Roman script

Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female Part

Aaaa…..aaaaa……

Aayi magamaayi.. aayiram kannudaiyaal

Neeli thirisooli neengaadha pottudaiyaal

Samayapuraththaalae

Saambiraani vaasakiyae

Samayapuraththai vittu

Sadudhiyilae vaarumammaa..

Female Part

{Maayi magamaayi

Mani manthira sekariyae

Enga aayi umaiyaanavalae

Asthaana maarimuththae} (2)

Female Part

Silambu piranthathammaa

Sivalinga saalaiyilae

Pirambu piranthathammaa

Pichaandi sannidhiyil

Female Part

Udukkai piranthathammaa

Uruthraatcha boomiyilae

Pambai piranthathammaa

Palingu maa mandabaththil

Female Part

Maayi magamaayi

Mani manthira sekariyae

Enga aayi umaiyaanavalae

Asthaana maarimuththae

Female Part

Parigaasam seidhavarai

Padhaipadhaikka vettiduvae

Parigaaram kettu vittaa

Pakkaththunai nee iruppae

Male Part

Melnaattu pillaiyidam

Nee potta muththiraiyai

Nee paarththu aaththi vachaa

Naal paarththu poojai seivaan

Female Part

Maayi magamaayi

Mani manthira sekariyae

Enga aayi umaiyaanavalae

Asthaana maarimuththae

Female Part

Kuzanthai varunthuvadhu

Kovilukku ketkalaiyo

Mainthan varunthuvadhu

Maaligaikku ketkalaiyo

Female Part

Ezhai kuzhanthaiyammaa..

Eduththorkku baalanammaa

Un kaalil paninthu vittaan

Dhayavudan nee paarumammaa

Female Part

Kaththi pol veppilaiyaam..

Kaaliyamman maruththuvamaam

Eetti pol veppilaiyaam..

Eswariyin arumarunthaam

Veppilaiyil ullirukkum..

Viththaithanai yaar arivaar

Female Part

Aayaa manamiranggu

En aaththaa manam iranggu

Ammaiyae nee irangu

En annaiyae nee iranggu

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

பெண் : ஆஆ ஆஆஆ

ஆயி மகமாயி ஆயிரம்

கண்ணுடையாள் நீலி

திரிசூலி நீங்காத

பொட்டுடையால்

சமயபுரத்தாலே சாம்பிராணி

வாசகியே சமயபுரத்தை

விட்டு சடுதியிலே வாருமம்மா

பெண் : { மாயி மகமாயி

மணி மந்திர சேகரியே

எங்க ஆயி உமையானவளே

அஸ்தான மாரிமுத்தே } (2)

பெண் : சிலம்பு பிறந்ததம்மா

சிவலிங்க சாலையிலே பிரம்பு

பிறந்ததம்மா பிச்சாண்டி

சந்நிதியில்

பெண் : உடுக்கை பிறந்ததம்மா

உருத்திராட்ச பூமியிலே பாம்பை

பிறந்ததம்மா பளிங்கு மா

மண்டபத்தில்

பெண் : மாயி மகமாயி

மணி மந்திர சேகரியே

எங்க ஆயி உமையானவளே

அஸ்தான மாரிமுத்தே

பெண் : பரிகாசம்

செய்தவரை பதை

பதைக்க வெட்டிடுவே

பரிகாரம் கேட்டு விட்டா

பக்கத்துணை நீ இருப்பே

ஆண் : மேல்நாட்டு

பிள்ளையிடம் நீ போட்ட

முத்திரையை நீ பார்த்து

ஆத்தி வச்சா நாள் பார்த்து

பூஜை செய்வான்

பெண் : மாயி மகமாயி

மணி மந்திர சேகரியே

எங்க ஆயி உமையானவளே

அஸ்தான மாரிமுத்தே

பெண் : குழந்தை

வருந்துவது கோவிலுக்கு

கேட்கலையோ மைந்தன்

வருந்துவது மாளிகைக்கு

கேட்கலையோ

பெண் : ஏழை குழந்தையம்மா

எடுத்தோர்க்கு பாலனம்மா உன்

காலில் பணிந்து விட்டான்

தயவுடன் நீ பாருமம்மா

பெண் : கத்தி போல்

வேப்பிலையாம்

காளியம்மன் மருத்துவமாம்

ஈட்டி போல் வேப்பிலையாம்

ஈஸ்வரியின் அருமருந்தாம்

வேப்பிலையில் உள்ளிருக்கும்

விதைத்தனை யார் அறிவார்

பெண் : ஆயா மனமிறங்கு

என் ஆத்தா மனம் இறங்கு

அம்மையே நீ இறங்கு என்

அன்னையே நீ இறங்கு

Song information

Singer: P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Aathi Parasakthi (1971) · Lyricist: Kannadasan

Explore this song