தமிழ்

பெண் : ஆஆஆ ஆஆஆ

ஆஹஹா ஓஹோஹோ

ஆஆஆ ஓஓஒ

ஆஹஹா ஓஹோஹோ

பெண் : வாழ நினைத்தால் வாழலாம்

வழியா இல்லை பூமியில்

ஆழக் கடலும் சோலையாகும்

ஆசை இருந்தால் நீந்தி வா

பெண் : வாழ நினைத்தால் வாழலாம்

வழியா இல்லை பூமியில்

ஆழக் கடலும் சோலையாகும்

ஆசை இருந்தால் நீந்தி வா

பெண் : பார்க்கத் தெரிந்தால்

பாதை தெரியும்

பார்த்து நடந்தால்

பயணம் தொடரும்

பயணம் தொடர்ந்தால்

கதவு திறக்கும்

கதவு திறந்தால்

காட்சி கிடைக்கும்

காட்சி கிடைத்தால்

கவலை தீரும்

கவலை தீர்ந்தால்

வாழலாம்

பெண் : வாழ நினைத்தால்

வாழலாம்

வழியா இல்லை பூமியில்

ஆழக் கடலும் சோலையாகும்

ஆசை இருந்தால் நீந்தி வா

ஆண் : கண்ணில் தெரியும்

வண்ணப் பறவை

கையில் கிடைத்தால்

வாழலாம்

கருத்தில் வளரும்

காதல் எண்ணம்

கனிந்து வந்தால்

வாழலாம்

கன்னி இளமை

என்னை அணைத்தால்

தன்னை மறந்தே

வாழலாம்

ஆண் : வாழச் சொன்னால்

வாழ்கிறேன்

மனமா இல்லை வாழ்வினில்

ஆழக் கடலில்

தோணி போலே

அழைத்துச் சென்றால்

வாழ்கிறேன்

பெண் : ஏரிக் கரையில்

மரங்கள் சாட்சி

ஆண் : ஏங்கித் தவிக்கும்

இதயம் சாட்சி

பெண் : துள்ளித் திரியும்

மீன்கள் சாட்சி

ஆண் : துடித்து நிற்கும்

இளமை சாட்சி

பெண் : இருவர் வாழும்

காலம் முழுதும்

ஒருவராக வாழலாம்

ஆண் & பெண் : வாழ நினைத்தோம்

வாழுவோம்

வழியா இல்லை பூமியில்

காதல் கடலில்

தோணி போலே

காலம் முழுதும்

நீந்துவோம்

பெண்: ஆஆஆ ஆஆஆ

ஆண் : வாழ நினைத்தோம்

வாழுவோம்

வழியா இல்லை பூமியில்

காதல் கடலில்

தோணி போலே

காலம் முழுதும்

நீந்துவோம்

Song information

படம்: பலே பாண்டியா (1962)

பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா

இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி

இயற்றியவர்: கண்ணதாசன்

Album: பலே பாண்டியா

Explore this song