Roman script
Singer : Vijay Jesudas Music by : Iniyavan Lyrics by : Vairamuthu Male Part Jenmam niraindhadhu sendravar vaazhga Sindhai kalangida vandhavar vaazhga Neeril midhandhidum kangalum kaaiga Nimmadhi nimmadhi ivvidam soozhga Male Part Jananamum boomiyil pudhiyadhu illai Maranathai pol oru pazhaiaydhum illai Irandumillaavidil iyarkaiyum illai Iyarkaiyin aanaithaaan gyaanathin ellai Male Part Paasam ulaviya kangalum engae? Paainth thulaviya kaigalum engae? Dhesam alaviya kaalgalum engae? Thee undathendrathu saambalum ingae Male Part Kannil therindhadhu kaatrudan poga Mannil pirandhadhu mannudal serga Elumbhu sahdai konda uruvangal poga Echangalaal andha innuyir vaazhga Male Part Pirappu illamalae naal ondru illai Irappu illaamalum naalondru illai Nesathinaal varum ninaivugal thollai Marathiyai pol oru maamarundhillai Male Part Kadal thodum aarugal kalanguvathillai Tharai thodum thaaraigal azhuvadhum illai Nadhi mazhai pondrathae vidhiyendru kandum Madhi konda maanudar mayanguvadhenna Male Part Maranathinaal sila kobangal theerum Maranathinaal sila saabangal theerum Vaedham sollaadhadhai maranangal koorum Vidhai ondru veezhndhida chedivandhu serum Male Part Boomikku naan yaathirai vandhom Yaathirai keetroli munn nithirai kondom Nithirai povadhu niyadhi endraalum Yaathirai enbadhu thodarkadhaiyaagum Male Part Thendralin poongaram thendidum podhum Sooriya keetroli thondridum podhum Mazhalaiyin thaen mozhi seviyurum podhum Maandavar emmudan vaazhndhida koodum Male Part Maandavar swaasangal kaatrudan serga Thooyavar kannoli sooriyin serga Boothangal aindhilum pon udal serga Ponavar punniyam emmudan serga Ponavar punniyam emmudan serga
தமிழ்
பாடகர் : விஜய் யேசுதாஸ் இசை அமைப்பாளர் : இனியவன் பாடல் ஆசிரியர் : வைரமுத்து ஆண் : ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க நீரில் மிதந்திடும் கண்களும் காய்க நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க! ஆண் : ஜனனமும் பூமியில் புதியது இல்லை மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை ஆண் : பாசம் உலாவிய கண்களும் எங்கே? பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே? தேசம் அளாவிய கால்களும் எங்கே? தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே ஆண் : கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க ஆண் : பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை ஆண் : கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை நதி மழை போன்றதே விதியென்று கண்டும் மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன ஆண் : மரணத்தினால் சில கோபங்கள் தீரும் மரணத்தினால் சில சாபங்கள் தீரும் வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும் விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும் ஆண் : பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம் யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம் நித்திரை போவது நியதி என்றாலும் யாத்திரை என்பது தொடர்கதையாகும் ஆண் : தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும் சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும் மழலையின் தேன்மொழி செவியுறும் போதும் மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும் ஆண் : மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க
Song information
Singer: Vijay Jesudas
Music by: Iniyavan
Lyrics by: Vairamuthu
Release information: From Naatpadu Theral 2 (2022) · Singer: Vijay Jesudas · Lyricist: Vairamuthu · Music: Iniyavan
Explore this song
- Singer: Vijay Jesudas
- Film / album: Naatpadu Theral 2
- Composer: Iniyavan
- Lyricist: Vairamuthu