Roman script
Singer : K. J. Yesudas Music by : Raveendran Male Part Aah….aahhhh….aahh…… Male Part Ezhisai geedhamae enakoru jeevan neeyae Vaazhum kaalam yaavum unakaaga naan dhaan Kaaviya veenaiyil swarangalai meettuven.. gaanam Gaanam…jeva gaanam pirakkaadho ingae.. Male Part Ezhisai geedhamae enakoru jeevan neeyae.. Male Part Yedho raagam enadhu kuralin vazhi Thaalam bhaavam irandum inaindhu vara Ketkum yaarum urugi urugi vizha Kaadhil paayum pudhiya kavidhai idhu Azhagu mozhiyil oru amudha mazhaiyum vara Ninaivum manamum adhil nanaiya nanaiya sugamoo… Yedhoo..naalellaam sandhosam nenjellaam sangeetham.. Uyirae..uyirae.. Male Part Ezhisai geedhamae enakoru jeevan neeyae Male Part Kaiyil yendhum madhuvil mayakkamundu Kannil neendhum kanavil inimaiyundu Nenjae nenjaeyedhaiyum marandhuvidu Bodhai aatril manadhai midhakkavidu Uravu edhuvumillai kavalai siridhumillai Thanimai kodumaiyillai inimai inimai idhudhaan.. Naan dhaan… Paasangal kollaadha bandhangal illaadha Manidhan manidhan Male Part Ezhisai geedhamae enakoru jeevan neeyae Vaazhum kaalam yaavum unakaaga naan dhaan Kaaviya veenaiyil swarangalai meettuven.. gaanam Gaanam…jeva gaanam pirakkaadho ingae.. Male Part Ezhisai geedhamae enakoru jeevan neeyae..
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : ரவீந்திரன் ஆண் : ஆஹ்......ஆஹ்......ஆஹ்..... ஆண் : ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே வாழும் காலம் யாவும் உனக்காக நான்தான் காவிய வீணையில் சுவரங்களை மீட்டுவேன் கானம் கானம் ஜீவ கானம் பிறக்காதோ இங்கே ஆண் : ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே ஆண் : ஏதோ ராகம் எனது குரலின் வழி தாளம் பாவம் இரண்டும் இணைந்து வர கேட்கும் யாரும் உருகி உருகி விழ காதில் பாயும் புதிய கவிதை இது அழகு மொழியில் ஒரு அமுத மழையும் வர நினைவும் மனமும் அதில் நனைய நனைய சுகமோ ஏதோ... நாளெல்லாம் சந்தோஷம் நெஞ்செல்லாம் சங்கீதம் உயிரே......உயிரே...... ஆண் : ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே ஆண் : கையில் ஏந்தும் மதுவில் மயக்கமுண்டு கண்ணில் நீந்தும் கனவில் இனிமையுண்டு நெஞ்சே நெஞ்சே எதையும் மறந்துவிடு போதை ஆற்றில் மனதை மிதக்கவிடு உறவு எதுவுமில்லை கவலை சிறிதுமில்லை தனிமை கொடுமையில்லை இனிமை இனிமை இதுதான் நான் தான்...... பாசங்கள் கொள்ளாத பந்தங்கள் இல்லாத மனிதன் மனிதன் ஆண் : ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே வாழும் காலம் யாவும் உனக்காக நான்தான் காவிய வீணையில் சுவரங்களை மீட்டுவேன் கானம் கானம் ஜீவ கானம் பிறக்காதோ இங்கே ஆண் : ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே
Song information
Singer: K. J. Yesudas
Music by: Raveendran
Release information: From Rasigan Oru Rasigai (1986) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Rasigan Oru Rasigai
- Composer: Raveendran