Roman script

Singers : L. R. Eswari and P. Susheela

Music by : Vishwanathan – Ramamoorthy

Female Part

Vaanagamae vaiyagamae

Valarnthu varum thaai inamae…ae…

Aan ulaga medaiyilae

Aasai nadai podaathae

Aasai nadai podaathae

Female Part

Malarukku thendral pagaiyaanaal

Adhu malarndhida kadhiravan thunaiyundu

Malarukku thendral pagaiyaanaal

Adhu malarndhida kadhiravan thunaiyundu

Nilavukku vaanam pagaiyaanaal

Adhu nadandhida verae vazhi yedhu

Malarukku thendral pagaiyaanaal

Adhu malarndhida kadhiravan thunaiyundu

Female Part

Paravaikku siragu pagaiyaanaal

Adhu padhungi vaazhndhida kaalgalundu

Uravukku nenjae pagaiyanaal

Mannil uyir inam perugida vagaiyedhu

Nilavukku vaanam pagaiyaanal

Adhu nadandhida verae vazhi yedhu

Female Part

Malarukku thendral pagaiyaanaal

Adhu malarndhida kadhiravan thunaiyundu

Female Part

Padagukku thudupu pagaiyaanaal

Angu paai marathaalae udhaviyundu

Kadalukku neeru pagaiyaanaal

Angu kadhai sollum alaigalukku idamaedhu

Female Part

Malarukku thendral pagaiyaanaal

Adhu malarndhida kadhiravan thunaiyundu

Female Part

Kannukku paarvai pagaiyaanaal

Adhai karuthaal unarndhida vazhiyundu

Female Part

Pennuku thunaivan pagaiyaanaal

Andha paedhaiyin vaazhvil oliyedhu

Both : Malarukku thendral pagaiyaanaal

Adhu malarndhida kadhiravan thunaiyundu

Nilavukku vaanam pagaiyaanal

Adhu nadandhida verae vazhi yedhu

Malarukku thendral pagaiyaanaal

Adhu malarndhida kadhiravan thunaiyundu

தமிழ்

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண் : வானகமே வையகமே

வளர்ந்து வரும் தாயினமே

ஆணுலக மேடையிலே

ஆசை நடை போடாதே ..

ஆசை நடை போடாதே

பெண் : மலருக்குத் தென்றல் பகையானால்

அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு

மலருக்குத் தென்றல் பகையானால்

அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு

நிலவுக்கு வானம் பகையானால்

அது நடந்திட வேறே வழி ஏது

மலருக்குத் தென்றல் பகையானால்

அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு

பெண் : பறவைக்குச் சிறகு பகையானால்

அது பதுங்கி வாழ்ந்திடக் கால்களுண்டு

உறவுக்கு நெஞ்சே பகையானால்

மண்ணில் உயிரினம் பெருகிட வகை ஏது

நிலவுக்கு வானம் பகையானால்

அது நடந்திட வேறே வழி ஏது

பெண் : மலருக்குத் தென்றல் பகையானால்

அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு

பெண் : படகுக்குத் துடுப்பு பகையானால்

அங்கு பாய்மரத்தாலே உதவியுண்டு

கடலுக்கு நீரே பகையானால்

அங்கு கதை சொல்லும் அலைகளுக்கிடமேது

பெண் : மலருக்குத் தென்றல் பகையானால்

அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு

பெண் : கண்ணுக்குப் பார்வை பகையானால்

அது கருத்தால் உணர்ந்திட வழியுண்டு

பெண் : பெண்ணுக்குத் துணைவன் பகையானால்

அந்தப் பேதையின் வாழ்வில் ஒளி ஏது

பெண்கள் : மலருக்குத் தென்றல் பகையானால்

அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு

நிலவுக்கு வானம் பகையானால்

அது நடந்திட வேறே வழி ஏது

மலருக்குத் தென்றல் பகையானால்

அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு

Song information

Singers: L. R. Eswari and P. Susheela

Music by: Vishwanathan – Ramamoorthy

Release information: From Enga Veettu Pillai (1965) · Lyricist: Aalangudi Somu

Explore this song