Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Male Part

Nalla samsaaram vaaithadharkku

Nandri solvenae naan unakku

Unnai adaindhen thunaiyaaga

Munnam purindha thavamaaga

Vittu pogaadhammaa uravu

Idhu thaeyaadha vennilavu

Andru potten poo maalai

Indru padithaen paamaalai

Male Part

Nalla samsaaram vaaithadharkku

Nandri solvenae naan unakku

Male Part

Vaan paarthadhae nee paarthida

Sippi ondru vanna sippi ondru

Female Part

Neer vaarthadhum undaanadhae

Muthu ondru chinna muthu ondru

Male Part

Aaraezhu maadhangal ponaal

Aaraaro paattingu kaetkkum

Female Part

Aavaaram poo pondra kannaal

Appaavai en pillai paarkkum

Male Part

Nitham nitham thandha anbu mutham

Female Part

Pillaikku thaan ini aaga motham

Male Part

Ondrirandu vendum endru

Unnai naan kettpen

Female Part

Samsaaram aanadharkku

Nandri solvenae dheivathirkku

Unnai adaindhen thunaiyaaga

Munnam purindha thavamaaga

Vittu pogaadhaiyaa uravu

Idhu thaeyaadha vennilavu

Mm.mm..mm…mm…mm…mm..

Male Part

Pon maanaiyum semmeenaiyum

Kannil kanden undhan kannil kanden

Female Part

Paalaatraiyum thaenaatraiyum

Unnil kanden kannae unnil kanden

Male Part

Unnodu naan vaazhum veedu

Aanandha poo pookkum kaadu

Female Part

Andrilgal ondraana koodu

Aagaadhu vaeraedhum eedu

Male Part

Thaaram vandhaal

Konjum thendral endru

Female Part

Pillai vandhaan

Vanna mullai endru

Male Part

Pennarasi ponnarasi

Unnai pol yaedhu

Female Part

Samsaaram aanadharkku

Nandri solvenae dheivathirkku

Male Part

Unnai adaindhen thunaiyaaga

Munnam purindha thavamaaga

Female Part

Vittu pogaadhaiyaa uravu

Idhu thaeyaadha vennilavu

Male Part

Andru potten poo maalai

Indru padithaen paamaalai

Female Part

Undhan samsaaram aanadharkku

Nandri solvenae dheivathirkku

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நல்ல சம்சாரம் வாய்த்ததற்கு

நன்றி சொல்வேனே நான் உனக்கு

உன்னை அடைந்தேன் துணையாக

முன்னம் புரிந்த தவமாக

விட்டுப் போகாதம்மா உறவு

இது தேயாத வெண்ணிலவு

அன்று போட்டேன் பூ மாலை

இன்று படித்தேன் பாமாலை

ஆண் : நல்ல சம்சாரம் வாய்த்ததற்கு

நன்றி சொல்வேனே நான் உனக்கு

ஆண் : வான் பார்த்ததே நீ பார்த்திட

சிப்பி ஒன்று வண்ணச் சிப்பி ஒன்று

பெண் : நீர் வார்த்ததும் உண்டானதே

முத்து ஒன்று சின்ன முத்து ஒன்று

ஆண் : ஆறேழு மாதங்கள் போனால்

ஆராரோ பாட்டிங்கு கேட்கும்

பெண் : ஆவாரம் பூப் போன்ற கண்ணால்

அப்பாவை என் பிள்ளை பார்க்கும்

ஆண் : நித்தம் நித்தம் தந்த அன்பு முத்தம்

பெண் : பிள்ளைக்குத்தான் இனி ஆக மொத்தம்

ஆண் : ஒன்றிரண்டு வேண்டும் என்று

உன்னை நான் கேட்டேன்

பெண் : சம்சாரம் ஆனதற்கு

நன்றி சொல்வேனே தெய்வத்திற்கு

உன்னை அடைந்தேன் துணையாக

முன்னம் புரிந்த தவமாக

விட்டுப் போகாதய்யா உறவு

இது தேயாத வெண்ணிலவு

ம்ம்.....ம்ம்.....ம்ம்.....ம்ம்....ம்ம்....ம்ம்....

ஆண் : பொன் மானையும் செம்மீனையும்

கண்ணில் கண்டேன்

உந்தன் கண்ணில் கண்டேன்

பெண் : பாலாற்றையும் தேனாற்றையும்

உன்னில் கண்டேன்

கண்ணே உன்னில் கண்டேன்

ஆண் : உன்னோடு நான் வாழும் வீடு

ஆனந்தப் பூப் பூக்கும் காடு

பெண் : அன்றில்கள் ஒன்றான கூடு

ஆகாது வேறேதும் ஈடு

ஆண் : தாரம் வந்தாள்

கொஞ்சும் தென்றல் என்று

பெண் : பிள்ளை வந்தான்

வண்ண முல்லை என்று

ஆண் : பெண்ணரசி பொன்னரசி

உன்னைப் போல் ஏது

பெண் : சம்சாரம் ஆனதற்கு

நன்றி சொல்வேனே தெய்வத்திற்கு

ஆண் : உன்னை அடைந்தேன் துணையாக

முன்னம் புரிந்த தவமாக

பெண் : விட்டுப் போகாதய்யா உறவு

இது தேயாத வெண்ணிலவு

ஆண் : அன்று போட்டேன் பூ மாலை

இன்று படித்தேன் பாமாலை

பெண் : உந்தன் சம்சாரம் ஆனதற்கு

நன்றி சொல்வேனே தெய்வத்திற்கு

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Maamiyar Veedu (1993) · Lyricist: Vaali

Explore this song