Roman script
Singer : Ilayaraja
Music by : Ilayaraja
Male Part
Jeevanae jeevanae
Engu ponaaiyo
Ketkudhae un kural
Neril vaaraiyo
Male Part
Kangalil un mugam
Enthan mun thondrudhe
Kaaladi thediyae
Paathaigal neeluthu
Naan oiynthidaamal thedi vandhu
Unnai cheruven…nnnn…
Male Part
Jeevanae jeevanae
Engu ponaaiyo
Ketkudhae un kural
Neril vaaraiyoo…oo…
Male Part
Deepam ena
Suzhalum vizhi chudaroli
Unai kaatrinilum
Anaiya vida maatten
Male Part
Uyirukkullae
Uyir kalandha uyir oliyae
Unai oru pozhudhum
Veliyil vida maaten
Male Part
Enakkul unnai thoonga veithu
Enadhu moochaal mooduven
Iravum pagalum vizhiththu irundhu
Unnai paarthae vaazhuven
Naan oiynthu oiynthu pogum podhum
Unnai theduven
Male Part
Jeevanae jeevanae
Engu ponaaiyo
Ketkudhae un kural
Neril vaaraiyo
Male Part
Karuvaraiyil
Urangum oru kuzhandhai ena
En idhaiyathilae
Unai chumandhu vaazhven
Male Part
Kadavul vandhu
Ethiril nindru kettaalum
Naan enai tharuven
Unnai thara maatten
Male Part
Kaalam nandrae endru aaga
Unnai kanden kanmani
Sogam indrae nindru poga
Vandhu serndhaai kanmani
Ithu kaadhal kaalam vaazhththum geetham
Engum ketkudhae…ae…
Male Part
Deviyae deviyae
Thendral thaalaatta
Sogamae theernthadhaal
Nenjil thaenoora
Male Part
Mayilgalin iruginaal
Un mugam varududhae
Kaadhalin amudhinai
Idhaiyaththaal paruguthae
Andha kaadhal devan aanai
Endru solvadhaaradi…eee…
Male Part
{Nanananana naaaanaaaaa
Naaana naa naa naa} (2)தமிழ்
பாடகர் : இளையராஜா
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஜீவனே ஜீவனே
எங்கு போனாயோ
கேட்குதே உன் குரல்
நேரில் வாராயோ
ஆண் : கண்களில் உன் முகம்
எந்தன் முன் தோன்றுதே
காலடி தேடியே
பாதைகள் நீளுது
நான் ஓய்ந்திடாமல் தேடி வந்து
உன்னை சேருவேன்...
ஆண் : ஜீவனே ஜீவனே
எங்கு போனாயோ
கேட்குதே உன் குரல்
நேரில் வாராயோ..ஓ...
ஆண் : தீபம் என
சுழலும் விழி சுடரொளி
உனை காற்றினிலும்
அனைய விட மாட்டேன்
ஆண் : உயிருக்குள்ளே
உயிர் கலந்த உயிர் ஒளியே
உனை ஒரு பொழுதும்
வெளியில் விட மாட்டேன்
ஆண் : எனக்குள் உன்னை தூங்க வைத்து
எனது மூச்சால் மூடுவேன்
இரவும் பகலும் விழித்து இருந்து
உன்னை பார்த்தே வாழ்வேன்
நான் ஓய்ந்து ஓய்ந்து போகும் போதும்
உன்னை தேடுவேன்
ஆண் : ஜீவனே ஜீவனே
எங்கு போனாயோ
கேட்குதே உன் குரல்
நேரில் வாராயோ
ஆண் : கருவறையில்
உறங்கும் ஒரு குழந்தை என
என் இதயத்திலே
உனை சுமந்து வாழ்வேன்
ஆண் : கடவுள் வந்து
எதிரில் நின்று கேட்டாலும்
நான் எனை தருவேன்
உன்னை தர மாட்டேன்
ஆண் : காலம் நன்றே என்று ஆக
உன்னை கண்டேன் கண்மணி
சோகம் இன்றே நின்று போக
வந்து சேர்ந்தாய் கண்மணி
இது காதல் காலம் வாழ்த்தும் கீதம்
எங்கும் கேட்குதே..ஏ...
ஆண் : தேவியே தேவியே
தென்றல் தாலாட்ட
சோகமே தீர்ந்ததால்
நெஞ்சில் தேன் ஊற
ஆண் : மயில்களின் இறகினால்
உன் முகம் வருடுதே
காதலின் அமுதினை
இதயத்தால் பருகுதே
அந்த காதல் தேவன் ஆணை
என்று சொல்வதாரடி..இ....
ஆண் : {நானாநானா னா நானா
நானா னா னா னா} (2)Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Megha (2016) · Lyricist: Na. Muthu Kumar