Roman script

Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female Part

Vanagamae vaiyagamae vaazhthuraikka vaarungal

Vaaradha uravenakku vandhadhendru koorungal

Thaer kondu vaarungal thirukolam podungal

Seemaatti kalyaana oorvalathil koodungal

Oorvalathil koodungal

Female Part

Madhuraikku sendraal megangalae idhai

Mangai meenatchikku koorungalen

Kaasikku sendraal megangale idhai

Gangaiyin kaadhinil sollungalen

Madhuraikku sendraal megangalae idhai

Mangai meenatchikku koorungalen

Female Part

Aarathi thattodu valam varum pengal

Aasaiyil vilaiyaadum manavalan kangal

Orathil thaan nindru oru paarvai parkka

Ullathil uruvaagum thai madha pongal

Female Part

Madhuraikku sendraal megangalae idhai

Mangai meenatchikku koorungalen

Female Part

Androru naal poongodhai kannanai aandaal

Aandadhinaal aval peyar kooda aandaal

Mannanin tholukku malar soodi koduthaal

Mannanin tholukku malar soodi koduthaal

Manadhinai naan kaana ennaiyum alaithaal

Female Part

Madhuraikku sendraal megangalae idhai

Mangai meenatchikku koorungalen

Female Part

Indru en nilai solla varthaigal illai

Ini endhan thevaikku sodhanai illai

Indru en nilai solla varthaigal illai

Ini endhan thevaikku sodhanai illai

Kannanin kaigalil adaikkalam koduppen

Kannanin kaigalil adaikkalam koduppen

Kallilum valuvaaga karpudan iruppen

Female Part

Madhuraikku sendraal megangalae idhai

Mangai meenatchikku koorungalen

Kaasikku sendraal megangale idhai

Gangaiyin kaadhinil sollungalen

Madhuraikku sendraal megangalae idhai

Mangai meenatchikku koorungalen

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி . மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : வானகமே வையகமே வாழ்த்துரைக்க வாருங்கள்

வாராத உறவெனக்கு வந்ததென்று கூறுங்கள்

தேர் கொண்டு வாருங்கள் திருக்கோலம் போடுங்கள்

சீமாட்டி கல்யாண ஊர்வலத்தில் கூடுங்கள்

ஊர்வலத்தில் கூடுங்கள்.........!

பெண் : மதுரைக்கு சென்றால் மேகங்களே இதை

மங்கை மீனாட்சிக்கு கூறுங்களேன்

காசிக்கு சென்றால் மேகங்களே இதை

கங்கையின் காதிநில் சொல்லுங்களேன்

மதுரைக்கு சென்றால் மேகங்களே இதை

மங்கை மீனாட்சிக்கு கூறுங்களேன்

பெண் : ஆரத்தி தட்டோடு வலம் வரும் பெண்கள்

ஆசையில் விளையாடும் மணவாளன் கண்கள்

ஓரத்தில்தான் நின்று ஒரு பார்வை பார்க்க

உள்ளத்தில் உருவாகும் தை மாதப் பொங்கல்

பெண் : மதுரைக்கு சென்றால் மேகங்களே இதை

மங்கை மீனாட்சிக்கு கூறுங்களேன்

பெண் : அன்றொரு நாள் பூங்கோதை கண்ணனை ஆண்டாள்

ஆண்டதினால் அவள் பெயர் கூட ஆண்டாள்

மன்னனின் தோளுக்கு மலர் சூடிக் கொடுத்தாள்

மன்னனின் தோளுக்கு மலர் சூடிக் கொடுத்தாள்

மனதினை நான் காண என்னையும் அழைத்தாள்

பெண் : மதுரைக்கு சென்றால் மேகங்களே இதை

மங்கை மீனாட்சிக்கு கூறுங்களேன்

பெண் : இன்று என் நிலை சொல்ல வார்த்தைகள் இல்லை

இனி எந்தன் தேவைக்கு சோதனை இல்லை

இன்று என் நிலை சொல்ல வார்த்தைகள் இல்லை

இனி எந்தன் தேவைக்கு சோதனை இல்லை

கண்ணனின் கைகளில் அடைக்கலம் கொடுத்தேன்

கண்ணனின் கைகளில் அடைக்கலம் கொடுத்தேன்

கல்லிலும் வலுவாக கற்புடன் இருப்பேன்

பெண் : மதுரைக்கு சென்றால் மேகங்களே இதை

மங்கை மீனாட்சிக்கு கூறுங்களேன்

காசிக்கு சென்றால் மேகங்களே இதை

கங்கையின் காதிநில் சொல்லுங்களேன்

மதுரைக்கு சென்றால் மேகங்களே இதை

மங்கை மீனாட்சிக்கு கூறுங்களேன்

Song information

Singer: P. Susheela

Music by: K. V. Mahadevan

Lyrics by: Kannadasan

Release information: From Thaaliya Salangaiya (1977) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan

Explore this song