Roman script
Singer : P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part Nandri solla vaarththaiyillai kannanae Endrum nallavarkku thunaiyirukkum mannanae Nandri solla vaarththaiyillai kannanae Endrum nallavarkku thunaiyirukkum mannanae Female Part Ondrumillai uravu endru enninaen Ennai udan pirappaai yaettrukkondaai Annanae Kannaa manivannaa Kannaa manivannaa Female Part Nandri solla vaarththaiyillai kannanae Endrum nallavarkku thunaiyirukkum mannanae Female Part Vaanam paarththathu intha bhoomiyaanathu Mazhai megangal uruvaanatho Devan vanthathum en paavam theernthathu Edhirkaalangal oliyaanatho Female Part Kuzhal polum kannaa un kural kettathu Un karunaithaan naan vaazha nizhal pottathu Kannaa manivannaa Kannaa manivannaa Female Part Nandri solla vaarththaiyillai kannanae Endrum nallavarkku thunaiyirukkum mannanae Female Part Koondil nindrathu chinna kuyil thudiththathu Sirai kadhavai indru thiranthaai andro Geedhai sonnavaa antha rathai mannavaa En kanavaai nee malarnthaai andro Female Part Nalam kaanum naalellaam nee thanthathu En ninaivellaam neeyallaal yaar kondathu Kannaa manivannaa Kannaa manivannaa Female Part Nandri solla vaarththaiyilla kannanae Endrum nallavarkku thunaiyirukkum mannanae
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : நன்றி சொல்ல வார்த்தையில்லை கண்ணனே என்றும் நல்லவர்க்கு துணையிருக்கும் மன்னனே நன்றி சொல்ல வார்த்தையில்லை கண்ணனே என்றும் நல்லவர்க்கு துணையிருக்கும் மன்னனே பெண் : ஒன்றுமில்லை உறவு என்று எண்ணினேன் என்னை உடன்பிறப்பாய் ஏற்றுக் கொண்டாய் அண்ணனே கண்ணா...மணிவண்ணா.... கண்ணா...மணிவண்ணா.... பெண் : நன்றி சொல்ல வார்த்தையில்லை கண்ணனே என்றும் நல்லவர்க்கு துணையிருக்கும் மன்னனே பெண் : வானம் பார்த்தது இந்த பூமியானது மழை மேகங்கள் உருவானதோ தேவன் வந்ததும் என் பாவம் தீர்ந்தது எதிர்காலங்கள் ஒளியானதோ பெண் : குழல் போலும் கண்ணா உன் குரல் கேட்டது உன் கருணைதான் நான் வாழ நிழல் போட்டது கண்ணா...மணிவண்ணா.... கண்ணா...மணிவண்ணா.... பெண் : நன்றி சொல்ல வார்த்தையில்லை கண்ணனே என்றும் நல்லவர்க்கு துணையிருக்கும் மன்னனே பெண் : கூண்டில் நின்றது சின்னக் குயில் துடித்தது சிறை கதவை இன்று திறந்தாய் அன்றோ கீதை சொன்னவா அந்த ராதை மன்னவா என் கனவாய் நீ மலர்ந்தாய் அன்றோ பெண் : நலம் காணும் நாளெல்லாம் நீ தந்தது என் நினைவெல்லாம் நீயல்லால் யார் கொண்டது கண்ணா...மணிவண்ணா.... கண்ணா...மணிவண்ணா.... பெண் : நன்றி சொல்ல வார்த்தையில்லை கண்ணனே என்றும் நல்லவர்க்கு துணையிருக்கும் மன்னனே
Song information
Singer: P. Susheela
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Unakkum Vazhvu Varum (1978) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Unakkum Vazhvu Varum
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali