Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Iniyavan

Lyrics by : Vairamuthu

Female Part

Aarirraaroo aariraaroo

Hmm mm hmm mm

Male Part

Aayiram thaan kavi sonnen

Azhagazhaga poi sonnen

Pethavalae un perumai

Oththavari sollalaiyae

Male Part

Kaathellaam magan paattu

Kaagithathil avan eluthu

Oorellaam magan pechu

Un keerthi ezhuthalaiyae

Male Part

Eluthavoo padikavo

Yelaadha thaai bakthi

Eluthi enna labaminnu

Ezhudhaama ponenoo

Male Part

Aayiram thaan kavi sonnen

Azhagazhaga poi sonnen

Pethavalae un perumai

Oththavari sollalaiyae

Male Part

Kadhakadhannu kalikindi

Kalikkullae kuzhi vetti

Karuppetti nallenna

Kalandhu tharuvaayae

Male Part

Thondaiyilae adhu irangum

Sugamaana ilanjoodu

Mandaiyila innum

Masamsannu nikkuthamma

Male Part

Varumaiyila naama patta

Valithanga maattaama

Penava naan eduthen

Prabanjam picherinjen

Male Part

Kalyanam naan senju

Kadhiyathu nikkayila

Petha appan chennai vandhu

Soth ezhuthi pona pinnae

Male Part

Anjaaru varusham

Un aasai mugam pakkaama

Pillai manam pithaachae

Petha manam kall aachae

Male Part

Paasam ulla velaiyilae

Kaasu panam koodalaiyaae

Kaasu vandha velaiyilae

Paasam vandhu seralaiyae

Male Part

Vaigaiyila oor muluga

Vallarum serndhezhuga

Kaipidiyaa kootivandhu

Karaiserthu vittavalae

Male Part

Amaaaaa

Enakkonnu aanadhunnaa

Unakku vera pillai undu

Unakkaedhum aanadhunna

Enakku veru thaaiyirukka

Enakku veru thaaiyirukka

Enakku veru thaaiyirukka..

Female Part

Aariraaroo

Ariraraaroo

தமிழ்

பாடகர் :  எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசை அமைப்பாளர் : இனியவன்

பாடல் ஆசிரியர் : வைரமுத்து

 பெண் : ஆரிராரோ ஆரிராரோ

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்

ஆண் : இனியவன் ஆயிரம்தான் கவிசொன்னேன்

அழகழகாப் பொய்சொன்னேன்

பெத்தவளே உன்பெருமை

ஒத்தவரி சொல்லலையே

ஆண் : காத்தெல்லாம் மகன் பாட்டு

காகிதத்தில் அவனெழுத்து

ஊரெல்லாம் மகன் பேச்சு

உன்கீர்த்தி எழுதலையே

ஆண் : எழுதவோ படிக்கவோ

ஏலாத தாய் பத்தி

எழுதி என்ன லாபமின்னு

எழுதாமப் போனேனோ

ஆண் : இனியவன் ஆயிரம்தான் கவிசொன்னேன்

அழகழகாப் பொய்சொன்னேன்

பெத்தவளே உன்பெருமை

ஒத்தவரி சொல்லலையே

ஆண் : கதகதன்னு களிகிண்டிக்

களிக்குள்ளே குழிவெட்டி

கருப்பட்டி நல்லெண்ண

கலந்து தருவாயே

ஆண் : தொண்டையில அது இறங்கும்

சுகமான இளஞ்சூடு

மண்டையில இன்னும்

மசமசன்னு நிக்குதம்மா

ஆண் : வறுமையில நாமபட்ட

வலிதாங்க மாட்டாம

பேனாவ நான்எடுத்தேன்

பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்

ஆண் : கல்யாணம் நான் செஞ்சு

கதியத்து நிக்கையிலே

பெத்த அப்பன் சென்னை வந்து

சொத்தெழுதிப் போனபின்னே

ஆண் : அஞ்சாறு வருஷம்

உன் ஆசை முகம் பாக்காம

பிள்ளை மனம் பித்தாச்சே

பெத்த மனம் கல்லாச்சே

ஆண் : பாசம் உள்ள வேளையிலே

காசு பணம் கூடலையே

காசு வந்த வேளையிலே

பாசம் வந்து சேரலையே

ஆண் : வைகையில ஊர்முழுக

வல்லூறும் சேர்ந்தழுக

கைப்பிடியாக் கூட்டிவந்து

கரைசேர்த்து விட்டவளே

ஆண் : அம்மா ...

எனக்கொண்ணு ஆனதுன்னா

உனக்கு வேற பிள்ளை உண்டு

உனக்கேதும் ஆனதுன்னா

எனக்கு வேற தாயிருக்கா?

எனக்கு வேற தாயிருக்கா?

எனக்கு வேற தாயிருக்கா?

பெண் : ஆரிராரோ ஆரிராரோ

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Iniyavan

Lyrics by: Vairamuthu

Release information: From Naatpadu Theral 2 (2022) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vairamuthu · Music: Iniyavan

Explore this song