Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Female Part

{Aalayam enbathu veedaagum

Aasai veithaal

Aanandha maaligai pol aagum

Sevai seidhaal} (2)

Vanna poovai allum kaiyil vaasam undu

Nalla sevai seiyum nenjil deivam undu

Female Part

Lalalalalalalaa…(2)

Sani dha pa ma ga ri

Ni dha pa ma ga ri sa

Child : Sani dha pa ma ga ri

Ni dha pa ma ga ri sa

Female Part

Kannazhagu pappa ..

Hahaaa

Un kaigalai kattu..

Hahaaa

Un kai paarthu aayiram ullam vaazhum

Chinna chinna raja..

Hahaaa

En aruginil vaada..

Hahaaa

Un mugam paarthu aayiram illam vaazhum

Female Part

Aalayam enbathu veedaagum

Aasai veithaal

Aanandha maaligai pol aagum

Sevai seidhaal

Female Part

{Kaagitha poovil vaasam illai

Rojaavai vaithaan

Kaadhal konda raaniyin pakkam

Raajavai vaithaen} (2)

Kannadi un ullam kallam illaa penn ullam

Unnai kandu uravaadum peadhai en ullam

Female Part

Andhi padum podhum

En azhagiya veedu

Pon oliyaalae maanikka vannam kattum

Vennilavu vandhu

En illathai kandu

Thaan vilaiyaada ooridam ennai ketkkum

Female Part

Lalalalalalalaa…(4)

Female Part

Kodi koduthu uravinarodu

Vaazhvadhu thaan inbam

Kooda irundhu paadhi

Unbadhu per inbam

Irai podum ullangal

Endrum vaazhum deepangal

Illai endru solladha

Thanga kinnangal

Female Part

Nallavar illam idhu

Palkazhai kazhagam

Idhu nadamaadum deivangal

Koodum sangam

Kalakalappaaga nalla olimayamaaga

Dhinam kalyaana veedena

Vaazhum illam

Female Part

Aalayam enbathu veedaagum

Aasai veithaal

Aanandha maaligai pol aagum

Sevai seidhaal

Vanna poovai allum kaiyil vaasam undu

Nalla sevai seiyum nenjil deivam undu

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர்  : எம்.எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : {ஆலயம் என்பது வீடாகும்

ஆசை வைத்தால்

ஆனந்த மாளிகை போலாகும்

சேவை செய்தால்} (2)

வண்ணப் பூவை அள்ளும் கையில் வாசம் உண்டு

நல்ல சேவை செய்யும் நெஞ்சில் தெய்வம் உண்டு

பெண் : லல்லல்லா லல்லல்லா..(2)

சனிதப மகரி நிதபமகரிச

குழந்தை : சனிதப மகரி நிதபமகரிச

பெண் : கண்ணழகு பாப்பா..ஹாஹா

உன் கைகளைக் காட்டு..ஹா ஹா

உன் கை பார்த்து ஆயிரம் உள்ளம் வாழும்

சின்ன சின்ன ராஜா..ஹா..ஹா

என் அருகினில் வாடா..ஹா..ஹா ..

உன் முகம் பார்த்து ஆயிரம் இல்லம் வாழும்

பெண் : ஆலயம் என்பது வீடாகும்

ஆசை வைத்தால்

ஆனந்த மாளிகை போலாகும்

சேவை செய்தால்

பெண் : {காகிதப் பூவில் வாசம் இல்லை

ரோஜாவை வைத்தேன்

காதல் கொண்ட ராணியின் பக்கம்

ராஜாவை வைத்தேன்} (2)

கண்ணாடி உன் உள்ளம் கள்ளம் இல்லாப் பெண் உள்ளம்

உன்னைக் கண்டு உறவாடும் பேதை என்னுள்ளம்

பெண் : அந்தி படும் போது என் அழகிய வீடு

பொன் ஒளியோடு மாணிக்க வண்ணம் காட்டும்

வெண்ணிலவு வந்து என் இல்லத்தைக் கண்டு

தன் விளையாட ஓரிடம் என்னைக் கேட்கும்

பெண் : லல்லல்லா லல்லல்லா

லல்லல்லா லல்லல்லா

லல்லல்லா லல்லல்லா

லல்லல்லா லல்லல்லா

பெண் : கோடி கொடுத்தும் உறவினரோடு

வாழ்வது தான் இன்பம்

கூட இருந்து பாதி கொடுத்து

உண்பது பேரின்பம்

இரை போடும் உள்ளங்கள்

என்றும் வாழும் தீபங்கள்

இல்லை என்று சொல்லாத

தங்கக் கிண்ணங்கள்

பெண் : நல்லவர் இல்லம் இது பல்கலைக் கழகம்

இது நடமாடும் தெய்வங்கள் கூடும் சங்கம்

கலகலப்பாக நல்ல ஒளிமயமாக

தினம் கல்யான வீடென வாழும் இல்லம்

பெண் : ஆலயம் என்பது வீடாகும்

ஆசை வைத்தால்

ஆனந்த மாளிகை போலாகும்

சேவை செய்தால்

வண்ணப் பூவை அள்ளும் கையில் வாசம் உண்டு

நல்ல சேவை செய்யும் நெஞ்சில் தெய்வம் உண்டு

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Vishwanathan

Lyrics by: Kannadasan

Release information: From Thamarai Nenjam (1968) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan

Explore this song