Roman script
Singer : Mano Music by : Ilayaraja Male Part Ho ho… 0hoho ho ho… Oho… haa aaha haa haa… Male Part Thendral kaatrae ondraai povomaa Thullum vellam endrae aavomaa Pullinangal paatteduthu paadura naeram Pon aruvi kaaleduthu odura naeram Naam iruvar kai anaithu Oorvalammaai poi varalaamaa Ingu poothirukkum pookkalidam Vaazhthukkalai vaangidalaamaa Male Part Thendral kaatrae ondraai povomaa Thullum vellam endrae aavomaa Chorus Sullunu veyil yaerudhu Aamaandi anna kili Sillunnu kaatha thaedudhu Aamaandi chella kili Summaadi sulli pookkudhu Aamaandi ponnu mani Sumai thaangi nammai paadudhu Aamaandi thanga mani Ooru thuli neerum kodukkum Kaadu nammai thaai pol anaikkum Male Part Neerai chumandhu varum Aagaaya megangalae Naan ungal nanban illaiyo Thaazha paarandhu varum Thasthaara poochigalae Naan ungal annan illaiyo Moongilgalin melae Maram kothigalae neenga Mookku nuniyaala dhinam kothuradhu yaenga Thola pottaakkaa poongaathu kudiyaerum
Andha osai thaan thaen paattaa uru maarum En kaadhara thaan adha naan kekkuren Andha paattugala paadam panni Paal nilavil paadiduven naan Male Part Thendral kaatrae ondraai povomaa Thullum vellam endrae aavomaa Male Part Saadhi sanangalidam Sangaatham venaaminnu Kaattoda kaalam kazhithaen Koyil kulatha vechu Poraattam pannuradha Paathu naan yetti iruppen Male Part Naattil ulla baedham Indha kaattil illa saami Vaengai puli singam Inga yenna madham kaami Ingu poosalgal yaesalgal kidaiyaadhu Idhu polae thaan melaana idam yaedhu Or vambum illa veen vaadham illa Ingu sooriyan pol chandhiran pol Sudhandhiramaa thirinjiduven naan Male Part Thendral kaatrae ondraai povomaa Thullum vellam endrae aavomaa Pullinangal paatteduthu paadura naeram Pon aruvi kaaleduthu odura naeram Naam iruvar kai anaithu Oorvalammaai poi varalaamaa Ingu poothirukkum pookkalidam Vaazhthukkalai vaangidalaamaa Male Part Thendral kaatrae ondraai povomaa Thullum vellam endrae aavomaa
தமிழ்
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஹோ ஹோ......ஓஹோஹோ ஹோ ஹோ.... ஓஹோ....ஹா ஆஹா ஹா ஹா... ஆண் : தென்றல் காற்றே ஒன்றாய் போவோமா துள்ளும் வெள்ளம் என்றே ஆவோமா புள்ளினங்கள் பாட்டெடுத்து பாடுற நேரம் பொன்னருவி காலெடுத்து ஓடுற நேரம் ஆண் : நாமிருவர் கையணைத்து ஊர்வலமாய் போய் வரலாமா இங்கு பூத்திருக்கும் பூக்களிடம் வாழ்த்துக்களை வாங்கிடலாமா ஆண் : தென்றல் காற்றே ஒன்றாய் போவோமா துள்ளும் வெள்ளம் என்றே ஆவோமா குழு : ஓஓ ஓஒ ஓஒ ஓஒ....... ஓஓ ஓஒ ஓஒ ஓஒ....... ஓஓ ஓஒ ஓஒ ஓஒ....... ஓஹோஹ்ஹோ...... குழு : சுள்ளுன்னு வெயில் ஏறுது ஆமாடி அன்னக்கிளி சில்லுன்னு காத்த தேடுது ஆமாடி சொர்ணக்கிளி சும்மாடி சுள்ளி பூக்குது ஆமாடி பொன்னுமணி சுமைதாங்கி நம்ம பாடுது ஆமாடி தங்கமணி ஊரு துளி நீரும் கொடுக்கும்..... காடு நம்மை தாய்ப்போல் அணைக்கும் ஆண் : நீரை சுமந்து வரும் ஆகாய மேகங்களே நான் உங்கள் நண்பன் இல்லையோ தாழப் பறந்து வரும் தட்டாரப் பூச்சிகளே நான் உங்கள் அண்ணன் இல்லையோ மூங்கில்களின் மேலே மரங்கொத்திகளே நீங்க மூக்கு நுனியாலே தினம் கொத்துறது ஏங்க துளைப் போட்டாக்க பூங்காத்து குடியேறும் அந்த ஓசைதான் தேன் பாட்டா உருமாறும் என் காதாரதான் அத நான் கேக்குறேன் அந்த பாட்டுகளை பாடம் பண்ணி பால் நிலவில் பாடிடுவேன் நான் ஆண் : தென்றல் காற்றே ஒன்றாய் போவோமா துள்ளும் வெள்ளம் என்றே ஆவோமா ஆண் : சாதி சனங்களிடம் சங்காத்தம் வேணாமுன்னு காத்தோடு காலம் கழித்தேன் கோயில் குளத்தை வச்சு போராட்டம் பண்ணுறத பாத்து நான் எட்டி இருப்பேன் ஆண் : நாட்டிலுள்ள பேதம் இந்த காட்டில் இல்லை சாமி வேங்கை புலி சிங்கம் இங்க என்ன மதம் காமி இங்கு பூசல்கள் ஏசல்கள் கிடையாது இதுபோலேதான் மேலான இடம் ஏது ஓர் வம்பும் இல்ல வீண்வாதம் இல்ல இங்கு சூரியன் போல் சந்திரன் போல் சுதந்திரமாய் திரிஞ்சிடுவேன் நான் ஆண் : தென்றல் காற்றே ஒன்றாய் போவோமா துள்ளும் வெள்ளம் என்றே ஆவோமா புள்ளினங்கள் பாட்டெடுத்து பாடுற நேரம் பொன்னருவி காலெடுத்து ஓடுற நேரம் ஆண் : நாமிருவர் கையணைத்து ஊர்வலமாய் போய் வரலாமா இங்கு பூத்திருக்கும் பூக்களிடம் வாழ்த்துக்களை வாங்கிடலாமா ஆண் : தென்றல் காற்றே ஒன்றாய் போவோமா துள்ளும் வெள்ளம் என்றே ஆவோமா
Song information
Singer: Mano
Music by: Ilayaraja
Release information: From Adharmam (1994) · Lyricist: Isaignani Ilayaraja