Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Dharma Teja

Male Part

Madhurai meenatchi devi

Arulaatchi seiyum madhurai

Thamizhai ulagaala seidha

Uyir moochu engal madhurai

Male Part

Sithirai thingalil vaigai nadhi

Kallazhagarai kandathum podum jadhi

Sollilum seyalilum thurithagathi

Soll kaathidum madhuraiyil theiva nidhi

Iravu muzhuvadhum vizhithu ulavum madhura pathi

Male Part

Madhurai meenatchi devi

Arulaatchi seiyum madhurai

Male Part

Graama kalai kaaviyam

Aadal kalai ooviyam

Sirppa kalai ezhil maevum

Thamil vaazhum arulaalaiyam

Male Part

Konjam vizhi paarvaiyum

Sindhum isai korvaiyum

Sondhamennum manam thaedum

Dhinam koodum uravaayiram

Male Part

Naan maada koodal nagaram

Vaan meedhu modha uyarum

Pudhu sandham kodi valarum

Thamizh sanga geetham malarum

Madhurai nagaram mozhiyin agaram thamizh sigaram

Male Part

Nettri kannai kandathu

Kuttramena chonnadhu

Eesan avan isai paadal

Pizhai endru thamizh vendrathu

Veeram ulla mann idhu

Vettriyudan vaazhudhu

Vaanmadhu valainthaengal boommikku

Vazhi kaattudhu

Male Part

Thaerodum veedhi mayangum

Deiveega naadham muzhangum

Paamaalai paadum arangam

Poomaalai soodi vanangum

Madhurai nagaram mozhiyin agaram thamizh sigaram

Male Part

Madhurai meenatchi devi

Arulaatchi seiyum madhurai

Thamizhai ulagaala seidha

Uyir moochu engal madhurai

Male Part

Sithirai thingalil vaigai nadhi

Kallazhagarai kandathum podum jadhi

Sollilum seyalilum thurithagathi

Soll kaathidum madhuraiyil theiva nidhi

Iravu muzhuvadhum vizhithu ulavum madhura pathi

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : தர்மா தேஜா

ஆண் : மதுரை... மீனாட்சி தேவி

அருளாட்சி செய்யும் மதுரை

தமிழை உலகாளச் செய்த

உயிர் மூச்சு எங்கள் மதுரை

ஆண் : சித்திரைத் திங்களில் வைகை நதி

கள்ளழகரைக் கண்டதும் போடும் ஜதி

சொல்லிலும் செயலிலும் துரிதகதி

சொல் காத்திடும் மதுரையில் தெய்வ நிதி

இரவு முழுதும் விழித்து உலவும் மதுர பதி

ஆண் : மதுரை மீனாட்சி தேவி

அருளாட்சி செய்யும் மதுரை.....

ஆண் : கிராம கலைக் காவியம்

ஆடல் கலை ஓவியம்

சிற்பக் கலை எழில் மேவும்

தமிழ் வாழும் அருளாலயம்

ஆண் : கொஞ்சும் விழிப் பார்வையும்

சிந்தும் இசைக் கோர்வையும்

சொந்தமெனும் மனம் தேடும்

தினம் கூடும் உறவாயிரம்

ஆண் : நான் மாடக் கூடல் நகரம்

வான் மீது மோத உயரும்

புது சங்கம் கோடி வளரும்

தமிழ்ச் சங்க கீதம் மலரும்

மதுரை நகரம் மொழியின் அகரம் தமிழ் சிகரம்...

ஆண் : நெற்றிக் கண்ணைக் கண்டது

குற்றமெனச் சொன்னது

ஈசன் அவன் இசைப் பாடல்

பிழை என்று தமிழ் வென்றது

வீரம் உள்ள மண்ணிது வெற்றியுடன் வாழுது

வானமது வளைந்தெங்கள் பூமிக்கு வழி காட்டுது

ஆண் : தேரோடும் வீதி மயங்கும்

தெய்வீக நாதம் முழங்கும்

பாமாலை பாடும் அரங்கம்

பூமாலை சூடி வணங்கும்

மதுரை நகரம் மொழியின் அகரம் தமிழ் சிகரம்

ஆண் : மதுரை மீனாட்சி தேவி

அருளாட்சி செய்யும் மதுரை

தமிழை உலகாளச் செய்த

உயிர் மூச்சு எங்கள் மதுரை

ஆண் : சித்திரைத் திங்களில் வைகை நதி

கள்ளழகரைக் கண்டதும் போடும் ஜதி

சொல்லிலும் செயலிலும் துரிதகதி

சொல் காத்திடும் மதுரையில் தெய்வ நிதி

இரவு முழுதும் விழித்து உலவும் மதுர பதி..

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Dharma Teja

Release information: From Nee Naan Mattum (2012) · Lyricist: Marudha Bharani

Explore this song