Roman script
Singer : P. Susheela Music by : Ilayaraja Female Part Gangai aatril nindru kondu Neerai thedum pen maan ival Kannai moodi kaatchi thedi Innum engae selvaal ival Thannaiyae dhaan nambaadhu Povadhum yen pedhai maadhu Female Part Gangai aatril nindru kondu Neerai thedum pen maan ival Female Part Poi polavae Vesham mei pottadhu Andha meiyae poiyaai kondaal Orr aayiram Saatchi yaar koorinum Avai ellaam vesham endraal Female Part Than kann seidha maayam Penn mel enna paavam Than nenjodu theeraadhu sogam Ipporaattam eppodhu theerum ini Female Part Gangai aatril nindru kondu Neerai thedum pen maan ival Female Part Poi maanaiyae Andru mei maan ena Andha seethai pedhai aanaal Mei maanaiyae Indru poi maan ena Indha kodhai pedhai aanaal Female Part Poi nambikkai angae Veen sandhegam ingae Kan ovvondrum vevveru paarvai Endraalum yemaatram ondraanathu Female Part Gangai aatril nindru kondu Neerai thedum pen maan ival Kannai moodi kaatchi thedi Innum engae selvaal ival Thannaiyae dhaan nambaadhu Povadhum yen pedhai maadhu Female Part Gangai aatril nindru kondu Neerai thedum pen maan ival
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : கங்கை ஆற்றில் நின்று கொண்டு நீரைத் தேடும் பெண்மான் இவள் கண்ணை மூடி காட்சி தேடி இன்னும் எங்கே செல்வாள் இவள் தன்னையே தான் நம்பாது போவதும் ஏன் பேதை மாது பெண் : கங்கை ஆற்றில் நின்று கொண்டு நீரைத் தேடும் பெண்மான் இவள் பெண் : பொய் போலவே வேஷம் மெய் போட்டது அந்த மெய்யே பொய்யாய்க் கொண்டாள் ஓர் ஆயிரம் சாட்சி யார் கூறினும் அவை எல்லாம் வேஷம் என்றாள் பெண் : தன் கண் செய்த மாயம் பெண்மேல் என்ன பாவம் தன் நெஞ்சோடு தீராத சோகம் இப்போராட்டம் எப்போது தீரும் இனி பெண் : கங்கை ஆற்றில் நின்று கொண்டு நீரைத் தேடும் பெண்மான் இவள் பெண் : பொய் மானையே அன்று மெய் மான் என அந்த சீதை பேதை ஆனாள் மெய் மானையே இன்று பொய் மானென இந்த கோதை பேதை ஆனாள் பெண் : பொய் நம்பிக்கை அங்கே வீண் சந்தேகம் இங்கே கண் ஒவ்வொன்றும் வெவ்வேறு பார்வை என்றாலும் ஏமாற்றம் ஒன்றானது பெண் : கங்கை ஆற்றில் நின்று கொண்டு நீரைத் தேடும் பெண்மான் இவள் கண்ணை மூடி காட்சி தேடி இன்னும் எங்கே செல்வாள் இவள் தன்னையே தான் நம்பாது போவதும் ஏன் பேதை மாது பெண் : கங்கை ஆற்றில் நின்று கொண்டு நீரைத் தேடும் பெண்மான் இவள்
Song information
Singer: P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Aayiram Nilave Vaa (1983) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Aayiram Nilave Vaa
- Composer: Ilayaraja