தமிழ்

ஆண் : தேனே தென்பாண்டி மீனே

இசை தேனே இசைத்தேனே

ஆண் : தேனே தென்பாண்டி மீனே

இசை தேனே இசைத்தேனே

மானே இள மானே

ஆண் : நீதான் செந்தாமாரை ஆரீராரோ

நெற்றி மூன்றாம் பிறை தாலே லே லோ

ஆண் : தேனே தென்பாண்டி மீனே

இசை தேனே இசைத்தேனே

மானே இள மானே

ஆண் : மாலை வெயில் வேளையில்

மதுரை வரும் தென்றலே

ஆடி மாதம் வைகையில்

ஆடி வரும் வெள்ளமே

ஆண் : நஞ்சை புஞ்சை நாளும் உண்டு

நீயும் அதை ஆளலாம்

மாமன் வீட்டு மயிலும் உண்டு

மாலை கட்டிப் போடலாம்

ராஜா நீதான்

நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை

ஆண் : தேனே தென்பாண்டி மீனே

இசை தேனே இசைத்தேனே

ஆண் : பால் கொடுத்த நெஞ்சிலே

ஈரம் இன்னும் காயலே

பால் மனத்தைப் பார்க்கிறேன்

பிள்ளை உந்தன் வாயிலே

ஆண் : பாதை கொஞ்சம்

மாறிப் போனால்

பாசம் விட்டுப் போகுமா

தாழம் பூவை தூர வைத்தால்

வாசம் விட்டு போகுமா

ராஜா நீதான்

நான் எடுத்த முத்துப் பிள்ளை

ஆண் : தேனே தென்பாண்டி மீனே

இசை தேனே இசைத்தேனே

மானே இள மானே

ஆண் : நீதான் செந்தாமாரை ஆரீராரோ

நெற்றி மூன்றாம் பிறை தாலே லே லோ

ஆண் : தேனே தென்பாண்டி மீனே

இசை தேனே இசைத்தேனே

மானே இள மானே

Song information

படம்: உதய கீதம் (1985)

பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசை: இளையராஜா

இயற்றியவர்: வாலி

Album: உதய கீதம்

Explore this song