Roman script

Singer : P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female Part

Thanneril maeni kulirnthathadi

Karaiyaeri vanthaal kothiththadi

Meen vanthu thottu thottu

Maenmelum pattu pattu

Aal thotta inbam piranthathadi…

Female Part

Thanneril maeni kulirnthathadi

Karaiyaeri vanthaal kothiththadi

Meen vanthu thottu thottu

Maenmelum pattu pattu

Aal thotta inbam piranthathadi….

Female Part

Neer konda megam naer vanthathu

Naan konda kuzhal vannamaethaan endrathu

Moovagai kaniyum muththaadum kodiyum

Poovai naanthaan endrathu

Naalvaga gunamum ondraaga penmai

Vaazhvae inimai endrathu

Female Part

Yaethaetho solla solla

En ullam thulla thulla

Anantha raagam piranthathadi

Female Part

Thanneril maeni kulirnthathadi

Karaiyaeri vanthaal kothiththadi

Meen vanthu thottu thottu

Maenmelum pattu pattu

Aal thotta inbam piranthathadi…

Female Part

Manam ennum paravai parakkindratthu

Mayakkaththil engengaeyo mithakkindrathu

Maan konda vizhigal maiyodu kalanthu

Thaen konda kavithai padiththathu

Yaenadi pennae illaatha yaekkam

Kooradi nenjam thudiththathu

Female Part

Vayathukku vantha penmai

Vaadatha poovin menmai

Neeraadumpothu poraaduthu…

Female Part

Thanneril maeni kulirnthathadi

Karaiyaeri vanthaal kothiththadi

Meen vanthu thottu thottu

Maenmelum pattu pattu

Aal thotta inbam piranthathadi…

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : தண்ணீரில் மேனி குளிர்ந்ததடி

கரையேறி வந்தால் கொதித்ததடி

மீன் வந்து தொட்டுத் தொட்டு

மேன்மேலும் பட்டுப் பட்டு

ஆள் தொட்ட இன்பம் பிறந்ததடி....

பெண் : தண்ணீரில் மேனி குளிர்ந்ததடி

கரையேறி வந்தால் கொதித்ததடி

மீன் வந்து தொட்டுத் தொட்டு

மேன்மேலும் பட்டுப் பட்டு

ஆள் தொட்ட இன்பம் பிறந்ததடி.....

பெண் : நீர்க் கொண்ட மேகம் நேர் வந்தது

நான் கொண்ட குழல் வண்ணமேதான் என்றது

மூவகை கனியும் முத்தாடும் கொடியும்

பூவை நான்தான் என்றது

நால்வகை குணமும் ஒன்றாக பெண்மை

வாழ்வே இனிமை என்றது

பெண் : ஏதேதோ சொல்ல சொல்ல

என் உள்ளம் துள்ள துள்ள

ஆனந்த ராகம் பிறந்ததடி........

பெண் : தண்ணீரில் மேனி குளிர்ந்ததடி

கரையேறி வந்தால் கொதித்ததடி

மீன் வந்து தொட்டுத் தொட்டு

மேன்மேலும் பட்டுப் பட்டு

ஆள் தொட்ட இன்பம் பிறந்ததடி.....

பெண் : மனம் என்னும் பறவை பறக்கின்றது

மயக்கத்தில் எங்கெங்கேயோ மிதக்கின்றது

மான் கொண்ட விழிகள் மையோடு கலந்து

தேன் கொண்ட கவிதை படித்தது

ஏனடி பெண்ணே இல்லாத ஏக்கம்

கூறடி நெஞ்சம் துடித்தது

பெண் : வயதுக்கு வந்த பெண்மை

வாடாத பூவின் மென்மை

நீராடும்போது போராடுது........

பெண் : தண்ணீரில் மேனி குளிர்ந்ததடி

கரையேறி வந்தால் கொதித்ததடி

மீன் வந்து தொட்டுத் தொட்டு

மேன்மேலும் பட்டுப் பட்டு

ஆள் தொட்ட இன்பம் பிறந்ததடி.....

Song information

Singer: P. Susheela

Music by: Shankar Ganesh

Lyrics by: Vaali

Release information: From Vakkuruthi (1973) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: Shankar Ganesh

Explore this song