Roman script

Singer : P. Susheela

Music by : Vijaya Bhaskar

Female Part

Kaalam pala kaaththirunthom

Kanna perumaanae

Karpanaiyil vaazhnthirunthom

Kanna perumaanae

Kaalam pala kaaththirunthom

Kanna perumaanae

Karpanaiyil vaazhnthirunthom

Kanna perumaanae

Female Part

Kavalukku vanthu nindraai

Kanna perumaanae

Kai niraiya selvam thanthaai

Kanna perumaanae

Female Part

Kaalam pala kaaththirunthom

Kanna perumaanae

Karpanaiyil vaazhnthirunthom

Kanna perumaanae

Female Part

Ooraayiram kodi uyarnthaalum unnai

Oru naalum maravaamal pani seivom kannaa

Thondraamal thondri parisaaa vanthaai

Sugamaana vaazhvondru arul seithaai mannaa

Female Part

Aagaayam ettum vannam

Pugazh vantha pothum

Agangaaram endrumillai

Panivundu kannaa

Female Part

Kavalukku vanthu nindraai

Kanna perumaanae

Kai niraiya selvam thanthaai

Kanna perumaanae

Female Part

Paaruvaththil dheivangal tharum ennumpothu

Paranthaaman arulindri nalvaazhvu yaedhu

Oor vanthu uravendru uravaadum neram

Orr sollil adangaathu nee thantha vaazhvu

Female Part

Maanikka panthalittu manai kattinaalum

Kaanikkai unakkundu kannaana kannaa

Female Part

Kavalukku vanthu nindraai

Kanna perumaanae

Kai niraiya selvam thanthaai

Kanna perumaanae

Female Part

Thaayendrum saeyendrum santhosa paattu

Thanthaikku nee thantha nalvaakku seettu

Pattaadai nagaiyendru pillaikku pottu

Paarkkindra suganthannai nilaiyaakki kaattu

Female Part

Maangalyam thantha deivam pallaandu vaazha

Mangaatha arul vendum navaneedha kannaa

Female Part

Kaalam pala kaaththirunthom

Kanna perumaanae

Karpanaiyil vaazhnthirunthom

Kanna perumaanae

Female Part

Kavalukku vanthu nindraai

Kanna perumaanae

Kai niraiya selvam thanthaai

Kanna perumaanae….

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர்

பெண் : காலம் பல காத்திருந்தோம்

கண்ணப் பெருமானே

கற்பனையில் வாழ்ந்திருந்தோம்

கண்ணப் பெருமானே

காலம் பல காத்திருந்தோம்

கண்ணப் பெருமானே

கற்பனையில் வாழ்ந்திருந்தோம்

கண்ணப் பெருமானே

பெண் : காவலுக்கு வந்து நின்றாய்

கண்ணப் பெருமானே

கை நிறைய செல்வம் தந்தாய்

கண்ணப் பெருமானே

பெண் : காலம் பல காத்திருந்தோம்

கண்ணப் பெருமானே

கற்பனையில் வாழ்ந்திருந்தோம்

கண்ணப் பெருமானே

பெண் : ஓராயிரம் கோடி உயர்ந்தாலும் உன்னை

ஒருநாளும் மறவாமல் பணி செய்வோம் கண்ணா

தோன்றாமல் தோன்றி பரிசாக வந்தாய்

சுகமான வாழ்வொன்று அருள் செய்தாய் மன்னா

பெண் : ஆகாயம் எட்டும் வண்ணம்

புகழ் வந்த போதும்

அகங்காரம் என்றுமில்லை

பணிவுண்டு கண்ணா

பெண் : காவலுக்கு வந்து நின்றாய்

கண்ணப் பெருமானே

கை நிறைய செல்வம் தந்தாய்

கண்ணப் பெருமானே

பெண் : பருவத்தில் தெய்வங்கள் தரும் எண்ணும்போது

பரந்தாமன் அருளின்றி நல்வாழ்வு ஏது

ஊர் வந்து உறவென்று உறவாடும் நேரம்

ஓர் சொல்லில் அடங்காது நீ தந்த வாழ்வு

பெண் : மாணிக்கப் பந்தலிட்டு மனைக் கட்டினாலும்

காணிக்கை உனக்குண்டு கண்ணான கண்ணா

பெண் : காவலுக்கு வந்து நின்றாய்

கண்ணப் பெருமானே

கை நிறைய செல்வம் தந்தாய்

கண்ணப் பெருமானே

பெண் : தாயென்றும் சேயென்றும் சந்தோஷப் பாட்டு

தந்தைக்கு நீ தந்த நல்வாக்குச் சீட்டு

பட்டாடை நகையென்று பிள்ளைக்கு போட்டு

பார்க்கின்ற சுகந்தன்னை நிலையாக்கிக் காட்டு

பெண் : மாங்கல்யம் தந்த தெய்வம் பல்லாண்டு வாழ

மங்காத அருள் வேண்டும் நவநீதக் கண்ணா

பெண் : காலம் பல காத்திருந்தோம்

கண்ணப் பெருமானே

கற்பனையில் வாழ்ந்திருந்தோம்

கண்ணப் பெருமானே

பெண் : காவலுக்கு வந்து நின்றாய்

கண்ணப் பெருமானே

கை நிறைய செல்வம் தந்தாய்

கண்ணப் பெருமானே........

Song information

Singer: P. Susheela

Music by: Vijaya Bhaskar

Release information: From Aan Pillai Singam (1975) · Lyricist: Kannadasan

Explore this song