Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male Part

Thedugiraal oru devathai

Thoovugiraal vizhi poomazhai

Thedugiraal oru devathai

Thoovugiraal vizhi poomazhai

Ennangalil vaazhum penn chiththiram

Kannin vazhi pesum natchaththiram

Male Part

Chinna poonguyil sinthum mozhigalil

Ennai paaduvaal anthi nilavinil

Vittu pogumaa thotta ninaivugal

Penn ullam poraadumo

Male Part

Thedugiraal oru devathai

Thoovugiraal vizhi poomazhai

Male Part

Thaalaattum velai aval neelaampari

Neeraattum neram aval kodhavari

Thaalaattum velai aval neelaampari

Neeraattum neram aval kodhavari

Naanthaanae thedum en aasaikkili

Naalthorum padum oru geedhanjali

Male Part

Ulla kovilili velli radhamena

Enna Cholaiyil vanna malarena

Konjum kogilam konda uravugal

Nenjodu nindraadumo

Male Part

Thedugiraal oru devathai

Thoovugiraal vizhi poomazhai

Male Part

……………….

Male Part

Nee paarkkum paarvai ilamaan thanthathu

Nee pesum vaarththai malarnthaen thanthathu

Nee konda kadhal adi naan thanthathu

Naan konda yaekkam adhu nee thanthathu

Male Part

Thanga thaenkudam alli anaikkaiyil

Chinna poochcharam killi edukkaiyil

Anbu kaaviyam palli araiyinil

Verenna naan solvathu

Male Part

Thedugiraal oru devathai

Thoovugiraal vizhi poomazhai

Ennangalil vaazhum penn chiththiram

Kannin vazhi pesum natchaththiram

Male Part

Chinna poonguyil sinthum mozhigalil

Ennai paaduvaal anthi nilavinil

Vittu pogumaa thotta ninaivugal

Penn ullam poraadumo

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : தேடுகிறாள் ஒரு தேவதை

தூவுகிறாள் விழிப் பூமழை

தேடுகிறாள் ஒரு தேவதை

தூவுகிறாள் விழிப் பூமழை

எண்ணங்களில் வாழும் பெண் சித்திரம்

கண்ணின் வழி பேசும் நட்சத்திரம்

ஆண் : சின்னப் பூங்குயில் சிந்தும் மொழிகளில்

என்னைப் பாடுவாள் அந்தி நிலவினில்

விட்டுப் போகுமோ தொட்ட நினைவுகள்

பெண் உள்ளம் போராடுமோ....

ஆண் : தேடுகிறாள் ஒரு தேவதை

தூவுகிறாள் விழிப் பூமழை

ஆண் : தாலாட்டும் வேளை அவள் நீலாம்பரி

நீராட்டும் நேரம் அவள் கோதாவரி

தாலாட்டும் வேளை அவள் நீலாம்பரி

நீராட்டும் நேரம் அவள் கோதாவரி

நான்தானே தேடும் என் ஆசைக்கிளி

நாள்தோறும் பாடும் ஒரு கீதாஞ்சலி

ஆண் : உள்ளக் கோவிலில் வெள்ளி ரதமென

எண்ணச் சோலையில் வண்ண மலரென

கொஞ்சும் கோகிலம் கொண்ட உறவுகள்

நெஞ்சோடு நின்றாடுமோ.....

ஆண் : தேடுகிறாள் ஒரு தேவதை

தூவுகிறாள் விழிப் பூமழை

ஆண் : .............................

ஆண் : நீ பார்க்கும் பார்வை இளமான் தந்தது

நீ பேசும் வார்த்தை மலர்த்தேன் தந்தது

நீ கொண்ட காதல் அடி நான் தந்தது

நான் கொண்ட ஏக்கம் அது நீ தந்தது

ஆண் : தங்கத் தேன்குடம் அள்ளி அணைக்கையில்

சின்னப் பூச்சரம் கிள்ளி எடுக்கையில்

அன்புக் காவியம் பள்ளி அறையினில்

வேறென்ன நான் சொல்வது....

ஆண் : தேடுகிறாள் ஒரு தேவதை

தூவுகிறாள் விழிப் பூமழை

எண்ணங்களில் வாழும் பெண் சித்திரம்

கண்ணின் வழி பேசும் நட்சத்திரம்

ஆண் : சின்னப் பூங்குயில் சிந்தும் மொழிகளில்

என்னைப் பாடுவாள் அந்தி நிலவினில்

விட்டுப் போகுமோ தொட்ட நினைவுகள்

பெண் உள்ளம் போராடுமோ....

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Paartha Gnabagam Illayo (1985) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song