தமிழ்

நேற்று வரை நேற்று வரை

தனித்திருந்தேன் யாரும் இல்லை

இன்று முதல் தொடங்கியதே

உலகின் முதல் காதல் கதை

அனலாகவே வேகும் பனிபோல மோதும்

மழை கால மேகம் கண்டேன்

கரை சேர வேண்டும் கடல் என்று தேயும்

உனை தேடி கண்டு கொண்டேன்

பேசும் போதிலே கேளா ஒலி

பார்வை ஆகுமே தீபாவளி

உன்னை போல யாருமில்லை

என் இறைவி

நேற்று வரை நேற்று வரை

தனித்திருந்தேன் யாரும் இல்லை

இன்று முதல் தொடங்கியதே

உலகின் முதல் காதல் கதை

மௌனம் என்னும் உன் மொழியில்

மழலையாய் ஆகி பேசுகிறாய்

ஒலிகளினால் நம் உலகில்

கவிதை சாயம் பூசுகிறாய்

கனவா நானவா தெரியா நிலையே

பகலை இரவாய் பழகும் கலையே

நேற்று வரை நேற்று வரை

தனித்திருந்தேன் யாரும் இல்லை

இன்று முதல் தொடங்கியதே

உலகின் முதல் காதல் கதை

எனது காற்றில் நீ கரைந்தாய்

எனது வானம் நீ அளந்தாய்

எனது வாசல் நீ திறந்தாய்

எனது ஓசை நீ உணர்ந்தாய்

ஒரு நாள் நிழலாய்

தரையில் இருந்தாய்

பிறகு என் மனதில்

நிழவாய் நிறைந்தாய்

நேற்று வரை நேற்று வரை

தனித்திருந்தேன் யாரும் இல்லை

இன்று முதல் தொடங்கியதே

உலகின் முதல் காதல் கதை

Song information

படம்: சைரன் 108 (2024)

பாடியவர்: சித் ஸ்ரீராம்

இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்

பாடலாசிரியர்: தாமரை

Album: சைரன் 108

Explore this song