Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Chorus Haa…aaa….aaa…aaa…aaa…aaa….aa… Haaa….aaa…aaaa…aaa…aaa…. Male Part Kaadhal magaraani Kavidhai poo virithaal Pudhu kavidhai poo virithu Kanavil thaen thelithaal Muthu pol sirithaal Mettu pol malarndhaal Vizhiyaal ival kanai thoduthaal Male Part Indha kaadhal magaraani Kavidhai poo virithaal Pudhu kavidhai poo virithu Kanavil thaen thelithaal Male Part Poovai nee poo madal Poo udal thaen kadal Thaen kadalil dhinamae Kulithaal magizhven Female Part Maan vizhi yengudhu Maiyalum yerudhu Poongodiyai pani pol Medhuvaai thazhuvu Male Part Kannae undhan koondhal oram Kangal moodi thoongum neram Female Part Inbam kodi oonjal aadum Ullam pogum oorvalam Male Part Kaadhal magaraani Kavidhai poo virithaal Chorus Hmmm….mmm…mmm…mm… Hmm mmm mmm mmm mmm mmm Female Part Panjanai koodathil Paal nilaa kaayudhae Naan enaiyae marandhen Kanavil midhandhen Male Part Un muga dheebathil Oviyam minnudhae Un azhagaal Iravai pagalaai arindhen Female Part Mannil ulla inbam yaavum Ingae indru naamum kaanbom Male Part Anbae andha dhevaloga Sorgam ingae thaeduvom Female Part Kaadhal yuvaraajaa Kavidhai poo virithaan Pudhu kavidhai poo virithu Kanavil thaen thelithaan Muthu pol eduthaan Thottu thaan anaithaan Vizhiyaal ivan kanai thoduthaan Indha kaadhal yuvaraajaa Kavidhai poo virithaan Male Part Pudhu kavidhai poo virithu Kanavil thaen thelithaal
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஹா.....ஆஅ.....ஆஅ....ஆ.....ஆஅ....ஆஅ....ஆ..... ஹா.....ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ...... ஆண் : காதல் மகராணி கவிதை பூ விரித்தாள் புதுக் கவிதை பூ விரித்து கனவில் தேன் தெளித்தாள் முத்துப் போல் சிரித்தாள் மொட்டுப் போல் மலர்ந்தாள் விழியால் இவள் கணை தொடுத்தாள் ஆண் : இந்தக் காதல் மகராணி கவிதை பூ விரித்தாள் புதுக் கவிதை பூ விரித்து கனவில் தேன் தெளித்தாள் ஆண் : பூவை நீ பூ மடல் பூ உடல் தேன் கடல் தேன் கடலில் தினமே குளித்தால் மகிழ்வேன்... பெண் : மான் விழி ஏங்குது மையலும் ஏறுது பூங்கொடியை பனி போல் மெதுவாய் தழுவு..... ஆண் : கண்ணே உந்தன் கூந்தல் ஓரம் கண்கள் மூடித் தூங்கும் நேரம் பெண் : இன்பம் கோடி ஊஞ்சல் ஆடும் உள்ளம் போகும் ஊர்வலம் ஆண் : காதல் மகராணி கவிதை பூ விரித்தாள் குழு : ஹ்ம்ம்.....ம்ம்ம்.....ம்ம்ம்....ம்ம்.... ஹ்ம்ம்.....ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பெண் : பஞ்சணை கூடத்தில் பால் நிலா காயுதே நான் எனையே மறந்தேன் கனவில் மிதந்தேன் ஆண் : உன் முக தீபத்தில் ஓவியம் மின்னுதே உன் அழகால் இரவைப் பகலாய் அறிந்தேன் பெண் : மண்ணில் உள்ள இன்பம் யாவும் இங்கே இன்று நாமும் காண்போம் ஆண் : அன்பே அந்த தேவலோக சொர்க்கம் இங்கே தேடுவோம் பெண் : காதல் யுவராஜா கவிதை பூ விரித்தான் புதுக் கவிதை பூ விரித்து கனவில் தேன் தெளித்தான் முத்துப் போல் எடுத்தான் தொட்டுத்தான் அணைத்தான் விழியால் இவன் கணை தொடுத்தான் இந்தக் காதல் யுவராஜா கவிதை பூ விரித்தான் ஆண் : புதுக் கவிதை பூ விரித்து கனவில் தேன் தெளித்தாள்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Kadhal Parisu (1987) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Kadhal Parisu
- Composer: Ilayaraja