Roman script

Singer : K. J. Yesudas

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male Part

Kakangal parandhaalum

Megangal midhandhaalum

Aagayam azhuku aagamal irukku

Maaradhu ennaalum ooooho

Male Part

Unmaikku yaarum

Poosattum saayam

Ondrukku nooraai

Pesattum oorum

Male Part

Kakangal parandhaalum

Megangal midhandhaalum

Aagayam azhuku aagamal irukku

Maaradhu ennaalum ..

Chorus

Humming….

Male Part

Vindhai idhu thaan

Thandhaikku edhirae

Vazhakkaada magal thunindhaal

Vairakal indru thappugal seidhu

Uppukal aanadhu endraal

Male Part

Yaar meedhu

Kuttrangal solla

Idhu vidhiyandri

Ver ondrum alla

Male Part

Dharmangal ingae

Marmangal aanaal

Deivathai koodi

Thandikka naerum

Male Part

Kakangal parandhaalum

Megangal midhandhaalum

Aagayam azhuku aagamal irukku

Maaradhu ennaalum..

Male Part

Seedhai nenjil sreeraman meedhu

Sandhegam kidiyadhu

Saayadhu imayam

Puyal veesum samayam

Endrenni vaazhndhidum maadhu

Male Part

Aanaalum kanneeril aadum

Ullam alai paaindhu

Nilaiyindri oodum oo

Male Part

Natpukku kooda

Karppingu undu

Niram maari pochu

Adhu dhanae indru

Male Part

Sattam saatchi

Sandharppam parthu

Mandrangal theerpeluthum

Vaai varthai ellaam

Kaikorthu nindraal

Unmaigal oomaigal aagum

Male Part

Nesangal paasangal saerum

Naalu nenjathil thunbathin baaram

Male Part

Nool kondu aadum

Bommaigal polae

Nool mattum

Devan kaigalin melae

Male Part

Kakangal parandhaalum

Megangal midhandhaalum

Aagayam azhuku aagamal irukku

Adhu pola vilangattumae

Ingae nyaayangal jeyikattumae

Ingae nyaayangal jeyikattumae

Ingae nyaayangal jeyikattumae

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : காகங்கள் பறந்தாலும்

மேகங்கள் மிதந்தாலும்

ஆகாயம் அழுக்கு ஆகாமல் இருக்கு

மாறாது எந்நாளும் ஓஓஓஹ்

ஆண் : உண்மைக்கு யாரும் பூசட்டும் சாயம்

ஒன்றுக்கு நூறாய் பேசட்டும் ஊரும்

ஆண் : காகங்கள் பறந்தாலும்

மேகங்கள் மிதந்தாலும்

ஆகாயம் அழுக்கு ஆகாமல் இருக்கு

மாறாது எந்நாளும் ஓஓஓஹ்…

ஆண் : விந்தை இதுதான் தந்தைக்கு எதிரே

வழக்காட மகள் துணிந்தாள்

வைரக்கல் இன்று தப்புக்கள் செய்து

உப்புக்கல் ஆனது என்றாள்

ஆண் : யார் மீது குற்றங்கள் சொல்ல

இது விதியன்றி வேறொன்றும் அல்ல

தர்மங்கள் இங்கே மர்மங்களானால்

தெய்வத்தை கூட தண்டிக்க நேரும்

ஆண் : காகங்கள் பறந்தாலும்

மேகங்கள் மிதந்தாலும்

ஆகாயம் அழுக்கு ஆகாமல் இருக்கு

மாறாது எந்நாளும் ஓஓஓஹ்

ஆண் : சீதை நெஞ்சில் ஸ்ரீராமன் மீது

சந்தேகம் கிடையாது

சாயாது இமயம் புயல் வீசும் சமயம்

என்றெண்ணி வாழ்ந்திடும் மாது

ஆண் : ஆனாலும் கண்ணீரில் ஆடும் உள்ளம்

அலை பாய்ந்து நிலையின்றி ஓடும் ஓஓ

நட்புக்கு கூட கற்பிங்கு உண்டு

நிறம் மாறி போச்சு அதுதானே இன்று

ஆண் : சட்டம் சாட்சி சந்தர்ப்பம் பார்த்து

மன்றங்கள் தீர்ப்பெழுதும்

வாய் வார்த்தை எல்லாம்

கைக்கோர்த்து நின்றால்

உண்மைகள் ஊமைகள் ஆகும்

ஆண் : நேசங்கள் பாசங்கள் சேரும்

நாலு நெஞ்சத்தில் துன்பத்தின் பாரம்

நூல் கொண்டு ஆடும் பொம்மைகள் போலே

நூல் மட்டும் தேவன் கைகளின் மேலே

ஆண் : காகங்கள் பறந்தாலும் மேகங்கள் மிதந்தாலும்

ஆகாயம் அழுக்கு ஆகாமல் இருக்கு

அதுபோல விளங்கட்டுமே இங்கே

நியாயங்கள் ஜெயிக்கட்டுமே

ஆண் : இங்கே நியாயங்கள் ஜெயிக்கட்டுமே

இங்கே நியாயங்கள் ஜெயிக்கட்டுமே

இங்கே நியாயங்கள் ஜெயிக்கட்டுமே

Song information

Singer: K. J. Yesudas

Music by: Shankar Ganesh

Lyrics by: Vaali

Release information: From Nyayangal Jeyikkattum (1990) · Singer: K. J. Yesudas · Lyricist: Vaali · Music: Shankar Ganesh

Explore this song