தமிழ்

வசீகரா

என் நெஞ்சினிக்க

உன் பொன் மடியில்

தூங்கினால் போதும்

அதே கணம்

என் கண்ணுறங்கா

முன் ஜென்மங்களின்

ஏக்கங்கள் தீரும்

வசீகரா

என் நெஞ்சினிக்க

உன் பொன் மடியில்

தூங்கினால் போதும்

அதே கணம்

என் கண்ணுறங்கா

முன் ஜென்மங்களின்

ஏக்கங்கள் தீரும்

நான் நேசிப்பதும்

சுவாசிப்பதும்

உன் தயவால் தானே

ஏங்குகிறேன்

ஏங்குகிறேன்

உன் நினைவால்

நானே நான்

அடை மழை வரும்

அதில் நனைவோமே

குளிர் காய்ச்சலோடு

சினேகம்

ஒரு போர்வைக்குள்

இரு தூக்கம்

குளு குளு பொய்கள் சொல்லி

என்னை வெல்வாய்

அது தெரிந்தும் கூட அன்பே

மனம் அதையேதான்

எதிர்பார்க்கும்

எங்கேயும் போகாமல்

தினம் வீட்டிலேயே

நீ வேண்டும்

சில சமயம்

விளையாட்டாய்

உன் ஆடைக்குளே

நான் வேண்டும்

வசீகரா

என் நெஞ்சினிக்க

உன் பொன் மடியில்

தூங்கினால் போதும்

அதே கணம்

என் கண்ணுறங்கா

முன் ஜென்மங்களின்

ஏக்கங்கள் தீரும்

தீரும் தீரும்

தினம் நீ குளித்ததும்

என்னைத் தேடி

என் சேலை

நுனியால் உந்தன்

தலை துடைப்பாயே

அது கவிதை

திருடன் போல்

பதுங்கியே

திடீர் என்று

பின்னாலிருந்து என்னை

நீ அணைப்பாயே

அது கவிதை

யாரேனும்

மணி கேட்டால்

அதை சொல்ல கூட

தெரியாதே

காதலெனும்

முடிவிலியில்

கடிகார நேரம்

கிடையாதே

வசீகரா

என் நெஞ்சினிக்க

உன் பொன் மடியில்

தூங்கினால் போதும்

அதே கணம்

என் கண்ணுறங்கா

முன் ஜென்மங்களின்

ஏக்கங்கள் தீரும்

நான் நேசிப்பதும்

சுவாசிப்பதும்

உன் தயவால் தானே

ஏங்குகிறேன்

ஏங்குகிறேன்

உன் நினைவால்

நானே நான்

Song information

படம்: மின்னலே (2001)

பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

இயற்றியவர்: தாமரை

Album: மின்னலே

Explore this song