தமிழ்

தானத் தந்த தானத் தந்த தனனா

தானத் தந்த தானத் தந்த தான தான தனனா ஆ ஆ ஆ

தந்த தன தான தான தான தான ன னனன ஆ ஆ ஆ

தந்த தன தான தான தான தான ன னனன ஆ ஆ ஆ

தென்றல் வந்து தீண்டும் போது

என்ன வண்ணமோ மனசுல...

திங்கள் வந்து காயும் போது

என்ன வண்ணமோ நினைப்புல...

வந்து வந்து போகுதம்மா

எண்ணமெல்லாம் வண்ணமம்மா...

எண்ணங்களுக்கு ஏத்தபடி

வண்ணமெல்லாம் மாறுமம்மா...

உண்மையம்மா

உள்ளத நானும் சொன்னேன்

பொன்னம்மா சின்ன கண்ணே...

தென்றல் வந்து தீண்டும் போது

என்ன வண்ணமோ மனசுல...

திங்கள் வந்து காயும் போது

என்ன வண்ணமோ நினைப்புல...

ஓஓஓ ஓஓஓ ஓஓஓ

ஓஓஓ ஓஓஓ ஓஓஓ

எவரும் சொல்லாமலே

பூக்களும் வாசம் வீசுது...

உறவும் இல்லாமலே

இரு மனம் ஏதோ பேசுது...

எவரும் சொல்லாமலே

குயில் எல்லாம் தேனா பாடுது...

எதுவும் இல்லாமலே

மனசெல்லாம் இனிப்பா இனிக்குது...

ஓட நீரோடை

இந்த உலகம் அது போல...

ஓடும் அது ஓடும்

இந்த காலம் அது போல...

நிலையா நில்லாது

நினைவில் வரும் நிறங்களே...

தென்றல் வந்து தீண்டும் போது

என்ன வண்ணமோ மனசுல...

ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஈரம் விழுந்தாலே

நிலத்திலே எல்லாம் துளிர்க்குது...

நேசம் பொறந்தாலே

உடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது...

ஆழம் விழுதாக

ஆசைகள் ஊஞ்சல் ஆடுது...

அலையும் அலைபோலே

அழகெல்லாம் கோலம் போடுது...

குயிலே குயிலினமே

அந்த இசையா கூவுதம்மா...

கிளியே கிளியினமே

அத கதையா பேசுதம்மா...

கதையாய் விடுகதையாய்

ஆவதில்லையே அன்பு தான்...

தென்றல் வந்து தீண்டும் போது

என்ன வண்ணமோ மனசுல...

திங்கள் வந்து காயும் போது

என்ன வண்ணமோ நினைப்புல...

வந்து வந்து போகுதம்மா

எண்ணமெல்லாம் வண்ணமம்மா...

எண்ணங்களுக்கு ஏத்தபடி

வண்ணமெல்லாம் மாறுமம்மா...

உண்மையிலே உள்ளது என்ன என்ன

வண்ணங்கள் என்ன என்ன...

தென்றல் வந்து தீண்டும் போது

என்ன வண்ணமோ மனசுல...

திங்கள் வந்து காயும் போது

என்ன வண்ணமோ நினைப்புல...

Song information

படம்: அவதாரம் (1995)

இசை: இளையராஜா

பாடலாசிரியர்: வாலி

பாடியவர்கள்: இளையராஜா, எஸ். ஜானகி

Album: அவதாரம்

Explore this song