கண்களும் காய்க

நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!

ஆண் : ஜனனமும் பூமியில் புதியது இல்லை

மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை

இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை

இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை

ஆண் : பாசம் உலாவிய கண்களும் எங்கே?

பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?

தேசம் அளாவிய கால்களும் எங்கே?

தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே

ஆண் : கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக

மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க

எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக

எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க

ஆண் : பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை

இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை

நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை

மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை

ஆண் : கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை

தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை

நதி மழை போன்றதே விதியென்று கண்டும்

மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன

ஆண் : மரணத்தினால் சில கோபங்கள் தீரும்

மரணத்தினால் சில சாபங்கள் தீரும்

வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்

விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும்

ஆண் : பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்

யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்

நித்திரை போவது நியதி என்றாலும்

யாத்திரை என்பது தொடர்கதையாகும்

ஆண் : தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்

சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்

மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்

மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்

ஆண் : மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க

தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க

பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க

போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க

போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க

Song information

Singer: Vijay Jesudas

Music by: Iniyavan

Lyrics by: Vairamuthu

Release information: From Naatpadu Theral 2 (2022) · Singer: Vijay Jesudas · Lyricist: Vairamuthu · Music: Iniyavan

Explore this song