தமிழ்

ஓ...

ரசிக்கும் சீமானே வா

ஜொலிக்கும் உடையணிந்து

களிக்கும் நடனம் புரிவோம்

அதை நினைக்கும் பொழுது மனம்

இனிக்கும் விதத்தில் சுகம்

அளிக்கும் கலைகள் அறிவோம்.

கற்சிலையின் சித்திரமும் கண்டு

அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு

கற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கொண்டு

வீண் கற்பனையெல்லாம்

மனதில் அற்புதமே என்று

மகிழ்ந்து விற்பனை செய்யாதே

மதியே

தினம் நினைக்கும் பொழுது மனம்

இனிக்கும் விதத்தில் சுகம்

அளிக்கும் கலைகள் அறிவோம்.

ஓ...

ரசிக்கும் சீமானே வா

வானுலகம் போற்றுவதை நாடி

இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி

பெண்கள் இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி

வெறும் ஆணவத்தினாலே

பெரும் ஞானியைப் போலே நினைந்து

வீணிலே அலைய வேண்டாம்!

தினம் நினைக்கும் பொழுது மனம்

இனிக்கும் விதத்தில் சுகம்

அளிக்கும் கலைகள் அறிவோம்.

ஓ...

ரசிக்கும் சீமானே வா

Song information

படம்: பராசக்தி (1952)

பாடியவர்: எம்.எஸ்.ராஜேஸ்வரி

இசை: எஸ்.சுதர்சனம்

இயற்றியவர்: கலைஞர் மு. கருணாநிதி

Album: பராசக்தி

Explore this song