Roman script

Singer : Vani Jayram

Music by : K. V. Mahadevan

Female Part

Mounam kalaiyaatho swami

Mounam kalaiyaatho swami

Idhu mazhaiyai edhirpaarththu

Mayanum udal verththu

Thanalaai kodhikkindra bhoomi….ee….

Female Part

Mounam kalaiyaatho swami

Idhu mazhaiyai edhirpaarththu

Mayanum udal verththu

Thanalaai kodhikkindra bhoomi….ee….

Female Part

Mounam kalaiyaatho swami

Female Part

Idhazhoram naaiyaada imaiyoram vizhiyaada

Ilavenir nilavaadavae

Kani thaangum kodiyaada pani thoongum malaraada

Kalai maanum inaiyaadavae

Female Part

Idhazhoram naaiyaada imaiyoram vizhiyaada

Ilavenir nilavaadavae

Kani thaangum kodiyaada pani thoongum malaraada

Kalai maanum inaiyaadavae

Female Part

Nizhal meamum koondhalil aadi vara

Manimegalai noolidai moodi vara

Intha menagai maeniyum kodi pera

Nava maamuni sannathi thedi vara

Thiruvaai malarnthida vendum….mmmm….

Female Part

Mounam kalaiyaatho swami

Idhu mazhaiyai edhirpaarththu

Mayanum udal verththu

Thanalaai kodhikkindra bhoomi….ee….

Female Part

Vasantha kaalanal idhu pol

Vaasal thedi varumo

Nenjil vilaintha nyanagal

Enai pol rajaboam tharumo

Female Part

Ezhunthu varungal sugangal melum melum malara

Kannai thiranthu paarungal edhiril devadevi ulava

Female Part

Kallum kaniyaaggum mullum malaraagum

Kanni mayilaadum velaiyil ullam urugaatho

Vellam pergaatho otti uravaadum leelaiyil

Female Part

Thavaththai kalaikka vantha devathai

Thazhuvi pozhiya vantha thaen mazhai

Ulagai mayakkum vannappoonaai

Udhattil eduththu vantha menagai….menagai….menagai…..

தமிழ்

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : மௌனம் கலையாதோ சுவாமி

மௌனம் கலையாதோ சுவாமி

இது மழையை எதிர்ப்பார்த்து

மயங்கும் உடல் வேர்த்து

தணலாய் கொதிக்கின்ற பூமி......ஈ.....

பெண் : மௌனம் கலையாதோ சுவாமி

இது மழையை எதிர்ப்பார்த்து

மயங்கும் உடல் வேர்த்து

தணலாய் கொதிக்கின்ற பூமி....ஈ.......

பெண் : மௌனம் கலையாதோ சுவாமி

பெண் : இதழோரம் நகையாட இமையோரம் விழியாட

இளவேனிற் நிலவாடவே

கனி தாங்கும் கொடியாட பனி தூங்கும் மலராட

கலை மானும் இணையாடவே

பெண் : இதழோரம் நகையாட இமையோரம் விழியாட

இளவேனிற் நிலவாடவே

கனி தாங்கும் கொடியாட பனி தூங்கும் மலராட

கலை மானும் இணையாடவே

பெண் : நிழல் மேகமும் கூந்தலில் ஆடி வர

மணிமேகலை நூலிடை மூடி வர

இந்த மேனகை மேனியும் கோடி பெற

நவ மாமுனி சந்நிதி தேடி வர

திருவாய் மலர்ந்திட வேண்டும்.....ம்ம்ம்ம்....

பெண் : மௌனம் கலையாதோ சுவாமி

இது மழையை எதிர்ப்பார்த்து

மயங்கும் உடல் வேர்த்து

தணலாய் கொதிக்கின்ற பூமி....ஈ.......

பெண் : வசந்த காலங்கள் இதுபோல்

வாசல் தேடி வருமோ

நெஞ்சில் விளைந்த ஞானங்கள்

எனைப் போல் ராஜபோகம் தருமோ

பெண் : எழுந்து வாருங்கள் சுகங்கள் மேலும் மேலும் மலர

கண்ணை திறந்து பாருங்கள் எதிரில் தேவதேவி உலவ

பெண் : கல்லும் கனியாகும் முள்ளும் மலராகும்

கன்னி மயிலாடும் வேளையில் உள்ளம் உருகாதோ

வெள்ளம் பெருகாதோ ஒட்டி உறவாடும் லீலையில்

பெண் : தவத்தை கலைக்க வந்த தேவதை

தழுவி பொழிய வந்த தேன் மழை

உலகை மயக்கும் வண்ணப்பூனகை

உதட்டில் எடுத்து வந்த மேனகை......மேனகை.....மேனகை..

Song information

Singer: Vani Jayram

Music by: K. V. Mahadevan

Release information: From Asha (1985) · Lyricist: Vaali

Explore this song