தமிழ்

பெண்: ஆஆஆ ஆஆஆ

ஆஆஆ ஆஆஆ

ம்ம்ம் ம்ம்ம்

ம்ம்ம் ம்ம்ம்

ஆண்: என்னைத் தாலாட்டும்

சங்கீதம் நீயல்லவா

உன்னைச் சீராட்டும்

பொன் ஊஞ்சல் நான் அல்லவா

ஆண்: உன்னை மழை என்பதா?

இல்லை தீ என்பதா?

அந்த ஆகாயம் நிலம் காற்று

நீ என்பதா?

உன்னை நான் என்பதா?

பெண்: என்னைத் தாலாட்டும்

சங்கீதம் நீயல்லவா

உன்னைச் சீராட்டும்

பொன் ஊஞ்சல் நான் அல்லவா

பெண்: ஆஆஆ ஆஆஆ

ஆஆஆ ஆஆஆ

ஆண்: நதியாக நீயும்

இருந்தாலே நானும்

நீயிருக்கும் தூரம் வரை

கரையாகிறேன்

பெண்: இரவாக நீயும்

நிலவாக நானும்

நீயிருக்கும் நேரம் வரை

உயிர் வாழ்கிறேன்

ஆண்: முதல் நாள் என் மனதில்

விதையாய் நீ இருந்தாய்

மறுநாள் பார்கையிலே

வனமாய் மாறிவிட்டாய்

நாடித் துடிப்போடு

நடமாடி நீ வாழ்கிறாய்

நெஞ்சில் நீ வாழ்கிறாய்

பெண்: என்னைத் தாலாட்டும்

சங்கீதம் நீயல்லவா

உன்னைச் சீராட்டும்

பொன் ஊஞ்சல் நான் அல்லவா

பெண்: பூலோகம் ஓர் நாள்

காற்றின்றி போனால்

எந்தன் உயிர்

உந்தன் மூச்சு காற்றாகுமே

ஆண்: ஆகாயம் ஓர்நாள்

விடியாமல் போனால்

எந்தன் ஜீவன்

உந்தன் கையில் விளக்காகுமே

பெண்: அன்பே நான் இருந்தேன்

வெள்ளைக் காகிதமாய்

என்னில் நீ வந்தாய்

பேசும் ஓவியமாய்

தீபம் நீயென்றால்

அதில் நானே திரி ஆகிறேன்

தினம் திரியாகிறேன்

ஆண்: என்னைத் தாலாட்டும்

சங்கீதம் நீயல்லவா

உன்னைச் சீராட்டும்

பொன் ஊஞ்சல் நான் அல்லவா

ஆண்: உன்னை மழை என்பதா?

இல்லை தீ என்பதா?

அந்த ஆகாயம்

நிலம் காற்று நீ என்பதா?

உன்னை நான் என்பதா?

பெண்: என்னைத் தாலாட்டும்

சங்கீதம் நீயல்லவா

உன்னைச் சீராட்டும்

பொன் ஊஞ்சல் நான் அல்லவா

Song information

படம்: உன்னை நினைத்து (2002)

இசை: சிற்பி

பாடலாசிரியர்: பா. விஜய்

பாடியவர்கள்: உன்னி மேனன், சுஜாதா

Album: உன்னை நினைத்து

Explore this song