Roman script
Singer : Hari Charan Music by : Anil Srinivasan Lyrics by : Vairamuthu Male Part Kanakanden pen paavaai .. Kanaa kanden Nilakaala iravil thendral Neendhi varum poluthil Kanaa..aaa kanden Male Part Valar mulai pendir Varisai thataendhi vara Thalar nadai maadhar Thaangi vazhiyura Valar pirai pennaal Vandhen idam pidikka Kilar manam kalikolla Kanaa…kanden penpaavaai… Male Part Vaazhai ilam pachai Variththor aadaiyilae Thaazhai narunguzhal Thaiyalaal veetrirukka Ezhai oruvan ezhukodi Pon konda Pezhai kandathu pol Pithuttren pen paavaai…. Male Part Uyirae enbaeno Ullathil ver konda Payirae enbaeno Pasi kandaan nirai seidha Vayirae enbaeno Vaazhvinai kattuvitha Kayirae enabenoo Karuthazhindhen pen paavaai… Kanaaa kanden pen paavaai… Male Part Enganam munnor Iyattri vagutharo Anganam medai Amaitha pandharkeezh Enganam vaazhatholi Elundhu nalam parappa Kanganam katta Kanaa kanden pen paavaai…..pavaaaaiiii.. Pen paaavaaii.. Male Part Vaanpoottum villin Vanna thiruvudaiyaal Thaen poottum idhazhaal Deiva thirukkazhuthil Poonpootti seidha Porsaradu nanyaendhi Naanpotta kanakandaen Nallaai ….pen paavaai Male Part Kanaa kanden pen paavaai…..pavaaaaiiii.. Pen paaavaaii..
தமிழ்
பாடகர் : ஹரிச்சரன் இசை அமைப்பாளர் : அணில் ஸ்ரீனிவாசன் பாடல் ஆசிரியர் : வைரமுத்து ஆண் : கனாக்கண்டேன் பெண்பாவாய் கனாக்கண்டேன் நிலாக்கால இரவில் தென்றல் நீந்திவரும் பொழுதில் கனாக்....கண்டேன் ஆண் : வளர்முலைப் பெண்டிர் வரிசைத்தட் டேந்திவர தளர்நடை மாதர் தாங்கி வழியூர வளர்பிறைப் பெண்ணாள் வந்தென் இடம்பிடிக்கக் கிளர்மனம் களிகொள்ளக் கனாக்கண்டேன்... பெண்பாவாய் ஆண் : வாழை யிளம்பச்சை வரித்ததோர் ஆடையிலே தாழை நறுங்குழல் தையலாள் வீற்றிருக்க ஏழை ஒருவன் எழுகோடிப் பொன்கொண்ட பேழை கண்டதுபோல் பித்துற்றேன் பெண்பாவாய் ஆண் : உயிரே என்பேனோ உள்ளத்தில் வேர்கொண்ட பயிரே என்பேனோ பசிகண்டான் நிறைசெய்த வயிறே என்பேனோ வாழ்வினைக் கட்டுவித்த கயிறே என்பேனோ கருத்தழிந்தேன் பெண்பாவாய் ஆண் : எங்ஙனம் முன்னோர் இயற்றி வகுத்தாரோ அங்ஙனம் மேடை அமைத்த பந்தற்கீழ் எங்கணும் வாழ்த்தொலி எழுந்து நலம்பரப்பக் கங்கணம் கட்டக் கனாக்கண்டேன் பெண்பாவாய் ஆண் : வான்பூட்டும் வில்லின் வண்ணத் திருவுடையாள் தேன்பூட்டும் இதழாள் தெய்வத் திருக்கழுத்தில் பூண்பூட்டிச் செய்த பொற்சரடு நானேந்தி நாண்பூட்டக் கனாக்கண்டேன் நல்லாய் பெண்பாவாய் ஆண் : கனாக்கண்டேன் பெண்பாவாய்..பாவாய் பெண்பாவாய்....
Song information
Singer: Hari Charan
Music by: Anil Srinivasan
Lyrics by: Vairamuthu
Release information: From Naatpadu Theral 2 (2022) · Singer: Hari Charan · Lyricist: Vairamuthu · Music: Anil Srinivasan
Explore this song
- Singer: Hari Charan
- Film / album: Naatpadu Theral 2
- Composer: Anil Srinivasan
- Lyricist: Vairamuthu