Roman script
Singer : P. Suseelaa Music by : S. M. Subbaiah Naidu Female Part Vasantha kaala thendralil oru vandu Vasantha kaala thendralil oru vandu Adhu malarnthu sirikkum thamarai malarkandu Kadhal geedham paadi kondu Mayangi irunthathu malar theanai undu Aasai arupathu naal……Megam muppathu naal Female Part Ilangaattril thavazhnthodi Varum senthaazhai vaasam Ilangaattril thavazhnthodi Varum senthaazhai vaasam Varum senthaazhai vaasam Karuvandin manathaiellaam Konjam konjam maatravae Naesam ellam maranthathu vandu Female Part Paranthu thaavi thaavi odi sendrathu Vandin nasam veli vaesam Enak kandaen kandaen kandaenae Enthan kannaalae Female Part Aasai arupathu naal mogam muppathu naal Aasai arupathu naal mogam muppathu naal Female Part Thaazhampoovin azhagilae mathi thadumaari Aasaiyilae arugil sendrathu Thazhuvi kaadhaludan Maeni muththam thaanae thanthathu Female Part Poo naagam seeriyae pon vandatheendavae Poo naagam seeriyae pon vandatheendavae Female Part Aaviyathai izhanththau vandu Antho paavam paavam aadi veezhnthathu Vandin naesam mathi mathi mosam Enak kandaen kandaen kandaenae Enthan kannaalae Female Part Vasantha kaala thendralil oru vandu Adhu malarnthu sirikkum thamarai malarkandu Kadhal geedham paadi kondu Mayangi irunthathu malar theanai undu antha vandu
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : வசந்த காலத் தென்றலில் ஒரு வண்டு வசந்த காலத் தென்றலில் ஒரு வண்டு அது மலர்ந்து சிரிக்கும் தாமரை மலர்கண்டு காதல் கீதம் பாடிக் கொண்டு மயங்கி இருந்தது மலர் தேனை உண்டு ஆசை அறுபது நாள்.......மோகம் முப்பது நாள்...... பெண் : இளங்காற்றில் தவழ்ந்தோடி வரும் செந்தாழை வாசம் இளங்காற்றில் தவழ்ந்தோடி வரும் செந்தாழை வாசம் வரும் செந்தாழை வாசம் கருவண்டின் மனதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் மாற்றவே நேசம் எல்லாம் மறந்தது வண்டு பெண் : பறந்து தாவித் தாவி ஓடிச் சென்றது வண்டின் நேசம் வெளி வேஷம் எனக் கண்டேன் கண்டேன் கண்டேனே எந்தன் கண்ணாலே பெண் : ஆசை அறுபது நாள்.......மோகம் முப்பது நாள்...... ஆசை அறுபது நாள்.......மோகம் முப்பது நாள்...... பெண் : தாழம்பூவின் அழகிலே மதி தடுமாறி ஆசையிலே அருகில் சென்றது தழுவி காதலுடன் மேனி முத்தம் தானே தந்தது பெண் : பூ நாகம் சீறியே பொன் வண்டைத் தீண்டவே பூ நாகம் சீறியே பொன் வண்டைத் தீண்டவே பெண் : ஆவியதை இழந்தது வண்டு அந்தோ பாவம் பாவம் ஆடி வீழ்ந்தது வண்டின் நேசம் மதி மதி மோசம் எனக் கண்டேன் கண்டேன் கண்டேனே எந்தன் கண்ணாலே பெண் : வசந்த காலத் தென்றலில் ஒரு வண்டு அது மலர்ந்து சிரிக்கும் தாமரை மலர்கண்டு காதல் கீதம் பாடிக் கொண்டு மயங்கி இருந்தது மலர் தேனை உண்டு அந்த வண்டு
Song information
Singer: P. Suseelaa
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Konjum Salangai (1962) · Lyricist: V. Seetharaman
Explore this song
- Singer: P. Suseelaa
- Film / album: Konjum Salangai
- Composer: S. M. Subbaiah Naidu