Roman script

Singer : K. Jamuna Rani

Music by : K. V. Mahadevan

Female Part

Chinnajiru magalai

Siriththu vantha poo magalai

Thannanthani vazhiyae

Thavikka vittu sendraayae….

Female Part

Chinnajiru magalai

Siriththu vantha poo magalai

Thannanthani vazhiyae

Thavikka vittu sendraayae…..

Female Part

Chinnajiru magalai

Siriththu vantha poo magalai….

Female Part

{Aiyyaa un vaasalilae

Adiyeduththa naal mudhalaai

Kaiyodu vaiththirunthaai

Kangal endru kaaththirunthaai} (2)

Female Part

Paaleduththu koduththirunthaal

Pazhameduththu ootti vaiththaal

Paaleduththu koduththirunthaal

Pazhameduththu ootti vaiththaal

Female Part

Poo mudiththa karangalilae

Pon mugaththai pudhaiththu vaiththaal

Poo mudiththa karangalilae

Pon mugaththai pudhaiththu vaiththaal

Female Part

Aasai alaigalilae

Avaludan neenthi vanthaai

Aasai alaigalilae

Avaludan neenthi vanthaai

Paadhi varai vantha aiyyaa

Meedhi vazhi maranthu vittaai

Female Part

Thaayaarai uranga vittu

Thanaththai nee thottilittu

Thaayaarai uranga vittu

Thanaththai nee thottilittu

Female Part

Vaayaara pugazhvathellaam

Mayakkaththil kettiruppaal

Vaayaara pugazhvathellaam

Mayakkaththil kettiruppaal

Female Part

Neengalaa endrezhuvaal

Nerungi vanthu nindru kolvaal

Neengalaa endrezhuvaal

Nerungi vanthu nindru kolvaal

Thoongungal endru solvaal

Thottilukuththaan nadappaal

Female Part

Heehmm heehmm heehmm

Female Part

Ponnaasai kollavillai

Porulaasai padavumillai

Poovaasai vaiththirunthaal

Poovai nee pariththaayaa

Female Part

Engae nee marainthaalum

Entha vazhii sendraalum

Angellaam aval varuvaal

Aiyya unnai pin thodarvaal….

தமிழ்

பாடகி : கே. ஜமுனாராணி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : சின்னஞ் சிறு மகளை

சிரித்து வந்த பூமகளை

தன்னந்தனி வழியே

தவிக்க விட்டுச் சென்றாயே....

பெண் : சின்னஞ் சிறு மகளை

சிரித்து வந்த பூமகளை

தன்னந்தனி வழியே

தவிக்க விட்டுச் சென்றாயே....

பெண் : சின்னஞ் சிறு மகளை

சிரித்து வந்த பூமகளை......

பெண் : {ஐயா உன் வாசலிலே

அடியெடுத்த நாள் முதலாய்

கையோடு வைத்திருந்தாய்

கண்கள் என்று காத்திருந்தாய்} (2)

பெண் : பாலெடுத்துக் கொடுத்திருந்தாள்

பழமெடுத்து ஊட்டி வைத்தாள்

பாலெடுத்துக் கொடுத்திருந்தாள்

பழமெடுத்து ஊட்டி வைத்தாள்

பெண் : பூ முடித்த கரங்களிலே

பொன் முகத்தைப் புதைத்து வைத்தாள்

பூ முடித்த கரங்களிலே

பொன் முகத்தைப் புதைத்து வைத்தாள்

பெண் : ஆசை அலைகளிலே

அவளுடன் நீந்தி வந்தாய்

ஆசை அலைகளிலே

அவளுடன் நீந்தி வந்தாய்

பாதி வரை வந்த ஐயா

மீதி வழி மறந்து விட்டாய்

பெண் : பஞ்சணையில் நீயுறங்க

பக்கத்திலே அவளுறங்க

கொஞ்சி வரும் பிஞ்சு மகள் குரல் ஓடி வர

பஞ்சணையில் நீயுறங்க

பக்கத்திலே அவளுறங்க

பெண் : தாயாரை உறங்க விட்டு

தங்கத்தை நீ தொட்டிலிட்டு

தாயாரை உறங்க விட்டு

தங்கத்தை நீ தொட்டிலிட்டு

பெண் : வாயார புகழ்வதெல்லாம்

மயக்கத்தில் கேட்டிருப்பாள்

வாயார புகழ்வதெல்லாம்

மயக்கத்தில் கேட்டிருப்பாள்

பெண் : நீங்களா என்றெழுவாள்

நெருங்கி வந்து நின்று கொள்வாள்

நீங்களா என்றெழுவாள்

நெருங்கி வந்து நின்று கொள்வாள்

தூங்குங்கள் என்று சொல்வாள்

தொட்டிலுக்குத்தான் நடப்பாள்

பெண் : ஹீஹ்ம்ம் ஹீஹ்ம்ம் ஹீஹ்ம்ம்

பெண் : பொன்னாசைக் கொள்ளவில்லை

பொருளாசைப் படவுமில்லை

பூவாசை வைத்திருந்தாள்

பூவை நீ பறித்தாயா

பெண் : எங்கே நீ மறைந்தாலும்

எந்த வழி சென்றாலும்

அங்கெல்லாம் அவள் வருவாள்

ஐயா உன்னைப் பின் தொடர்வாள்.....

Song information

Singer: K. Jamuna Rani

Music by: K. V. Mahadevan

Release information: From Aasai Alaigal (1963) · Lyricist: Kannadasan

Explore this song