Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Vaa vaa… aa… mannavaa… aa…

Vaa vaa… aa… mannavaa… aa…

Female Part

Vaa vaa mannavaa vaasal thaedi vaa

Vaa vaa mannavaa vaasal thaedi vaa

Vaanam illaiyael vaadum vennilaa

Female Part

Vaa vaa mannavaa

Vaa vaa… aa… mannavaa… aa…

Female Part

O… uravai oru siluvaiyai polae

Uyiril dhinam sumappadhanaalae

Iravil vizhi thuyilvadhum illai

Isaiyai manam payilvadhum illai

Female Part

Veenaiyum viralgalum vilagiyae vaazhumaa

Vilaginaal thandhigal thaen isai vaarkkumaa

Vizhiyil vazhi vazhindhadhu kanneer

Vaeril vandhu vizhundhadhu venneer

Udalil oru unarchiyum illai

Manadhil oru magizhchiyum illai

Female Part

Aadalum paadalum nee tharum seedhanam

Thendral nee illaiyael pookkumaa poo vanam

Vaavaa vaavaa anbae…

Male Part

Vaa vaa… kanmani…

Vaa vaa… aa… kanmani…

Male Part

Vaa vaa kanmani vaasal thaedi vaa

Vaa vaa kanmani vaasal thaedi vaa

Vaanam illaiyael vaadum vennilaa

Male Part

Vaa vaa kanmani vaasal thaedi vaa

Vaa vaa kanmani

Male Part

Aa… aa… marandhu vidu pirivennum sollai

Pirivu indha piraviyil illai

Uravil ingu namakkoru ellai

Vaguthu vaikka oruvanum illai

Female Part

Aanaigal iduvadhaal alai kadal adangumaa

Male Part

Kudaigalai virippadhaal adai mazhai nadungumaa

Female Part

Thanalil vaitha mezhugena ingu

Thavitha manam pizhaithadhu indru

Thalaivan undhan varugaiyai kandu

Thanimai ingu vidai perum indru

Male Part

Kaadhalin kaaviyam kaalathai velvadhu

Female Part

Maeniyai nizhal thoda yaar enna solvadhu

Vaavaa vaavaa anbae…

Male Part

Vaa vaa kanmani vaasal thaedi vaa

Female Part

Vaa vaa mannavaa vaasal thaedi vaa

Male Part

Vaanam illaiyael vaadum vennilaa

Female Part

Vaa vaa mannavaa vaasal thaedi vaa

Vaa vaa mannavaa

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : வா வா... ஆ... மன்னவா... ஆ...

வா வா... ஆ... மன்னவா... ஆ...

பெண் : வா வா மன்னவா வாசல் தேடி வா

வா வா மன்னவா வாசல் தேடி வா

வானம் இல்லையேல் வாடும் வெண்ணிலா

பெண் : வா வா மன்னவா

வா வா... ஆ... மன்னவா... ஆ...

பெண் : ஓ... உறவை ஒரு சிலுவையப் போலே

உயிரில் தினம் சுமப்பதனாலே

இரவில் விழி துயில்வதும் இல்லை

இசையை மனம் பயில்வதும் இல்லை

பெண் : வீணையும் விரலகளும் விலகியே வாழுமா

விலகினால் தந்திகள் தேன் இசை வார்க்குமா

விழியில் வழி வழிந்தது கண்ணீர்

வேரில் வந்து விழுந்தது வெந்நீர்

உடலில் ஒரு உணர்ச்சியும் இல்லை

மனதில் ஒரு மகிழ்ச்சியும் இல்லை

பெண் : ஆடலும் பாடலும் நீ தரும் சீதனம்

தென்றல் நீ இல்லையேல் பூக்குமா பூ வனம்

வாவா வாவா அன்பே...

ஆண் : வா வா... கண்மணி...

வா வா... ஆ... கண்மணி...

ஆண் : வா வா கண்மணி வாசல் தேடி வா

வா வா கண்மணி வாசல் தேடி வா

வானம் இல்லையேல் வாடும் வெண்ணிலா

ஆண் : வா வா கண்மணி வாசல் தேடி வா

வா வா கண்மணி....

ஆண் : ஆ... ஆ... மறந்து விடு பிரிவென்னும் சொல்லை

பிரிவு இந்தப் பிறவியில் இல்லை

உறவில் இங்கு நமக்கொரு எல்லை

வகுத்து வைக்க ஒருவனும் இல்லை

பெண் : ஆணைகள் இடுவதால்

அலை கடல் அடங்குமா

ஆண் : குடைகளை விரிப்பதால்

அடை மழை நடுங்குமா

பெண் : தனலில் வைத்த மெழுகென இங்கு

தவித்த மனம் பிழைத்தது இன்று

தலைவன் உந்தன் வருகையைக் கண்டு

தனிமை இங்கு விடை பெறும் இன்று

ஆண் : காதலின் காவியம் காலத்தை வெல்வது

பெண் : மேனியை நிழல் தொட

யார் என்ன சொல்வது

வாவா வாவா அன்பே...

ஆண் : வா வா கண்மணி வாசல் தேடி வா

பெண் : வா வா மன்னவா வாசல் தேடி வா

ஆண் : வானம் இல்லையேல் வாடும் வெண்ணிலா

பெண் : வா வா மன்னவா வாசல் தேடி வா

வா வா மன்னவா

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Innisai Mazhai (1992) · Lyricist: Vaali

Explore this song