Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K.S. Chithra

Music by : Ilayaraja

Male Part

Poonghaatru un per solla ketenae indru

Female : Neeroottru yen thol konja paarthenae indru

Male Part

Theerththa karai orathilae

Female : Thaen sittughal ullathilae

Male Part

Kalyaana vaibhoghamdhaan

Female : Neeroottru yen thol konja paarthenae indru

Chorus

Lala laala laa laalaa laa lala

Laa laalaalaalaa laa laaa…

Male Part

Moonghil kaattoram mynaakal rendu

Mogha pan paadudhae….

Maelai kaattrodu kai serthu naanal

Kaadhal kondaadudhae..aaeee…

Female Part

Aalam vizhudhodu kili kootam aadum

Kaalam idhuvallavaa..aaa…

Eera siraghodu isai paadi thiriyum

Neram idhuvallavaa….

Male Part

Yedhaedho yennam thondra yeghaandham inghae

Female Part

Naan kaanum vannam yaavum needhanae anbae

Male Part

Vannam maaraamal meendum meendum

Female Part

Aasaigal eedaera koodum….

Male Part

Poonghaatru un per solla ketenae indru

Female Part

Jenma jenmangal aanaalum yenna

Jeevan unnodudhan

Devi sreedevi poovaaram sooda

Devan yennodudhaan..aaannn…

Male Part

Neela vaan kooda niram maari poghum

Nesam niram maarumaa

Kaala kaalangal ponaalum yenna

Kaadhal thadam maarumaa…

Female Part

Oyaamal unnai konjum

Oodhappoo vannam

Male Part

Raajaavin ah mutham kollum

Rojaappoo kannam

Female Part

Vaadai theendaadha vaazhaith thottam

Male Part

Aanandha ellaigal kaattum

Male Part

Poonghaatru un per solla ketenae indru

Female : Neeroottru yen thol konja paarthenae indru

Male Part

Theerththa karai orathilae

Female : Thaen sittughal ullathilae

Male Part

Kalyaana vaibhoghamdhaan

Male Part

Poonghaatru un per solla ketenae indru

Whistling : ……………………………………

தமிழ்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பூங்காற்று உன்

பேர் சொல்ல கேட்டேனே

இன்று

பெண் : நீரூற்று என்

தோள் கொஞ்ச பார்த்தேனே

இன்று

ஆண் : தீர்த்தக்கரை

ஓரத்திலே

பெண் : தேன் சிட்டுகள்

உள்ளத்திலே

ஆண் : கல்யாண

வைபோகம் தான்

பெண் : நீரூற்று என்

தோள் கொஞ்ச பார்த்தேனே

இன்று

குழு : .............................

ஆண் : மூங்கில் காட்டோரம்

மைனாக்கள் ரெண்டு

மோகப் பண் பாடுதே

மேலைக் காற்றோடு கை

சேர்த்து நாணல் காதல்

கொண்டாடுதே

பெண் : ஆலம் விழுதோடு

கிளிக்கூட்டம் ஆடும்

காலம் இதுவல்லவா

ஈரச் சிறகோடு இசைபாடித்

திரியும் நேரம் இது வல்லவா

ஆண் : ஏதேதோ

எண்ணம் தோன்ற

ஏகாந்தம் இங்கே

பெண் : நான் காணும்

வண்ணம் யாவும்

நீதானே அன்பே

ஆண் : வண்ணம்

மாறாமல் மீண்டும்

மீண்டும்

பெண் : ஆசைகள்

ஈடேறக் கூடும்

ஆண் : பூங்காற்று உன்

பேர் சொல்ல கேட்டேனே

இன்று

பெண் : ஜென்ம ஜென்மங்கள்

ஆனாலும் என்ன ஜீவன்

உன்னோடு தான் தேவி

ஸ்ரீதேவி பூவாரம் சூட

தேவன் என்னோடுதான்

ஆண் : நீல வான் கூட

நிறம் மாறிப் போகும்

நேசம் நிறம் மாறுமா

கால காலங்கள் போனாலும்

என்ன காதல் தடம் மாறுமா

பெண் : ஓயாமல்

உன்னைக் கொஞ்சும்

ஊதாப்பூ வண்ணம்

ஆண் : ராஜாவின் ஆ

முத்தம் கொள்ளும்

ரோஜாப்பூ கன்னம்

பெண் : வாடை தீண்டாத

வாழைத் தோட்டம்

ஆண் : ஆனந்த

எல்லைகள் காட்டும்

ஆண் : பூங்காற்று உன்

பேர் சொல்ல கேட்டேனே

இன்று

பெண் : நீரூற்று என்

தோள் கொஞ்ச பார்த்தேனே

இன்று

ஆண் : தீர்த்தக்கரை

ஓரத்திலே

பெண் : தேன் சிட்டுகள்

உள்ளத்திலே

ஆண் : கல்யாண

வைபோகம் தான்

ஆண் : பூங்காற்று உன்

பேர் சொல்ல கேட்டேனே

இன்று

விஷ்லிங் : .............................

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K.S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Vetri Vizha (1989) · Lyricist: Vaali

Explore this song