தமிழ்

ஆண் : ஹோய் வந்தேன்டா பால்காரன்

அடடா பசு மாட்ட பத்தி பாடப் போறேன்

புது பாட்டு கட்டி ஆடப் போறேன்

ஆண் : வந்தேன்டா பால்காரன்

அடடா பசு மாட்ட பத்தி பாடப் போறேன்

புது பாட்டு கட்டி ஆடப் போறேன்

ஆண் : புல்லு கொடுத்தா

பாலு கொடுக்கும்

உன்னால முடியாது தம்பி

அட பாதி புள்ள பொறக்குதப்பா

பசும்பால தாய் பாலா நம்பி

ஆண் : ஹோய் வந்தேன்டா பால்காரன்

அடடா பசு மாட்ட பத்தி பாடப் போறேன்

புது பாட்டு கட்டி ஆடப் போறேன்

ஆண் : தன் ரத்தத்தில் ஒரு பாதி

பாலாக பிரிப்பது

பசுவோட வேலையப்பா

ஆண் : அது பிரித்தாலும் பாலோடு

தண்ணீரைக் கலப்பது

மனிதனின் மூளையப்பா

ஆண் : தன் ரத்தத்தில் ஒரு பாதி

பாலாக பிரிப்பது

பசுவோட வேலையப்பா

ஆண் : அது பிரித்தாலும் பாலோடு

தண்ணீரைக் கலப்பது

மனிதனின் மூளையப்பா

ஆண் : சாணம் விழுந்தா உரம் பாரு

எருவை எரிச்சா திருநீறு

உனக்கு என்ன வரலாறு ஹே ஹே

உண்மை சொன்னா தகராறு

ஆண் : நீ மாடு போல உழைக்கலியே

நீ மனுஷனை ஏய்ச்சு பொழைக்கிறியே

ஆண் : வந்தேன்டா பால்காரன்

அடடா பசு மாட்ட பத்தி பாடப் போறேன்

புது பாட்டு கட்டி ஆடப் போறேன்

குழு : தந்தனா தந்தனா தந்தனா னா

தந்தனா தந்தனா தந்தனா னா

தந்தானனா தன தந்தானனா

தன தந்தனா தந்தனா தந்தனா னா

தந்தனா தந்தனா தந்தனா

ஆண் : அட மீன் செத்தா கருவாடு

நீ செத்தா வெறும் கூடு

கண்ணதாசன் சொன்னதுங்க

ஆண் : பசு இருந்தாலும் பாலாகும்

செத்தாலும் தோலாகும்

நான் கண்டு சொன்னதுங்க

ஆண் : அட மீன் செத்தா கருவாடு

நீ செத்தா வெறும்கூடு

கண்ணதாசன் சொன்னதுங்க

ஆண் : பசு இருந்தாலும் பாலாகும்

செத்தாலும் தோலாகும்

நான் கண்டு சொன்னதுங்க

ஆண் : அண்ணல் காந்தி குடிச்சதெல்லாம்

ஆயுள் வளர்க்கும் ஆட்டுப் பாலுங்க

அண்ணாமலை நான் குடுப்பதெல்லாம்

அன்பு வளர்க்கும் மாட்டுப் பாலுங்க

ஆண் : அன்னை வாரி கொடுத்தது தாய் பாலு

என்னை வாழ வைத்தது தமிழ் பாலு

ஆண் : வந்தேன்டா பால்காரன்

அடடா பசு மாட்ட பத்தி பாடப் போறேன்

புது பாட்டு கட்டி ஆடப் போறேன்

ஆண் : புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும்

உன்னால முடியாது தம்பி ஹா

அட பாதி புள்ள பொறக்குதப்பா

பசும்பால தாய் பாலா நம்பி

ஆண் : வந்தேன்டா பால்காரன்

அடடா பசு மாட்ட பத்தி பாடப் போறேன்

புது பாட்டு கட்டி ஆடப் போறேன் ஹா

Song information

படம்: அண்ணாமலை (1992)

பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்

இசை: தேவா

இயற்றியவர்: வைரமுத்து

Album: அண்ணாமலை

Explore this song