Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female Part

Thannanth thanimaiyilae

Thannanth thanimaiyilae

Udal thallaadum vayathinilae

Ungal punnagaiyai paarththirunthaal

Inbam pothaatho enthanukku…

Female Part

Thannanth thanimaiyilae

Udal thallaadum vayathinilae

Ungal punnagaiyai paarththirunthaal

Inbam pothaatho enthanukku….

Female Part

Manjalukku palamirunthaal

Enthan mangalaththil arulirunthaal

Manjalukku palamirunthaal

Enthan mangalaththil arulirunthaal

Female Part

Kungumaththil gunamirunthaal

Ondrum kuraiyaamal vaazha vaikkum

Female Part

Paththu murai piranthaalum

Ungal pakkathunai naan varuvaen

Petha pillai maranthaalum

Naan pillai pol valarnthiruppen

Naan pillai pol valarnthiruppen

Female Part

Thannanth thanimaiyilae

Udal thallaadum vayathinilae

Ungal punnagaiyai paarththirunthaal

Inbam pothaatho enthanukku….

Female Part

Naan vanangum deivamellaam

Ungal nalla gunam ariyaatho

Kovilukku koduththathellaam

Nanmai kondu vara maattaatho

Female Part

Moochchirukkum kaalam varai

Ungal mugam paarththu naaniruppaen

Kaattru nindru pogumendraal

Ungal kaaladiyil uyir koduppaen

Female Part

Thannanth thanimaiyilae

Udal thallaadum vayathinilae

Ungal punnagaiyai paarththirunthaal

Inbam pothaatho enthanukku….

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : தன்னந் தனிமையிலே

தன்னந் தனிமையிலே

உடல் தள்ளாடும் வயதினிலே

உங்கள் புன்னகையைப் பார்த்திருந்தால்

இன்பம் போதாதோ எந்தனுக்கு.................

பெண் : தன்னந் தனிமையிலே

உடல் தள்ளாடும் வயதினிலே

உங்கள் புன்னகையைப் பார்த்திருந்தால்

இன்பம் போதாதோ எந்தனுக்கு.................

பெண் : மஞ்சளுக்குப் பலமிருந்தால்

எந்தன் மங்கலத்தில் அருளிருந்தால்

மஞ்சளுக்குப் பலமிருந்தால்

எந்தன் மங்கலத்தில் அருளிருந்தால்

பெண் : குங்குமத்தில் குணமிருந்தால்

ஒன்றும் குறையாமல் வாழ வைக்கும்

பெண் : பத்து முறை பிறந்தாலும்

உங்கள் பக்கத்துணை நான் வருவேன்

பெத்த பிள்ளை மறந்தாலும்

நான் பிள்ளை போல் வளர்ந்திருப்பேன்

நான் பிள்ளை போல் வளர்ந்திருப்பேன்

பெண் : தன்னந் தனிமையிலே

உடல் தள்ளாடும் வயதினிலே

உங்கள் புன்னகையைப் பார்த்திருந்தால்

இன்பம் போதாதோ எந்தனுக்கு.................

பெண் : நான் வணங்கும் தெய்வமெல்லாம்

உங்கள் நல்ல குணம் அறியாதோ

கோவிலுக்குக் கொடுத்ததெல்லாம்

நன்மை கொண்டு வர மாட்டாதோ.....

பெண் : மூச்சிருக்கும் காலம் வரை

உங்கள் முகம் பார்த்து நானிருப்பேன்

காற்று நின்று போகுமென்றால்

உங்கள் காலடியில் உயிர் கொடுப்பேன்....

பெண் : தன்னந் தனிமையிலே

உடல் தள்ளாடும் வயதினிலே

உங்கள் புன்னகையைப் பார்த்திருந்தால்

இன்பம் போதாதோ எந்தனுக்கு.................

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From School Master (1973) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song