தமிழ்

ஆண்: ஏழு வண்ணத்தில்

கன்னிப் பூவைக் கண்டேனே

கண்கள் மூடாமல்

அதைக் காத்து நிற்பேனே

ஆண்: ஏழு வண்ணத்தில்

கன்னிப் பூவைக் கண்டேனே

கண்கள் மூடாமல்

அதைக் காத்து நிற்பேனே

ஆண்: நடக்கும் திசை பார்த்துத் தான்

நிழல் போல் நான் வருவேன்

தினம் பறக்கும் காற்றாடியே

நூலாக நான் இருப்பேன்

வாலாட்டி நானே ரசிப்பேன்

ஆண்: ஏழு வண்ணத்தில்

கன்னிப் பூவைக் கண்டேனே

கண்கள் மூடாமல்

அதைக் காத்து நிற்பேனே

ஆண்: ஏழு வண்ணத்தில்

கன்னிப் பூவைக் கண்டேனே

கண்கள் மூடாமல்

அதைக் காத்து நிற்பேனே

ஆண்: மூங்கில் போல வாழ்ந்திருந்தேன்

மரங்கொத்தி போல வந்து

புல்லாங்குழல் செய்து விட்டாய்

என்னை நீயே

ஆண்: தோட்டம் விட்டு ஓடி வந்து

எந்தன் வீட்டு ஜன்னல் உள்ளே

தொட்டிச் செடி ஆகி விட்டாய்

பெண்ணே நீயே

ஆண்: கண்களின் மேலிலே

கனவைப் பார்க்கிறேன்

கண்ணன் போல் இருப்பேன்

காத்துக் கிடப்பேன்

உந்தன் தேரோட்டி நானடி

ஆண்: ஏழு வண்ணத்தில்

கன்னிப் பூவைக் கண்டேனே

கண்கள் மூடாமல்

அதைக் காத்து நிற்பேனே

ஏழு வண்ணத்தில்

கன்னிப் பூவைக் கண்டேனே

கண்கள் மூடாமல்

அதைக் காத்து நிற்பேனே

ஆண்: நான் ரசிக்கும் நாயகியே

நாகரிக தேவதையே

ரவிவர்மன் தூரிகையே

நீயே நீயே

பெண்: ஆஆஆ

ஆண்:கண்ணுக்குள்ளே உன்னை வைத்து

கண்கள் ரெண்டை மூடிக் கொண்டு

கண்ணாமூச்சி ஆட வேண்டும்

வா வா நீயே

பெண்: ஆஆஆ

ஆண்:கண்ணாடி மாளிகை

கை வீசி போகுதே

உன்னோட அழகை

பாடல் எழுத

தமிழில் வார்த்தைகள் தேடினேன்

ஆண்:ஏழு வண்ணத்தில்

கன்னிப் பூவைக் கண்டேனே

கண்கள் மூடாமல்

அதைக் காத்து நிற்பேனே

ஆண்:ஏழு வண்ணத்தில்

கன்னிப் பூவைக் கண்டேனே

கண்கள் மூடாமல்

அதைக் காத்து நிற்பேனே

ஆண்:நடக்கும் திசை பார்த்துத் தான்

நிழல் போல் நான் வருவேன் தினம்

பறக்கும் காற்றாடியே

நூலாக நான் இருப்பேன்

வாலாட்டி நானே ரசிப்பேன்

ஆண்:ஏழு வண்ணத்தில்

கன்னிப் பூவைக் கண்டேனே

கண்கள் மூடாமல்

அதைக் காத்து நிற்பேனே

ஆண்:ஏழு வண்ணத்தில்

கன்னிப் பூவைக் கண்டேனே

கண்கள் மூடாமல்

அதைக் காத்து நிற்பேனே

Song information

படம்: ஜக்குபாய் (2010)

பாடியவர்கள்: ஹரிஹரன், மகேஷ்வரி ராணி

இசை: ரஃபி

பாடலாசிரியர்: கபிலன்

Album: ஜக்குபாய்

Explore this song