Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female Part

Kanna manivannaa mugunthaa muraarae

Kanavu kandaen kannaa

Nee kai koduthaai manivannaa

Kanavu kandaen kannaa

Nee kai koduthaai manivannaa

Female Part

Manamenum solaiyil malar parithaen naan

Manamenum solaiyil malar parithaen naan

Maalaigal seithu manamudiththaai nee

Maalaigal seithu manamudiththaai nee

Female Part

Kanavu kandaen kannaa

Nee kai koduthaai manivannaa

Female Part

Panthal meedhoru koondhal thoranam

Vaazhaigal aadi kandaen

Paadum mangal melam thaalam

Oorvalam poe vara kandaen

Female Part

Mathar koottam kaigal thaangum

Manjal kungumam kandaen

Maalai soodum mangai naanun

Maaya karunai kandaen

Female Part

Harae krishna krishna krishna

Krishna harae harae krishna harae

Harae krishna krishna krishna

Krishna harae harae krishna harae

Female Part

Thanthai magalai kaalai kaiyil

Thaarai vaarthida kanadaen

Sontham suttram vaazhiya endrae

Malargal thoovida kndaen

Female Part

Paathi nilaavil panjanai meedhu

Naanam pongida kandaen

Paalum pazhamum kandaen adhil

Paranthaaman unai kandaen

Female Part

Kanavu kandaen kannaa

Nee kai koduthaai manivannaa

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : கண்ணா.......மணிவண்ணா.....முகுந்தா முராரே...

கனவு கண்டேன் கண்ணா

நீ கை கொடுத்தாய் மணிவண்ணா

கனவு கண்டேன் கண்ணா

நீ கை கொடுத்தாய் மணிவண்ணா

பெண் : மனமெனும் சோலையில் மலர் பறித்தேன் நான்

மனமெனும் சோலையில் மலர் பறித்தேன் நான்

மாலைகள் செய்து மணமுடித்தாய் நீ

மாலைகள் செய்து மணமுடித்தாய் நீ

பெண் : கனவு கண்டேன் கண்ணா

நீ கை கொடுத்தாய் மணிவண்ணா

பெண் : பந்தல் மீதொரு கூந்தல் தோரணம்

வாழைகள் ஆடிக் கண்டேன்

பாடும் மங்கல மேளம் தாளம்

ஊர்வலம் போய்வரக் கண்டேன்

பெண் : மாதர் கூட்டம் கைகள் தாங்கும்

மஞ்சள் குங்குமம் கண்டேன்

மாலை சூடும் மங்கை நானுன்

மாயக் கருணைக் கண்டேன்

பெண் : ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண

கிருஷ்ண ஹரே..ஹரே..கிருஷ்ண ஹரே

ஸ்ரீ கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண

கிருஷ்ண...ஹரே.....ஹரே.....கிருஷ்ண...ஹரே

பெண் : தந்தை மகளை காளைக் கையில்

தாரை வார்த்திடக் கண்டேன்

சொந்தம் சுற்றம் வாழிய என்றே

மலர்கள் தூவிடக் கண்டேன்

பெண் : பாதி நிலாவில் பஞ்சணை மீது

நாணம் பொங்கிடக் கண்டேன்

பாலும் பழமும் கண்டேன் அதில்

பரந்தாமன் உனைக் கண்டேன்....

பெண் : கனவு கண்டேன் கண்ணா

நீ கை கொடுத்தாய் மணிவண்ணா

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Paasa Deepam (1973) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song