தமிழ்
மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு சுவரம் தான் பாடுமோ பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு சுவரம் தான் பாடுமோ பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா நான் மறந்தே போயிட்டேன் மூச்சு விடாம பாடறேன்னு சொன்னீங்கள்ள இல்ல நானும் மறந்துட்டேன் சரணத்துல பாடறேன் பாருங்க வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமன்றி சந்தனமும் சங்க தமிழும் பொங்கிடும் வசந்தமும் சிந்தி வரும் பொங்கும் அமுதம் தங்கிடும் குமுதமும் கன்னி மகள் அருகில் இருந்தால் சுவைக்கும் கன்னி துணை இழந்தால் முழுதும் கசக்கும் விழியினில் மொழியினில் நடையினில் உடையினில் அதிசய சுகம் தரும் அனங்கிவள் பிறப்பிது தான் மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு சுவரம் தான் பாடுமோ முத்து மணி ரத்தினங்களும் கட்டிய பவளமும் கொத்து மலர் அற்புதங்களும் குவிந்த அதரமும் சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும் சுற்றி வர செய்யும் விழியும் சுந்தர மொழிகளும் எண்ணி விட மறந்தால் எதர்க்கோர் பிறவி இத்தனையும் இழந்தால் அவன் தான் துறவி முடி முதல் அடி வரை முழுவதும் சுகம் தரும் விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு சுவரம் தான் பாடுமோ பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு சுவரம் தான் பாடுமோ
Song information
படம்: கேளடி கண்மணி (1990)
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: பாவலர் வரதராசன்
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
Album: கேளடி கண்மணி
Explore this song
- Film / album: கேளடி கண்மணி
- Composer: இளையராஜா
- Lyricist: பாவலர் வரதராசன்
- Actor: எஸ். பி. பாலசுப்ரமணியம்
- Actor: ராதிகா
- Actor: ரமேஷ் அரவிந்த்
- Actor: அஞ்சு
- Actor: கீதா
- Actor: விவேக்
- Actor: நீனா
- Actor: ஜனகராஜ்
- Actor: பூர்ணம் விஸ்வநாதன்