Roman script

Singer : Seergazhi.S.Govindarajan

  Music by : Viswanathan-Ramamoorthy

Male Part

Maranathai enni kalangidum

Vijaiyaa…

Maranathin thanmai solven…

Maanidar aanmaa maranameidhaadhu…

Marupadi pirandhirukkum maeniyai kolvaai

Maeniyai kolvaai

Veerathil adhuvum ondru

Nee vittu vittaalum avargalin maeni

Vendhu thaan theerum or naal… aaaAa…

Male Part

Ennai arindhaai ellaa uyirum

Enadhendrum arindhu kondaai

Kannan manadhu kal manadhendro

Gaandeebam nazhuva vittaai

Gaandeebam nazhuva vittaai

Male Part

Mannarum naanae

Makkalum naanae

Maram chedi kodiyum naanae

Sonnavan kannan solbavan kannan…

Thunindhu nil dharmam vaazha… aaa…

Male Part

Punniyam idhuvendru

Ulagam sonnaal…

Andha punniyam kannanukkae

Pottruvaar pottralum

Thoottruvaar thoottralum

Poghattum kannanukkae

Male Part

Kannanae kaattinaan

Kannanae saattrinaan

Kannanae kolai seigindraan

Gaandeebam ezhuga

Nin kai vanmai ezhugha

Ikkalamelaam sivakka vaazhga…

Aa…aa… aa… aaa….aa….aa….

Male Part

Parithraanaaya saadhoonaam

Vinaasaaya chadhushkruthaam

Dharma samsthaapanaarthaaya

Sambhavaami yughae yughae…

தமிழ்

பாடகர் : சீர்காழி எஸ். கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : மரணத்தை எண்ணிக் கலங்கிடும்

விஜயா...

மரணத்தின் தன்மை சொல்வேன்...

மானிடர் ஆன்மா மரணமெய்தாது...

மறுபடி பிறந்திருக்கும் மேனியைக் கொல்வாய்

மேனியைக் கொல்வாய்

வீரத்தில் அதுவும் ஒன்று

நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி

வெந்துதான் தீரும் ஓர் நாள்.....ஆ....ஆ...

ஆண் : என்னை அறிந்தாய் எல்லா உயிரும்

எனதென்றும் அறிந்து கொண்டாய்

கண்ணன் மனது கல் மனதென்றோ

காண்டீபம் நழுவ விட்டாய்

காண்டீபம் நழுவ விட்டாய்

ஆண் : மன்னரும் நானே

மக்களும் நானே...

மரம் செடி கொடியும் நானே

சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்...

துணிந்து நில் தர்மம் வாழ.....ஆ...

ஆண் : புண்ணியம் இதுவென்று

உலகம் சொன்னால்...

அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே

போற்றுவார் போற்றலும்

தூற்றுவார் தூற்றலும்

போகட்டும் கண்ணனுக்கே

ஆண் : கண்ணனே காட்டினான்

கண்ணனே சாற்றினான்

கண்ணனே கொலை செய்கின்றான்

காண்டீபம் எழுக

நின் கை வன்மை எழுக

இக்களமெலாம் சிவக்க வாழ்க...

ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...

ஆண் : பரித்ராணாய சாதூனாம்

விநாசாய சதுஷ்க்ருதாம்

தர்ம சம்ஸ்தாபனார்த்தாய

சம்பவாமி யுகே யுகே...

Song information

Singer: Seergazhi.S.Govindarajan

Music by: Viswanathan-Ramamoorthy

Release information: From Karnan (1964) · Lyricist: Kannadasan

Explore this song