Roman script

Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja

Male Part

{Ammaa endrazhaikkaatha

Uyirillaiyae

Ammaavai vanangaathu uyarvillaiyae}(2)

Neril nindru pesum deivam

Pettra thaayandri verondru yethu….

Male Part

Ammaa endrazhaikkaatha

Uyirillaiyae

Ammaavai vanangaathu uyarvillaiyae

Male Part

Abiraami sivagaami

Karumaari magamaayi

Thirukkoyil deivangal neethaanamaa

Annaikku anraadam

Abhishaegam alangaaram

Purigindra siru thondan

Naanthaanammaa

Male Part

Porulodu pugazh vendum

Maganalla thaayae

Un arul vendum enakkendrum

Athu pothumae

Male Part

Aduththingu pirappondru

Amainthaalum naan unthan

Maganaaga pirakkindra

Varam vendumae

Athai neeyae tharuvaayae…

Male Part

Ammaa endrazhaikkaatha

Uyirillaiyae

Ammaavai vanangaathu uyarvillaiyae

Male Part

Pasum thangam puthu velli

Maanikkam manivairam

Ivai yaavum oru thaaikku

Eedaagumaa

Male Part

Vilai meethu vilai vaiththu

Kettaalum koduththaalum

Kadai thannil thaaianbu

Kidaikkaathammaa

Male Part

Eerainthu maathangal

Karuvodu enaiththaangi

Nee patta perum paadu

Ariven ammaa

Male Part

Eerezhu jenmangal

Eduththaalum uzhaiththaalum

Unakkingu naan patta

Kadan theerumaa

Unnaale piranthenae…ae…

Male Part

Ammaa endrazhaikkaatha

Uyirillaiyae

Ammaavai vanangaathu uyarvillaiyae

Neril nindru pesum deivam

Pettra thaayandri verondru yethu….

Male Part

{Ammaa endrazhaikkaatha

Uyirillaiyae

Ammaavai vanangaathu uyarvillaiyae} (2)

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : {அம்மா என்றழைக்காத

உயிரில்லையே

அம்மாவை வணங்காது உயர்வில்லையே} (2)

நேரில் நின்று பேசும் தெய்வம்

பெற்ற தாயன்றி வேறொன்று ஏது

ஆண் : அம்மா என்றழைக்காத

உயிரில்லையே

அம்மாவை வணங்காது உயர்வில்லையே

ஆண் : அபிராமி சிவகாமி

கருமாரி மகமாயி

திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா

அன்னைக்கு அன்றாடம்

அபிஷேகம் அலங்காரம்

புரிகின்ற சிறுத்தொண்டன்

நான்தானம்மா

ஆண் : பொருளோடு புகழ் வேண்டும்

மகனல்ல தாயே

உன் அருள் வேண்டும் எனக்கென்றும்

அது போதுமே

ஆண் : அடுத்திங்கு பிறப்பொன்று

அமைந்தாலும் நான் உந்தன்

மகனாகப் பிறக்கின்ற

வரம் வேண்டுமே

அதை நீயே தருவாயே...

ஆண் : அம்மா என்றழைக்காத

உயிரில்லையே

அம்மாவை வணங்காது உயர்வில்லையே

ஆண் : பசும் தங்கம் புது வெள்ளி

மாணிக்கம் மணிவைரம்

அவை யாவும் ஒரு தாய்க்கு

ஈடாகுமா

ஆண் : விலை மீது விலை வைத்துக்

கேட்டாலும் கொடுத்தாலும்

கடை தன்னில் தாயன்பு

கிடைக்காதம்மா

ஆண் : ஈரயைந்து மாதங்கள்

கருவோடு எனைத்தாங்கி

நீ பட்ட பெரும் பாடு

அறிவேனம்மா

ஆண் : ஈரேழு ஜென்மங்கள்

எடுத்தாலும் உழைத்தாலும்

உனக்கிங்கு நான் பட்ட

கடன் தீருமா

உன்னாலே பிறந்தேனே...ஏ...

ஆண் : அம்மா என்றழைக்காத

உயிரில்லையே

அம்மாவை வணங்காது உயர்வில்லையே

நேரில் நின்று பேசும் தெய்வம்

பெற்ற தாயன்றி வேறொன்று ஏது....

ஆண் : {அம்மா என்றழைக்காத

உயிரில்லையே

அம்மாவை வணங்காது உயர்வில்லையே} (2)

Song information

Singer: K. J. Yesudas

Music by: Ilayaraja

Release information: From Mannan (1992) · Lyricist: Vaali

Explore this song