தமிழ்

பாட்டு பாடவா...

பார்த்து பேசவா...

பாடம் சொல்லவா...

பறந்து செல்லவா...

பால் நிலாவை போல வந்த

பாவை அல்லவா

நானும் பாதை தேடி

ஓடி வந்த காளை அல்லவா‌...

பாட்டு பாடவா...

பார்த்து பேசவா...

பாடம் சொல்லவா...

பறந்து செல்லவா...

பால் நிலாவை போல வந்த

பாவை அல்லவா...

நானும் பாதை தேடி

ஓடி வந்த காளை அல்லவா‌...

பாட்டு பாடவா...

பார்த்து பேசவா...

பாடம் சொல்லவா...

பறந்து செல்லவா...

மேகவண்ணம் போலே மின்னும்

ஆடையினாலே...

மலை மேனியெல்லாம்

மூடுதம்மா நாணத்தினாலே...

மேகவண்ணம் போலே மின்னும்

ஆடையினாலே...

மலை மேனியெல்லாம்

மூடுதம்மா நாணத்தினாலே...

பக்கமாக வந்த பின்னும் வெட்கமாகுமா...

இங்கே பார்வையோடு

பார்வை சேர

தூது வேண்டுமா...

பக்கமாக வந்த பின்னும் வெட்கமாகுமா...

இங்கே பார்வையோடு

பார்வை சேர தூது

வேண்டுமா...

மாலை அல்லவா..

நல்ல நேரம் அல்லவா...

இன்னும் வானம் பார்த்த

பூமி போல வாழலாகுமா...

பாட்டு பாடவா...

பார்த்து பேசவா...

பாடம் சொல்லவா...

பறந்து செல்லவா...

பால் நிலாவை போல வந்த

பாவை அல்லவா..

நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா...

பாட்டு பாடவா..

பார்த்து பேசவா..

பாடம் சொல்லவா...

பறந்து செல்லவா...

அங்கமெல்லாம் தங்கமான மங்கையை போலே

நதி அன்னநடை போடுதம்மா பூமியின் மேலே

அங்கமெல்லாம் தங்கமான மங்கையை போலே

நதி அன்னநடை போடுதம்மா பூமியின் மேலே

கண் நிறைந்த காதலனை காணவில்லையா...

இந்த காதலிக்கு தேன் நிலவில்

ஆசை இல்லையா...

கண் நிறைந்த காதலனை காணவில்லையா...

இந்த காதலிக்கு தேன் நிலவில்

ஆசை இல்லையா...

காதல் தோன்றுமா...

இன்னும் காலம் போகுமா...

இல்லை காத்து காத்து

நின்றது தான் மீதமாகுமா...

பாட்டு பாடவா...

பார்த்து பேசவா...

பாடம் சொல்லவா...

பறந்து செல்லவா...

பால் நிலாவை

போல வந்த பாவை

அல்லவா

நானும் பாதை

தேடி ஓடி வந்த காளை

அல்லவா...

பாட்டு பாடவா...

பார்த்து பேசவா...

பாடம் சொல்லவா...

பறந்து செல்லவா...

Song information

படம்: தேன் நிலவு (1961)

பாடியவர்: A.M. ராஜா

இசை: A.M. ராஜா

இயற்றியவர்: கண்ணதாசன்

Album: தேன் நிலவு

Explore this song