Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Isaignani Ilayaraja

Male Part

Needhaan en kanavu maganae

Vaa vaa kann thirandhu

Thaeyum vaan piraidhaan maganae

Naalai muzhu nilavu

Male Part

Medhuvaai thidamaai

Ezhuvaai en maganae

Male Part

Needhaan en kanavu maganae

Vaa vaa kann thirandhu

Mazhayaai karunai

Pozhivaan ingu avanae

Male Part

Neethaan en kanavu maganae…

Male Part

Yeraadhu ezhai sol

Endrum podhuvi

Idhu thaanae naam kanda

Unmai ulagil

Male Part

Vazhigalai ariyaadha

Indha vaazhkaiyil suvaiyillai

Nee vandhu vilaiyaadu

Endrum thozhvigal ini illai

Deivam kai viduma

Edhum iladhaar vaazhvilae

Male Part

Needhaan en kanavu maganae

Vaa vaa kann thirandhu

Medhuvaai thidamaai

Ezhuvaai en maganae

Male Part

Needhaan en kanavu maganae

Male Part

Theeraadha sogangal

Theerum sila naalil

Thee koda ozhi serkkum

Thaedum vizhiyil

Male Part

Kanavugal mei aagum

Adhu karpanai kidaiyadhu

Azhaithidum dhisai engum

Ini nee vandhu vilaiyaadu

Kaalam varumbodhu

Unai naadellaam potrumae

Male Part

Needhaan en kanavu maganae

Vaa vaa kann thirandhu

Thaeyum vaan piraidhaan maganae

Naalai muzhu nilavu

Male Part

Medhuvaai thidamaai

Ezhuvaai en maganae

Male Part

Needhaan en kanavu maganae

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இசைஞானி இளையராஜா

ஆண் : நீதான் என் கனவு மகனே

வா வா கண் திறந்து

தேயும் வான் பிறைதான் மகனே

நாளை முழு நிலவு

ஆண் : மெதுவாய் திடமாய்

எழுவாய் என் மகனே

ஆண் : நீதான் என் கனவு மகனே

வா வா கண் திறந்து

மழையாய் கருணை

பொழிவான் இங்கு அவனே

ஆண் : நீதான் என் கனவு மகனே

ஆண் : ஏறாது ஏழை சொல்

என்றும் பொதுவில்

இது தானே நாம் கண்ட

உண்மை உலகில்

ஆண் : வழிகளை அறியாத

இந்த வாழ்க்கையில் சுவையில்லை

நீ வந்து விளையாடு

என்றும் தோல்விகள் இனி இல்லை

தெய்வம் கை விடுமா

ஏதும் இல்லாதார் வாழ்விலே

ஆண் : நீதான் என் கனவு மகனே

வா வா கண் திறந்து

தேயும் வான் பிறைதான் மகனே

நாளை முழு நிலவு

ஆண் : நீதான் என் கனவு மகனே

ஆண் : தீராத சோகங்கள்

தீரும் சில நாளில்

தீக்கூட ஒளி சேர்க்கும்

தேடும் விழியில்

ஆண் : கனவுகள் மெய் ஆகும்

அது கற்பனை கிடையாது

அழைத்திடும் திசை எங்கும்

இனி நீ வந்து விளையாடு

காலம் வரும்போது

உனை நாடெல்லாம் போற்றுமே

ஆண் : நீதான் என் கனவு மகனே

வா வா கண் திறந்து

தேயும் வான் பிறைதான் மகனே

நாளை முழு நிலவு

ஆண் : மெதுவாய் திடமாய்

எழுவாய் என் மகனே

ஆண் : நீதான் என் கனவு மகனே......

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Isaignani Ilayaraja

Release information: From Thamezharasan (2020) · Lyricist: Pazhani Bharathi

Explore this song