Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Music by : M. S. Vishwanathan

Male Part

Anaamikka anaamikka anaamikka

Female : En peyarae enakku maranthu pona

Indha vanantharathil ennai peyar solli

Azhaithathu yaar neeya… neeya

Female Part

Ennai oru minnal keettru

Endrallava ninaithirunthen

Nee eppadi adhil niranthira paai mudainthai

Chorus : …………………….

Male Part

Enadhu yaathiraiyil ella manidhargalum

Ellai karkalaai irukka

Nee mattum enakku paadhai aaginaai eppadi

Female Part

Paruva kaalangalaal pusttikkadha

En thottam

Un paarvaigalaal pushtithathae

Male Part

Thee vizhunthaalum urugaadha en nenju

Oru poo vizhundha podhu urugiyadhae

Chorus : …………………………..

Female Part

Indha kaadhal megam thaan

Manamennum erimalaiyil

Mazhai sindhi mazhai sindhi adhil

Ullaasa vanangalai urpathi seiyum

Male Part

Idhaya rojaa sediyil

Indha ottrai poo poothu vitaal

Aththanai mutkalum udhirnthu pogindrana

Female Part

Vaalibam yenthi paarkkum

Thiruvodum idhu thaan

Male : Vaalibam soodi paarkkum

Kreedamum idhu than

Chorus : …………………………..

Male Part

Mudhalil sapthangalukku

Artham sariyaai vilagavillai

Female : Ippodho maunathirukkum kooda

Urai ezhudha mudigirathu

Male Part

En kangal unnidam kaadhal pitchai

Ketkkum amudha surabigal

Amudha surabhigal pattini kidakalaama

Un paarvaiyai pichaiyidu hmmm pichaiyidu

Chorus

…………………………..

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : அனாமிகா அனாமிகா அனாமிகா

பெண் : என் பெயரே எனக்கு மறந்து போன

வனாந்தரத்தில் என்னை பெயர் சொல்லி

அழைத்தது யார் நீயா நீயா....

பெண் : என்னை ஒரு மின்னல் கீற்று

என்றல்லவா நினைத்திருந்தேன்

நீ எப்படி அதில் நிரந்தரப் பாய் முடைந்தாய்

குழு : லாலாலலலலலலலால்ல்லா....

ஆண் : எனது யாத்ரையில் எல்லா மனிதர்களும்

எல்லை கற்களாய் இருக்க

நீ மட்டும் எனக்கு பாதை ஆகினாய் எப்படி

பெண் : பருவ காலங்களால் புஷ்ட்டிக்காத

என் தோட்டங்கள்

உன் பார்வைகளால் புஷ்ட்டித்ததே...

ஆண் : தீ விழுந்தாலும் உருகாத என் நெஞ்சு

ஒரு பூ விழுந்த போது உருகியதே

குழு : லாலாலலலலலலலால்ல்லா..ஆஆஆஆ..

பெண் : இந்த காதல் மேகம்தான்

மனமென்னும் எரிமலையை

மழை சிந்தி மழை சிந்தி அதில்

உல்லாச வனங்களை உற்பத்தி செய்யும்

ஆண் : இதய ரோஜாச் செடியில்

இந்த ஒற்றைப் பூ பூத்துவிட்டால்

அத்தனை முட்களும் உதிர்ந்து போகின்றன

பெண் : வாலிபம் ஏந்தி பார்க்கும் திருவோடும் இதுதான்

ஆண் : வாலிபம் சூடி பார்க்கும் கிரீடமும் இதுதான்

குழு : லாலாலலல லலலலால்ல்லா.......லாலாலாலா

ஆண் : முதலில் சப்தங்களுக்கு

அர்த்தம் சரியாய் விலகவில்லை

பெண் : இப்போதோ மௌனத்திற்கும் கூட

உரை எழுத முடிகிறது

ஆண் : என் கண்கள் உன்னிடம் காதல் பிச்சை

கேட்கும் அமுதசுரபிகள்

அமுதசுரபிகள் பட்டினி கிடக்கலாமா

உன் பார்வையை பிச்சையிடு...பிச்சையிடு

குழு : லாலாலலலலலலலால்ல்லா..

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Music by: M. S. Vishwanathan

Release information: From Oru Indhiya Kanavu (1983) · Lyricist: Vairamuthu

Explore this song