Roman script
Singer : P. Susheela Music by : B. A. Chidambaranathan Lyrics by : Kumaradevan Female Part Thoonga veikkum iravellaam Yenga veikkum iravamma Naan vaangi vandha uravellaam Naan vaangi vandha uravellaam Vaatugindra uravamma Female Part Thoonga veikkum iravellaam Yenga veikkum iravamma Female Part Nenjinilae konda sumai Neengividum munnalae Nenjinilae konda sumai Neengividum munnalae Vayittril oru pudhu sumaiyum Valarudhamma ini Indha sumai irangi vandhu Amma endru azhaikaiyilae Endha sumai vandhidumoo Ammamma amma… amma… Female Part Thoonga veikkum iravellaam Yenga veikkum iravamma Female Part Eendrathumae vettugiraar Endraalum vaazhaimaram Eenaamal thaaimai thanai verpathillaiyae Eendrathumae vettugiraar Endraalum vaazhaimaram Eenaamal thaaimai thanai verpathillaiyae Female Part Muthedukkum nerathilae Sethuvidum sippikooda Muthai tharum thaaimai thanai veruppadhillaiyae Penmaiyin muzhumaiyae thaaimai thaan endraalum Perumaiyaaga magizha ennaal mudiyavillaiyae Amma…. amma Female Part Thoonga veikkum iravellaam Yenga veikkum iravamma Naan vaangi vandha uravellaam Vaatugindra uravamma Female Part Thoonga veikkum iravellaam Yenga veikkum iravamma
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : பி. ஏ. சிதம்பரநாதன் பாடல் ஆசிரியர் : குமாரதேவன் பெண் : தூங்க வைக்கும் இரவெல்லாம் ஏங்க வைக்கும் இரவம்மா நான் வாங்கி வந்த உறவெல்லாம் நான் வாங்கி வந்த உறவெல்லாம் வாட்டுகின்ற உறவம்மா.... பெண் : தூங்க வைக்கும் இரவெல்லாம் ஏங்க வைக்கும் இரவம்மா பெண் : நெஞ்சினிலே கொண்ட சுமை நீங்கிவிடும் முன்னாலே நெஞ்சினிலே கொண்ட சுமை நீங்கிவிடும் முன்னாலே வயிற்றிலொரு புதுச் சுமையும் வளருதம்மா இனி இந்தச் சுமை இறங்கி வந்து அம்மா என்றழைக்கையிலே எந்த சுமை வந்திடுமோ.. அம்மம்மா அம்மா அம்மா... பெண் : தூங்க வைக்கும் இரவெல்லாம் ஏங்க வைக்கும் இரவம்மா பெண் : ஈன்றதுமே வெட்டுகிறார் என்றாலும் வாழைமரம் ஈனாமல் தாய்மைதனை வெறுப்பதில்லையே ஈன்றதுமே வெட்டுகிறார் என்றாலும் வாழைமரம் ஈனாமல் தாய்மைதனை வெறுப்பதில்லையே பெண் : முத்தெடுக்கும் நேரத்திலே செத்துவிடும் சிப்பிகூட முத்தைத் தரும் தாய்மைதனை வெறுப்பதில்லையே பெண்மையின் முழுமையே தாய்மைதானென்றாலும் பெருமையாக மகிழ என்னால் முடியவில்லையே அம்மா அம்மா..... பெண் : தூங்க வைக்கும் இரவெல்லாம் ஏங்க வைக்கும் இரவம்மா நான் வாங்கி வந்த உறவெல்லாம் வாட்டுகின்ற உறவம்மா.... தூங்க வைக்கும் இரவெல்லாம் ஏங்க வைக்கும் இரவம்மா
Song information
Singer: P. Susheela
Music by: B. A. Chidambaranathan
Lyrics by: Kumaradevan
Release information: From Chella Penn (1969) · Singer: P. Susheela · Lyricist: Kumaradevan · Music: B. A. Chidambaranathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Chella Penn
- Composer: B. A. Chidambaranathan
- Lyricist: Kumaradevan