Roman script

Singer : Hari Charan

Music by : Anil Srinivasan

Lyrics by : Vairamuthu

Male Part

Kanakanden pen paavaai ..

Kanaa kanden

Nilakaala iravil thendral

Neendhi varum poluthil

Kanaa..aaa kanden

Male Part

Valar mulai pendir

Varisai thataendhi vara

Thalar nadai maadhar

Thaangi vazhiyura

Valar pirai pennaal

Vandhen idam pidikka

Kilar manam kalikolla

Kanaa…kanden penpaavaai…

Male Part

Vaazhai ilam pachai

Variththor aadaiyilae

Thaazhai narunguzhal

Thaiyalaal veetrirukka

Ezhai oruvan ezhukodi

Pon konda

Pezhai kandathu pol

Pithuttren pen paavaai….

Male Part

Uyirae enbaeno

Ullathil ver konda

Payirae enbaeno

Pasi kandaan nirai seidha

Vayirae enbaeno

Vaazhvinai kattuvitha

Kayirae enabenoo

Karuthazhindhen pen paavaai…

Kanaaa kanden pen paavaai…

Male Part

Enganam munnor

Iyattri vagutharo

Anganam medai

Amaitha pandharkeezh

Enganam vaazhatholi

Elundhu nalam parappa

Kanganam katta

Kanaa kanden pen paavaai…..pavaaaaiiii..

Pen paaavaaii..

Male Part

Vaanpoottum villin

Vanna thiruvudaiyaal

Thaen poottum idhazhaal

Deiva thirukkazhuthil

Poonpootti seidha

Porsaradu nanyaendhi

Naanpotta kanakandaen

Nallaai ….pen paavaai

Male Part

Kanaa kanden pen paavaai…..pavaaaaiiii..

Pen paaavaaii..

தமிழ்

பாடகர் : ஹரிச்சரன்

இசை அமைப்பாளர் : அணில் ஸ்ரீனிவாசன்

பாடல் ஆசிரியர் : வைரமுத்து

ஆண் : கனாக்கண்டேன் பெண்பாவாய்

கனாக்கண்டேன்

நிலாக்கால இரவில் தென்றல்

நீந்திவரும் பொழுதில்

கனாக்....கண்டேன்

ஆண் : வளர்முலைப் பெண்டிர்

வரிசைத்தட் டேந்திவர

தளர்நடை மாதர் தாங்கி வழியூர

வளர்பிறைப் பெண்ணாள்

வந்தென் இடம்பிடிக்கக்

கிளர்மனம் களிகொள்ளக்

கனாக்கண்டேன்... பெண்பாவாய்

ஆண் : வாழை யிளம்பச்சை

வரித்ததோர் ஆடையிலே

தாழை நறுங்குழல் தையலாள் வீற்றிருக்க

ஏழை ஒருவன்

எழுகோடிப் பொன்கொண்ட

பேழை கண்டதுபோல்

பித்துற்றேன் பெண்பாவாய்

ஆண் : உயிரே என்பேனோ

உள்ளத்தில் வேர்கொண்ட

பயிரே என்பேனோ

பசிகண்டான் நிறைசெய்த

வயிறே என்பேனோ

வாழ்வினைக் கட்டுவித்த

கயிறே என்பேனோ

கருத்தழிந்தேன் பெண்பாவாய்

ஆண் : எங்ஙனம் முன்னோர்

இயற்றி வகுத்தாரோ

அங்ஙனம் மேடை அமைத்த பந்தற்கீழ்

எங்கணும் வாழ்த்தொலி

எழுந்து நலம்பரப்பக்

கங்கணம் கட்டக்

கனாக்கண்டேன் பெண்பாவாய்

ஆண் : வான்பூட்டும் வில்லின்

வண்ணத் திருவுடையாள்

தேன்பூட்டும் இதழாள்

தெய்வத் திருக்கழுத்தில்

பூண்பூட்டிச் செய்த

பொற்சரடு நானேந்தி

நாண்பூட்டக் கனாக்கண்டேன்

நல்லாய் பெண்பாவாய்

ஆண் : கனாக்கண்டேன் பெண்பாவாய்..பாவாய்

பெண்பாவாய்....

Song information

Singer: Hari Charan

Music by: Anil Srinivasan

Lyrics by: Vairamuthu

Release information: From Naatpadu Theral 2 (2022) · Singer: Hari Charan · Lyricist: Vairamuthu · Music: Anil Srinivasan

Explore this song