Roman script

Singer : P. Susheela

Music by : G. Devarajan

Female Part

Madha vedhanaayagi

Un magalin kuraiyai kel amma

Female Part

Madha vedhanaayagi

Un magalin kuraiyai kel amma

Ezhai ennai aadhari

Nee indrael vaazhvum yaedhamma

Maadha ……………

Female Part

Siluvai konda nizhalai thaedi

Paravai ondru vandhathu

En thiruvae thaayin uruvae endru

Kavidhai paadi nindrathu

Female Part

Melugaai unadhu koyilil

Naan urugum indha velaiyil

Karunai kaattu annaiyae

Unai panindhen endhan annaiyae

Annaiyae…ae…. annaiyae…ae…

Female Part

Un paadham engal raaja sabai

Adhu paavam illaa gyaana sabai

Vaedham pottrum thaththuvam nee

En vizhigal theettum siththiram nee

Female Part

Vaanam boomi aanaval nee

En devan thannai eendraval nee

Noiyai theerkum marunthaanaai

Pasi naerum bodhu virunthaanaai

Annaiyae…ae…. annaiyae…ae…

Female Part

Madha vedhanaayagi

Un magalin kuraiyai kel amma

Ezhai ennai aadhari

Nee indrael vaazhvum yaedhamma

Maaadhaaa….

தமிழ்

பாடகி : பி . சுஷீலா

இசை அமைப்பாளர் : ஜி. தேவராஜன்

பெண் : மாதா....வேதநாயகி

உன் மகளின் குறையை கேளம்மா

பெண் : மாதா....வேதநாயகி

உன் மகளின் குறையை கேளம்மா

ஏழை என்னை ஆதரி

நீ இன்றேல் வாழ்வும் ஏதம்மா...

மாதா ....

பெண் : சிலுவை கொண்ட நிழலைத் தேடி

பறவை ஒன்று வந்தது

என் திருவே தாயின் உருவே என்று

கவிதை பாடி நின்றது

பெண் : மெழுகாய் உனது கோயிலில் நான்

உருகும் இந்த வேளையில்

கருணை காட்டு அன்னையே

உனை பணிந்தேன் எந்தன் அன்னையே...

அன்னையே... அன்னையே...

பெண் : உன் பாதம் எங்கள் ராஜ சபை

அது பாவம் இல்லா ஞான சபை

வேதம் போற்றும் தத்துவம் நீ என்

விழிகள் தீட்டும் சித்திரம் நீ

பெண் : வானம் பூமி ஆனவள் நீ

என் தேவன் தன்னை ஈன்றவள் நீ

நோயைத் தீர்க்கும் மருந்தானாய்

பசி நேரும்போது விருந்தானாய்

அன்னையே........ அன்னையே

பெண் : மாதா....வேதநாயகி

உன் மகளின் குறையை கேளம்மா

ஏழை என்னை ஆதரி

நீ இன்றேல் வாழ்வும் ஏதம்மா...

மாதா ....

Song information

Singer: P. Susheela

Music by: G. Devarajan

Release information: From Villiyanur Matha (1983) · Lyricist: Vaali

Explore this song