Roman script

Singer : P. Jayachandran

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male Part

Eththanai avathaaran adadaa eththanai avathaaram

Eththanai avathaaran adadaa eththanai avathaaram

Iththanai siriya manithan dhinamum

Eduppathu dhasaavadhaaram

Iththanai siriya manithan dhinamum

Eduppathu dhasaavadhaaram

Male Part

Saththiyam pesum gunaththinilae

Avan krishnan avathaaram

Dharmaththai kaakkum nadippinilae

Avan sriraman avadhaaram

Male Part

Thaliyai maraiththu oorai yaeippathil

Koorma avadhaaram

Santharppam kidaiththaal ovvoru manithanum

Narasimma avadhaaram

Male Part

Eththanai avathaaran adadaa eththanai avathaaram

Male Part

Idam theriyaamal vizhuvathilae

Avan varaaha avadhaaram

Inam theriyaamal edhirpathilae

Avan vaaman avadhaaram

Male Part

Pidipadum pothu nazhuvuvathil

Avan machcha avadhaaram

Pirarai keduppathil eduppathuthaanae

Micha avadhaaram…..micha avadhaaram

Male Part

Eththanai avathaaran adadaa eththanai avathaaram

Male Part

Kannondru kaanum vaayondru pesum

Irattai vedamadaa

Kaattrulla pothae thoottrikkol enbathu

Manithanin paadamadaa

Male Part

Penn veri kondavan evanaalum

Thaayae thaaramadaa

Intha pedhaigalai naam ninaippathu kooda

Nenjukku paaramadaa

Male Part

Eththanai avathaaran adadaa eththanai avathaaram

Iththanai siriya manithan dhinamum

Eduppathu dhasaavadhaaram

Male Part

Eththanai avathaaran adadaa eththanai avathaaram

தமிழ்

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : எத்தனை அவதாரம் அடடா எத்தனை அவதாரம்

எத்தனை அவதாரம் அடடா எத்தனை அவதாரம்

இத்தனை சிறிய மனிதன் தினமும்

எடுப்பது தசாவதாரம்....

இத்தனை சிறிய மனிதன் தினமும்

எடுப்பது தசாவதாரம்....

ஆண் : சத்தியம் பேசும் குணத்தினிலே

அவன் கிருஷ்ணன் அவதாரம்

தர்மத்தை காக்கும் நடிப்பினிலே

அவன் ஸ்ரீராமன் அவதாரம்

ஆண் : தலையை மறைத்து ஊரை ஏய்ப்பதில்

கூர்ம அவதாரம்...

சந்தர்ப்பம் கிடைத்தால் ஒவ்வொரு மனிதனும்

நரசிம்ம அவதாரம்.....

ஆண் : எத்தனை அவதாரம் அடடா எத்தனை அவதாரம்

ஆண் : இடம் தெரியாமல் விழுவதிலே

அவன் வராஹ அவதாரம்

இனம் தெரியாமல் எதிர்ப்பதிலே

அவன் வாமன அவதாரம்

ஆண் : பிடிபடும் போது நழுவுவதில்

அவன் மச்ச அவதாரம்

பிறரை கெடுப்பதில் எடுப்பதுதானே

மிச்ச அவதாரம்....மிச்ச அவதாரம்

ஆண் : எத்தனை அவதாரம் அடடா எத்தனை அவதாரம்

ஆண் : கண்ணொன்று காணும் வாயொன்று பேசும்

இரட்டை வேடமடா

காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பது

மனிதனின் பாடமடா

ஆண் : பெண் வெறிக் கொண்டவன் எவனானாலும்

தாயே தாரமடா

இந்த பேதைகளை நாம் நினைப்பது கூட

நெஞ்சுக்கு பாரமடா...

ஆண் : எத்தனை அவதாரம் அடடா எத்தனை அவதாரம்

இத்தனை சிறிய மனிதன் தினமும்

எடுப்பது தசாவதாரம்....

ஆண் : எத்தனை அவதாரம் அடடா எத்தனை அவதாரம்

Song information

Singer: P. Jayachandran

Music by: K. V. Mahadevan

Lyrics by: Kannadasan

Release information: From Naan Nanethan (1980) · Singer: P. Jayachandran · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan

Explore this song