Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female Part

Raamaa… raamaa… raamaa…

Thirumangalyam kollum murai illaiyo

Ullam ariyaadha maangalyam thavarillaiyo

Thirumangalyam kollum murai illaiyo

Ullam ariyaadha maangalyam thavarillaiyo

Female Part

Kannai moodi kattum thaali chadhamaa

Indha kalyaanam unakke sammadhamaa

Kannai moodi kattum thaali chadhamaa

Indha kalyaanam unakke sammadhamaa

Yerkavo.. edukkavo.. neeyae sol

Raamaa.. raamaa… raamaa…

Female Part

Manamedai meedhu aniyaadhapodhum

Maangalyam endrum punidham

Manadhaalum avanai ninaiyaadhapodhum

Avan thandha thaali amudham

Kazhatrinaalum adhai agatrinaalum ini

Kanniyaavadhillai magalae

Kanavan endroruvan aana pinbu idhai

Kaakka vaendum kulamagalae

Female Part

Annai janakiyae andha raamapiraan

Thandha thaaliyalla indha thaali…

Annai janakiyae andha raamapiraan

Thandha thaaliyalla indha thaali…

Idhu aathirathil vandha avasarathil

Ennai siraiyidavae vandha vaeli

Idhai thaangi kondaal naan paavi…

Female Part

Kannai moodi kattum thaali chadhamaa

Indha kalyaanam unakke sammadhamaa

Thirumangalyam kollum murai illaiyo

Ullam ariyaadha maangalyam thavarillaiyo

Kannai moodi kattum thaali chadhamaa

Indha kalyaanam unakke sammadhamaa

Female Part

Malar maalaithannai silai meedhu soodi

Vazhipaadu seiyum kulamae

Silaithannai kettu orupodhum andha

Malar poodavillai manamae

Oruvan anivadhena oruththi peruvadhena

Mudindhu pona kadhai magalae

Avanai neengi nee vaazhndhapodhum

Ini idhanai neekkuvadhu thavarae

Female Part

Ival yaarukkendrae andha devanavan

Vidhi vaguththu vittaan andha naalil

Adhai maatridavo illai maruthidavo

Vazhi illaiyammaa indha naattil

Idhu thaayin vazhi vandha panbu

Female Part

Indha panpaadu maraiyaadhadhu

Adhu unnodu mudiyaadhadhu

Indha mannodu uravaanadhu…

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : ராமா...... ராமா..... ராமா......

திருமாங்கல்யம் கொள்ளும் முறை இல்லையோ

உள்ளம் அறியாத மாங்கல்யம் தவறில்லையோ

திருமாங்கல்யம் கொள்ளும் முறை இல்லையோ

உள்ளம் அறியாத மாங்கல்யம் தவறில்லையோ

பெண் : கண்ணை மூடிக் கட்டும் தாலி சதமா

இந்தக் கல்யாணம் உனக்கே சம்மதமா

கண்ணை மூடிக் கட்டும் தாலி சதமா

இந்தக் கல்யாணம் உனக்கே சம்மதமா

ஏற்கவோ எடுக்கவோ நீயே சொல்

ராமா...... ராமா..... ராமா......

பெண் : மணமேடை மீது அணியாதபோதும்

மாங்கல்யம் என்றும் புனிதம்

மனதாலும் அவனை நினையாதபோதும்

அவன் தந்த தாலி அமுதம்

கழற்றினாலும் இதை அகற்றினாலும்

இனி கன்னியாவதில்லை மகளே

கணவன் என்றவன் ஆனப் பின்பு

இதைக் காக்க வேண்டும் குல மகளே

பெண் : அன்னை ஜானகியே அந்த ராமப்பிரான்

தந்த தாலியல்ல இந்த தாலி

அன்னை ஜானகியே அந்த ராமப்பிரான்

தந்த தாலியல்ல இந்த தாலி

இது ஆத்திரத்தில் வந்த அவசரத்தில்

என்னை சிறையிடவே வந்த தாலி

இதைத் தாங்கிக் கொண்டால் நான் பாவி

பெண் : கண்ணை மூடிக் கட்டும் தாலி சதமா

இந்தக் கல்யாணம் உனக்கே சம்மதமா

திருமாங்கல்யம் கொள்ளும் முறை இல்லையோ

உள்ளம் அறியாத மாங்கல்யம் தவறில்லையோ

கண்ணை மூடிக் கட்டும் தாலி சதமா

இந்தக் கல்யாணம் உனக்கே சம்மதமா

பெண் : மலர் மாலைதனை சிலை மீது சூடி

வழிப்பாடு செய்யும் குலமே

சிலைதனைக் கேட்டு ஒருபோதும்

அந்த மலர் சூடவில்லை மனமே

ஒருவன் அணிவதென்ன ஒருத்தி பெறுவதென்ன

முடிந்து போன கதை மகளே

அவனை நீங்கி நீ வாழ்ந்தபோதும்

இனி இதனை நீக்குவது தவறே

பெண் : இவள் யாருக்கென்றே அந்த தேவனவன்

விதி வகுத்து விட்டான் அந்த நாளில்

அதை மாற்றிடவோ இல்லை மறுத்திடவோ

வழியில்லையம்மா இந்த நாட்டில்

இது தாயின் வழி வந்த பண்பு

பெண் : இந்த பண்பாடு மறையாதது அது

உன்னோடு முடியாதது

இந்த மண்ணோடு உறவானது.....

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Vishwanathan

Release information: From Thirumangalyam (1974) · Lyricist: Kannadasan

Explore this song