Roman script

Singers : T. M. Soundhararajan and L. R. Eswari

Music by : K. V. Mahadevan

Male Part

Thaazham poovae thanga nilaavae

Thalai yen kunigirathu

Thaazham poovae thanga nilaavae

Thalai yen kunigirathu

Female Part

Adhu kaaman thodutha kanaigalinaalae

Kaniyaai kanigirathu

Adhu kaaman thodutha kanaigalinaalae

Kaniyaai kanigirathu

Male Part

Paadal suvaiyae panivaai malarae

Bayamaen varugirathu

Paadal suvaiyae panivaai malarae

Bayamaen varugirathu

Female Part

Ilam paruvathin aasai uruvathil yeri

Bayam pol therigirathu

Ilam paruvathin aasai uruvathil yeri

Bayam pol therigirathu

Male Part

Yelam kuzhalaai ilagiya nenjam

Edhaiyoo nenaikiradhu

Yelam kuzhalaai ilagiya nenjam

Edhaiyoo nenaikiradhu

Female Part

Adhu naalum pazhagum

Naalaiya poluthai

Ninaithae parakkirathu..

Adhu naalum pazhagum naalaiya poluthai

Ninaithae parakkirathu..

Male Part

Poorana nilavin thoranam yeno

Punnagai purigirathu

Female : Adhil kaaranam paadhi kaariyam paadhi

Kadhaiyaai varugirathu

Adhil kaaranam paadhi kaariyam paadhi

Kadhaiyaai varugirathu

Male Part

Ilamai thirandu thanimai nirainthu

Idhayam malargirathu

Female : Adhil uyirgal irandum pazhagiya pinnae

Uravum purigiradhu

Male Part

Thaazham poovae thanga nilaavae

Thalai yen kunigirathu

Female Part

Adhu kaaman thodutha kanaigalinaalae

Kaniyaai kanigirathu

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : தாழம்பூவே தங்க நிலாவே

தலை ஏன் குனிகிறது

தாழம்பூவே தங்க நிலாவே

தலை ஏன் குனிகிறது

பெண் : அது காமன் தொடுத்த கணைகளினாலே

கனியாய்க் கனிகிறது

அது காமன் தொடுத்த கணைகளினாலே

கனியாய்க் கனிகிறது

ஆண் : பாடல் சுவையே பனிவாய் மலரே

பயமேன் வருகிறது

பாடல் சுவையே பனிவாய் மலரே

பயமேன் வருகிறது

பெண் : இளம் பருவத்தின் ஆசை உருவத்தில் ஏறி

பயம் போல் தெரிகிறது

இளம் பருவத்தின் ஆசை உருவத்தில் ஏறி

பயம் போல் தெரிகிறது

ஆண் : ஏலம் குழலாய் இளகிய நெஞ்சம்

எதையோ நினைக்கிறது

ஏலம் குழலாய் இளகிய நெஞ்சம்

எதையோ நினைக்கிறது

பெண் : அது நாளும் பழகும்

நாளைய பொழுதை

நினைத்தே பறக்கிறது....

அது நாளும் பழகும்

நாளைய பொழுதை

நினைத்தே பறக்கிறது....

ஆண் : பூரண நிலவின் தோரணம் ஏனோ

புன்னகை புரிகிறது

பெண் : அதில் காரணம் பாதி காரியம் பாதி

கதையாய் வருகிறது

அதில் காரணம் பாதி காரியம் பாதி

கதையாய் வருகிறது

ஆண் : இளமை திரண்டு தனிமை நிறைந்து

இதயம் மலர்கிறது

பெண் : அதில் உயிர்கள் இரண்டும் பழகிய பின்னே

உறவும் புரிகிறது

ஆண் : தாழம்பூவே தங்க நிலாவே

தலை ஏன் குனிகிறது

பெண் : அது காமன் தொடுத்த கணைகளினாலே

கனியாய்க் கனிகிறது

Song information

Singers: T. M. Soundhararajan and L. R. Eswari

Music by: K. V. Mahadevan

Release information: From Ratha Thilagam (1963) · Lyricist: Kannadasan

Explore this song